Just In
- 6 hrs ago
இந்த ராசிக்காரங்க பணத்தை நிர்வகிப்பத்தில் சுத்தமா பொறுப்பில்லாமல் இருப்பாங்களாம்...!
- 7 hrs ago
இந்த 5 ராசிக்காரங்கள காதலிக்கிறவங்க ரொம்ப பாவம்... ஏனா இவங்க சைக்கோத்தனமா காதலிப்பாங்களாம்...!
- 7 hrs ago
மாரடைப்பு ஏற்படாம தடுத்து உங்க இதயத்தை பாதுகாக்க இந்த எண்ணெய் உதவுமாம்..!
- 9 hrs ago
ஆந்திரா ஸ்டைல் க்ரீன் சில்லி சிக்கன் ரெசிபி
Don't Miss
- News
காங்கிரசுக்கு 25 தொகுதிகள்?...திமுக-காங். இடையே சுமுக உடன்பாடு...இன்று காலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- Automobiles
மெர்சலாக்கும் தோற்றத்தில் ஷோரூமை வந்தடைந்தது கவாஸாகி நிஞ்சா 300!! மொத்தம் 3 நிறங்கள்... உங்களது தேர்வு எது?
- Movies
பிரபலங்களின் பாராட்டு மழையில் அன்பிற்கினியாள்.. ஹவுஸ்ஃபுல் காட்சிகளுடன் சக்கைபோடு போடுகிறது!
- Sports
அறிமுக தொடரிலேயே அசத்தல் ஆட்டம்...30 வருஷமா யாருமே செய்யலயாம்..வரலாற்று சாதனை படைத்த அக்ஷர் பட்டேல்
- Finance
டிவிஎஸ் மோட்டார்-இன் சூப்பர் அறிவிப்பு.. ஊழியர்கள் மகிழ்ச்சி..!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் மபொதுத்துறை நிறுவன வேலை!!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நாய் வளர்ப்பவர்கள் செய்யும் சில அடாவடித்தனங்கள் - கடுப்பேத்துகிறார் மை லார்ட்!!!
செல்ல பிராணிகள் வளர்ப்பது உங்கள் மனதை இலகுவாக்கவும், மன அலுத்தமின்றி இருக்கவும் பயனளிக்கும். ஆனால், அது வளர்ப்பவர்களுக்கு மட்டும் தான். ஆனால், நமக்கு நேரெதிராக பயனளிக்கும். செல்ல பிராணிகள் வளர்ப்பவர்கள் நமக்கு எவ்வளவு வேண்டியவர்களாக இருந்தாலும், அங்கு நாய்கள் இருந்தால் மட்டும். லேசாக அல்லு வாங்கும் (பேஜாரு).
ஏனெனில், வளர்ப்பவர்களுக்கு நாம் எவ்வளவு வேண்டியவர்கள் என்று தெரியும். ஆனால், அது அந்த நாய்க்கு தெரியாதே. இன்னும் சில இடங்களில், நாய் வளர்ப்பவர்களும் நாய் மாதிரியே இருப்பார்கள். அவர்கள் வீட்டுக்கு போவதற்கு, பேசாமல் நரகத்திற்கே போய் வந்துவிடலாம். சரி, அப்படி அவர்களது வீட்டிற்கு போகாமல் இருந்தாலும், வாக்கிங், ஜாக்கிங் என்று எங்காவது போகும் போது உடன் கூட்டிவது பயமுறுத்துவார்கள்.
இது ஒரு பக்கம் இருக்க, நாய் வளர்ப்பவர்கள், அவர்களது பிராணிகளுடன் சேர்ந்து பல அடாவடித்தனங்கள் செய்வதுண்டு, அவற்றில் சிலவன.....

உணவை பகிர்ந்து சாப்பிடுவது
நாய் வளர்ப்பவர்கள் செய்யும் மிகப்பெரிய அடாவடித்தனம், உணவை பகிர்ந்துக்கொள்வது, இவர்களது உணவை நாய்களுக்கு ஊட்டுவதுக் கூட பொறுத்துக் கொள்ளலாம். ஆனால், அதன் உணவை இவர்கள் பகிர்ந்து சாப்பிடுவது தான் கொடுமையிலும் கொடுமை. இதனால், பல தொற்றுகள் அண்ட வாய்ப்புகள் இருக்கின்றன.

"கக்கா" பிரச்சனை
காலையில் கக்காப் போக எங்காவது அழைத்து செல்வார்கள், யாரோ ஒருவர் வீட்டின் முன்பு கக்கா இருக்க செய்துவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவார்கள்.

குழந்தையைப் போல பாவிப்பது
தாங்கள் வளர்க்கும் செல்ல பிராணிகளை குழந்தைகளைப் போல பாவிப்பது மிகவும் நல்ல விஷயம். ஆனால், அதற்கென்று, முத்தமிடுவது, கட்டிப் பிடித்துக் கொள்வது எல்லாம் ரொம்ப ஓவர். இதன் மூலம், பல சரும பிரச்சனைகள் வரும் வாய்ப்புகள் இருக்கின்றன.

கட்டிப் பிடித்து உறங்குவது
இதன் உச்சகட்டமே, கட்டிப்பிடித்து உறங்குவது தான். இப்படி கண்டதெல்லாம் செய்துவிட்டு கடைசியில், அந்த செல்ல [பிராணிகளுக்கு ஏதேனும் சரும பிரச்சனை அல்லது நோய் பாதிப்புகள் வந்தால் ஊருக்கு வெளியில் சென்று விட்டுவிட்டு வந்துவிடுவது. (ஒரு சிலரை தவிர..)

நாய்க்கு உடை
நாய்களுக்கும் தாங்கள் உடுத்துவது போல அதே வண்ணத்தில் உடை அலங்காரம் செய்வது. ஸ்கார்ஃப், சாக்ஸ் என இவர்கள் செய்யும் லூட்டியை அடக்கவே முடியாது.