கறிவேப்பிலை சமைப்பதற்கு மட்டும் இல்ல? இப்படி யூஸ் பண்ணி உங்க சமையலறையை புதுசா மாத்தலாமாம்...!

கறிவேப்பிலை அனைத்து இந்திய சமையலறைகளிலும் இருக்கும் ஒரு பிரதான பொருளாகும். பெரும்பாலான இந்திய உணவுகளின் தொடக்கத்திலேயோ அல்லது இறுதியிலோ கறிவேப்பிலை சேர்க்கப்படுகிறது. இது உணவிற்கு தனித்துவமான சுவையையும், நறுமணத்தையும் மற்றும் தோற்றத்தையும் கொடுக்கிறது.

இந்த பசுமையான இலைகள் உணவில் பயன்படுத்தப்படுவதை விட அதிக நன்மைகளை அளிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? சமையலில் கூடுதல் சுவையை சேர்ப்பதுதான் கறிவேப்பிலை உங்கள் சமையலறையை சுத்தமாகவும் வைத்திருக்கவும் உதவும்.

Tips To Use Curry Leaves For Kitchen Cleaning in Tamil

அவற்றின் இயற்கையான, இரசாயனங்கள் இல்லாத பண்புகளுடன், அவை உங்கள் சமையலறையை சுத்தம் செய்வதற்கும் புத்துணர்ச்சியூட்டுவதற்கும் பாதுகாப்பான வழியை வழங்குகின்றன. உங்கள் சமையலறையை கறிவேப்பிலை கொண்டு எப்படி சுத்தம் செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சமையலறையை இயற்கையான நறுமணத்துடன் வைத்திருக்க உதவுகிறது

சமையலறையில் பல்வேறு உணவுப்பொருட்கள் வைக்கப்படுவதால் அவை எப்போதும் வித்தியாசமான வாசனையுடன் இருக்கும். இந்த வாசனையை விரட்ட கறிவேப்பிலை உங்களுக்கு உதவலாம். இந்த இலைகளின் இனிமையான நறுமணத்தால் நிரப்பப்பட்ட சமையலறை எப்போதும் புத்துணர்ச்சியாக இருக்கும்.

ஒரு பிடி கறிவேப்பிலையை தண்ணீரில் வேகவைத்தால் போதும், அதன் நீராவி மீதமுள்ள வேலையைப் பார்த்துக் கொள்ளும். இந்த இயற்கை நறுமணம் குறிப்பாக மீன் அல்லது கறி போன்ற வலுவான மணம் கொண்ட உணவுகளை சமைத்த அவற்றின் வாசனையை விரட்ட உதவும். கறிவேப்பிலையின் தனித்துவமான வாசனை தேவையற்ற நாற்றங்களை மறைத்து உங்கள் சமையலறையை புதிய வாசனையுடன் வைத்திருக்கும்.

கிச்சன் மேஜையை சுத்தம் செய்ய உதவும்

இந்திய சமையலறைகளில் உள்ள மேஜைகள் பாத்திரத்தை தாங்குவதற்கு மட்டுமல்ல, சப்பாத்தி உருட்டுவது முதல் காய்கறிகள் நறுக்குவது வரை அனைத்தும் அங்குதான் செய்யப்படுகிறது. எனவே அவற்றை சுத்தமாக வைத்திருப்பது மிக முக்கியம். இதற்கு பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட கறிவேப்பிலை உதவும்.

ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்டாக அரைத்து, அதை உங்கள் சமையலறை மேஜையில் தடவி ஊறவிடவும். பின்னர், ஈரமான துணியால் துடைக்கவும். இது மேஜையை சுத்தப்படுத்துவது மட்டுமின்றி கிருமி நாசினியாகவும் செயல்பட்டு சமையலறை மேஜை கிருமிகள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்கிறது.

ஸ்டீல் பாத்திரங்களை பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது

ஸ்டீல் பாத்திரங்கள் மற்றும் உபகரணங்கள் பெரும்பாலும் காலப்போக்கில் அவற்றின் பிரகாசத்தை இழக்கின்றன. இதற்கு செயற்கை இரசாயனங்களை பயன்படுத்துவதற்குப் பதிலாக, கறிவேப்பிலை போன்ற இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தலாம்.

இந்த இலைகளை ஒரு பேஸ்டாக அரைத்து, சிறிது தேங்காய் எண்ணெயில் கலந்து, இதை பாலிஷ் பேஸ்டாகப் பயன்படுத்தலாம். அதை உங்கள் பாத்திரங்களில் தேய்த்து, 15 நிமிடங்கள் ஊறவைத்து, பின்னர் சுத்தமான துணியால் துடைக்கவும். இது பாத்திரத்தை புதியது போல மாற்றும்.

அடுப்புகளில் உள்ள க்ரீஸ் கறையை அகற்றுகிறது

எண்ணெய் மற்றும் மசாலாப் பொருட்களை பயன்படுத்தி சமைப்பதால், பொதுவாக அடுப்புகளில் எண்ணெய் மற்றும் கறை படிந்துவிடும். கறிவேப்பிலையில் உள்ள இயற்கை எண்ணெய் இந்த க்ரீஸ் கறைகளை அகற்றும். கறிவேப்பிலையை சிறிது பேக்கிங் சோடா மற்றும் தண்ணீருடன் கலந்து பேஸ்ட்டை உருவாக்கவும், பின்னர் அதை உங்கள் ஸ்டவ்டாப்பை, குறிப்பாக பர்னர்களை தேய்க்க பயன்படுத்தவும். இந்த கலவையானது விடாப்பிடியான க்ரீஸை நீக்கி, உங்கள் அடுப்பை சுத்தம் செய்வதை எளிதாக்குகிறது.

பூச்சிகளை விரட்ட உதவுகிறது

சமையலறைகளில் உள்ள தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் பூச்சிகளை ஈர்க்கும். கறிவேப்பிலை இந்தப் பூச்சிகளைத் தடுக்க உதவும். ஒரு பிடி கறிவேப்பிலையை நன்கு காயவைத்து, நீங்கள் தானியங்கள் வைக்கும் இடத்தில் வைக்கவும். கறிவேப்பிலையின் வலுவான வாசனை இயற்கையாகவே எறும்புகள் மற்றும் கரப்பான் பூச்சிகள் போன்ற பூச்சிகளை விரட்டும்.

Story first published: Monday, October 7, 2024, 22:20 [IST]
Desktop Bottom Promotion