Just In
- 1 hr ago
சாணக்கிய நீதியின் படி இந்த வழிகளில் பணம் சம்பாதிப்பவர்கள் வாழும்போதே நரகத்தை அனுபவிப்பார்களாம்...!
- 2 hrs ago
இந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாதாம்... மீறி சாப்பிட்டா புற்றுநோய் வர வாய்பிருக்காம்!
- 2 hrs ago
பெண்களின் குறைந்த பாலியல் ஆசையை உடனடியாக அதிகரிக்க இந்த 5 உணவுகளில் ஒன்று போதுமாம்...!
- 4 hrs ago
அடிக்கடி சிறுநீர் கழிச்சிகிட்டே இருக்கீங்களா? அப்ப உங்களுக்கு இந்த ஆபத்தான நோய் இருக்க வாய்ப்பிருக்காம்!
Don't Miss
- News
நீங்க என்ன சாதி? கருமத்தை அறிவது எப்படி? தாத்தா பெயரிலும்.. இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஓபன்
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Movies
யாராக இருந்தாலும் விவசாயியாக இருப்பது முக்கியம்... எல்லாம் அதுக்காக தான்: எமோஷனலான கார்த்தி
- Technology
ஜியோவுடன் இணைந்து திருப்பதி தேவஸ்தானம் அறிமுகம் செய்த புதிய ஆப்.! எதற்குத் தெரியுமா?
- Finance
கூகுள் ஊழியரின் கண்ணீர்..பிரசவ அறை,4கை குழந்தை, தாய் மரணம்,இண்டர்வியூவ்-க்கு மத்தியில் பணிநீக்கம்..!
- Sports
என்ன தெரிகிறது அங்கு??.. போட்டியின் போது அம்பயர் எராஸ்மஸ் செய்த காரியம்.. இணையத்தில் சிரிப்பலை!
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய புதிய ஹூண்டாய் ஐ10... விலை இவ்ளோதானா! மாருதி, டாடா கார்களின் கதையை முடிக்க போகுது!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
நாய் வளர்ப்பவர்கள் செய்யும் சில அடாவடித்தனங்கள் - கடுப்பேத்துகிறார் மை லார்ட்!!!
செல்ல பிராணிகள் வளர்ப்பது உங்கள் மனதை இலகுவாக்கவும், மன அலுத்தமின்றி இருக்கவும் பயனளிக்கும். ஆனால், அது வளர்ப்பவர்களுக்கு மட்டும் தான். ஆனால், நமக்கு நேரெதிராக பயனளிக்கும். செல்ல பிராணிகள் வளர்ப்பவர்கள் நமக்கு எவ்வளவு வேண்டியவர்களாக இருந்தாலும், அங்கு நாய்கள் இருந்தால் மட்டும். லேசாக அல்லு வாங்கும் (பேஜாரு).
ஏனெனில், வளர்ப்பவர்களுக்கு நாம் எவ்வளவு வேண்டியவர்கள் என்று தெரியும். ஆனால், அது அந்த நாய்க்கு தெரியாதே. இன்னும் சில இடங்களில், நாய் வளர்ப்பவர்களும் நாய் மாதிரியே இருப்பார்கள். அவர்கள் வீட்டுக்கு போவதற்கு, பேசாமல் நரகத்திற்கே போய் வந்துவிடலாம். சரி, அப்படி அவர்களது வீட்டிற்கு போகாமல் இருந்தாலும், வாக்கிங், ஜாக்கிங் என்று எங்காவது போகும் போது உடன் கூட்டிவது பயமுறுத்துவார்கள்.
இது ஒரு பக்கம் இருக்க, நாய் வளர்ப்பவர்கள், அவர்களது பிராணிகளுடன் சேர்ந்து பல அடாவடித்தனங்கள் செய்வதுண்டு, அவற்றில் சிலவன.....

உணவை பகிர்ந்து சாப்பிடுவது
நாய் வளர்ப்பவர்கள் செய்யும் மிகப்பெரிய அடாவடித்தனம், உணவை பகிர்ந்துக்கொள்வது, இவர்களது உணவை நாய்களுக்கு ஊட்டுவதுக் கூட பொறுத்துக் கொள்ளலாம். ஆனால், அதன் உணவை இவர்கள் பகிர்ந்து சாப்பிடுவது தான் கொடுமையிலும் கொடுமை. இதனால், பல தொற்றுகள் அண்ட வாய்ப்புகள் இருக்கின்றன.

"கக்கா" பிரச்சனை
காலையில் கக்காப் போக எங்காவது அழைத்து செல்வார்கள், யாரோ ஒருவர் வீட்டின் முன்பு கக்கா இருக்க செய்துவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவார்கள்.

குழந்தையைப் போல பாவிப்பது
தாங்கள் வளர்க்கும் செல்ல பிராணிகளை குழந்தைகளைப் போல பாவிப்பது மிகவும் நல்ல விஷயம். ஆனால், அதற்கென்று, முத்தமிடுவது, கட்டிப் பிடித்துக் கொள்வது எல்லாம் ரொம்ப ஓவர். இதன் மூலம், பல சரும பிரச்சனைகள் வரும் வாய்ப்புகள் இருக்கின்றன.

கட்டிப் பிடித்து உறங்குவது
இதன் உச்சகட்டமே, கட்டிப்பிடித்து உறங்குவது தான். இப்படி கண்டதெல்லாம் செய்துவிட்டு கடைசியில், அந்த செல்ல [பிராணிகளுக்கு ஏதேனும் சரும பிரச்சனை அல்லது நோய் பாதிப்புகள் வந்தால் ஊருக்கு வெளியில் சென்று விட்டுவிட்டு வந்துவிடுவது. (ஒரு சிலரை தவிர..)

நாய்க்கு உடை
நாய்களுக்கும் தாங்கள் உடுத்துவது போல அதே வண்ணத்தில் உடை அலங்காரம் செய்வது. ஸ்கார்ஃப், சாக்ஸ் என இவர்கள் செய்யும் லூட்டியை அடக்கவே முடியாது.