Latest Updates
-
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்..
வாஸ்துப்படி வீட்டின் இந்த இடத்துல மருந்துகளை வெக்காதீங்க.. இல்ல அடிக்கடி நோய்வாய்ப்படுவீங்க..
Vastu Tips In Tamil: தற்போதைய மோசமான வாழ்க்கை முறையால் நாம் பல நோய்களுக்கு பலியாகிக் கொண்டிருக்கிறோம். முந்தைய காலத்தில் மக்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.
ஆனால் தற்போது ஆரோக்கியமாக இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. ஒரு வீட்டை எடுத்துக் கொண்டால், அந்த குடும்பத்தில் ஒருவராவது தினமும் மருந்து மாத்திரைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள்.

அப்படி எடுக்கும் மருந்து மாத்திரைகளை நாம் சரியான இடத்தில் வைத்து பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், அதுவே வாஸ்து தோஷத்தை ஏற்படுத்தி, ஆரோக்கிய பிரச்சனையை இன்னும் தீவிரமாக்கும் மற்றும் மருத்துல செலவுகளை அதிகரிக்கும்.
இப்போது வாஸ்து சாஸ்திரத்தின் படி, மருந்து மாத்திரைகளை வீட்டின் எந்த இடம் அல்லது திசையில் வைக்க வேண்டும், எங்கு வைக்கக்கூடாது என்பது குறித்து காண்போம். உங்கள் வீட்டில் தவறான இடத்தில் மருந்து மாத்திரைகளை வைத்திருந்தால், உடனே அதை மாற்றி வையுங்கள்.
* வாஸ்து சாஸ்திரத்தின் படி, மருந்து மாத்திரைகளை எக்காரணம் கொண்டும் வீட்டின் தென்கிழக்கு திசையில் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால், மருந்து மாத்திரைகளை வாழ்நாள் முழுவதும் எடுக்க வேண்டியிருக்கும். மேலும் அந்நபர் நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டிருக்கக்கூடும். அதோடு, வீட்டில் அதிக மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும்.
* வாஸ்து சாஸ்திரத்தில், மருந்துகளை வடக்கு மற்றும் மேற்கு திசைகளில் வைப்பது நல்லதல்ல. இதனால் வீட்டில் மருந்து மாத்திரைகளை எடுக்கும் நபர் தீவிரமாக நோய்வாய்ப்படக்கூடும். அதோடு, அந்நபர் பலவிதமான பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும்.
* எக்காரணம் கொண்டும் மருந்துகளை கட்டிலுக்கு அருகே அல்லது தலைக்கு மேல் வைத்துக் கொண்டு தூங்கக்கூடாது. இது ராகு-கேது தோஷத்தை ஏற்படுத்தும். இதனால் அந்நபலர் நோய்களைத் தவிர பலவிதமான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
* நிறைய பேர் சமையலறையில் மருந்து மாத்திரைகள் மற்றும் முதலுதவி பெட்டிகளை வைத்திருப்பார்கள். ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின் படி, சமையலறையில் மருந்து பொருட்களை வைத்திருக்கக்கூடாது. இது அந்த வீட்டில் உள்ளோரின் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.
எந்த திசையில் மருந்துகளை வைக்க வேண்டும்?
வாஸ்து சாஸ்திரத்தின் படி, மருந்துகளை வைக்க சிறந்த திசை கிழக்கு தான். இந்த கிழக்கு திசையில் மருந்துகளை வைத்து பயன்படுத்தினால், விரைவில் ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
அதேப் போல் வடகிழக்கு திசையிலும் மருந்துகளை வைத்து பயன்படுத்துவது நல்லதாக கருதப்படுகிறது. ஆனால் எந்த காரணம் கொண்டும் மருந்துகளை பூஜை அறையில் வைக்காதீர்கள். இல்லாவிட்டால், இந்த மருந்துகளை தொடர்ந்து எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுவிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications