Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
வாஸ்து படி இந்த திசையில் உட்கார்ந்து சாப்பிட்டால் எமன் உங்ககிட்ட சீக்கிரம் வந்துருவாராம்... ஜாக்கிரதை...!
Vastu Tips: வாஸ்து என்பது ஒரு நபரின் மரியாதை, வெற்றி மற்றும் செல்வ ஆதாயத்திற்கான பல்வேறு நடவடிக்கைகள் விளக்கப்பட்ட ஒரு சாஸ்திரமாகும். இதை பின்பற்றினால் ஒருவர் வாழ்க்கையில் அனைத்தையும் பெறலாம்.
அதே போல வாஸ்து சாஸ்திரத்தில் உணவு சம்பந்தமாக பல விதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள விதிகளின் படி, ஒரு நபர் உணவு உண்ணும்போது சரியான திசையில் வைத்து உணவை சாப்பிட்டால், அவரது உடல்நிலை நன்றாக இருக்கும் மற்றும் அதிர்ஷ்டமும் கிடைக்கும்.

இத்துடன் மரண பயமும் நீங்கி ஆயுளும் அதிகரிக்கும். வாஸ்து சாஸ்திரத்தின்படி எந்த திசையில் உணவு அமர்ந்து உணவு உண்ண வேண்டும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
கிழக்கு திசை
ஒருவரின் ஜாதகத்தில் திடீர் மரணம் ஏற்படும் என்ற அச்சம் இருந்தால், கிழக்கு திசையை பார்த்து மட்டுமே சாப்பிட வேண்டும். இது ஆயுளை அதிகரிக்கிறது என்று நம்பப்படுகிறது. ஜாதகத்தில் தோஷ கிரகம் இருந்தால், அத்தகையவர்கள் எப்போதும் கிழக்கு பார்த்து சாப்பிட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதைச் செய்வதன் மூலம், ஆரோக்கியம் நன்றாக இருக்கும், மரணம் பற்றிய பயமும் இருக்காது.
மேற்கு திசை
ஒருவரின் உடல்நிலை எப்போதும் மோசமாக இருந்தாலோ அல்லது வீட்டில் ஒருவரின் உடல்நிலை எப்பொழுதும் மோசமாக இருந்தாலோ, அவர் மேற்கு திசை பார்த்து சாப்பிட வேண்டும். இதனால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
சிறந்த ஆரோக்கியம் மற்றும் நோய் நிவாரணத்திற்கு மேற்கு திசை வாஸ்துவில் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதனால்தான் நோயாளிகள் மேற்கு நோக்கியவாறு சாப்பிட வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் அறிவுறுத்துகிறது.
வடக்கு திசை
வாஸ்து சாஸ்திரத்தின் படி, பணம் வீட்டில் நிலைக்கவில்லை என்றால் அல்லது சேமிக்க முடியவில்லை என்றால், உணவு எப்போதும் வடக்கு நோக்கியே இருக்க வேண்டும். குறிப்பாக, வீட்டின் தலைவர் எப்போதும் வடக்கு திசையை நோக்கியே உணவு உண்ண வேண்டும். இதைச் செய்வதன் மூலம், வீட்டில் மகிழ்ச்சி - செழிப்பு மற்றும் செல்வ தானியங்கள் நிறைந்திருக்கும்.
தெற்கு திசை
வாஸ்து சாஸ்திரத்தின் படி தெற்கு திசை பார்த்து சாப்பிடுவது தவிர்க்க வேண்டிய ஒன்றாகும். ஏனெனில் ஜோதிடத்தில் இந்த திசை சரியாகக் கருதப்படவில்லை. ஏனெனில் இந்த திசையில் அமர்ந்து சாப்பிடுவதால், மக்கள் விரைவில் எதிர்மறை ஆற்றலால் பாதிக்கப்படுகிறார்கள்.
எதிர்மறை சக்திகள் எப்போதும் மனதில் ஆதிக்கம் செலுத்தினால், அத்தகைய மக்கள் தீய ஆவிகளால் பாதிக்கப்படுவார்கள் என்று நம்பப்படுகிறது. மேலும் இதனால் வாழ்க்கையில் சுப காரியங்கள் எதுவும் நடக்காது. இந்த திசை எமதர்மரின் திசை என்றும் அழைக்கப்படுகிறது.
வடகிழக்கு
உங்களுக்கு செரிமான பிரச்சனைகள் இருந்தால், கிழக்கு அல்லது வடகிழக்கு திசையை நோக்கி உணவை சாப்பிட்டால், உங்கள் உணவு வயிற்றில் நன்றாக ஜீரணமாகும் என்று நம்பப்படுகிறது. கிழக்கு நோக்கிய உணவை உண்பதால், உணவு நன்றாக ஜீரணமாகி நீண்ட காலம் வாழ்வீர்கள் என்றும், இதனால் நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள் என்றும் நம்பப்படுகிறது.
அதிர்ஷ்ட திசை
நீங்கள் இப்போதுதான் உங்கள் வாழ்க்கையைத் தொடங்கியுள்ளீர்கள் மற்றும் வாழ்க்கையில் விரைவான வெற்றியை அடைய விரும்பினால், நீங்கள் வடக்கு திசையை நோக்கி சாப்பிட வேண்டும், ஏனெனில் இது உங்கள் தொழிலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு செய்வதன் மூலம் வாழ்வில் பல வெற்றிகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.



Click it and Unblock the Notifications
