Latest Updates
-
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
நாய் வளர்ப்பவர்கள் செய்யும் சில அடாவடித்தனங்கள் - கடுப்பேத்துகிறார் மை லார்ட்!!!
செல்ல பிராணிகள் வளர்ப்பது உங்கள் மனதை இலகுவாக்கவும், மன அலுத்தமின்றி இருக்கவும் பயனளிக்கும். ஆனால், அது வளர்ப்பவர்களுக்கு மட்டும் தான். ஆனால், நமக்கு நேரெதிராக பயனளிக்கும். செல்ல பிராணிகள் வளர்ப்பவர்கள் நமக்கு எவ்வளவு வேண்டியவர்களாக இருந்தாலும், அங்கு நாய்கள் இருந்தால் மட்டும். லேசாக அல்லு வாங்கும் (பேஜாரு).
ஏனெனில், வளர்ப்பவர்களுக்கு நாம் எவ்வளவு வேண்டியவர்கள் என்று தெரியும். ஆனால், அது அந்த நாய்க்கு தெரியாதே. இன்னும் சில இடங்களில், நாய் வளர்ப்பவர்களும் நாய் மாதிரியே இருப்பார்கள். அவர்கள் வீட்டுக்கு போவதற்கு, பேசாமல் நரகத்திற்கே போய் வந்துவிடலாம். சரி, அப்படி அவர்களது வீட்டிற்கு போகாமல் இருந்தாலும், வாக்கிங், ஜாக்கிங் என்று எங்காவது போகும் போது உடன் கூட்டிவது பயமுறுத்துவார்கள்.
இது ஒரு பக்கம் இருக்க, நாய் வளர்ப்பவர்கள், அவர்களது பிராணிகளுடன் சேர்ந்து பல அடாவடித்தனங்கள் செய்வதுண்டு, அவற்றில் சிலவன.....

உணவை பகிர்ந்து சாப்பிடுவது
நாய் வளர்ப்பவர்கள் செய்யும் மிகப்பெரிய அடாவடித்தனம், உணவை பகிர்ந்துக்கொள்வது, இவர்களது உணவை நாய்களுக்கு ஊட்டுவதுக் கூட பொறுத்துக் கொள்ளலாம். ஆனால், அதன் உணவை இவர்கள் பகிர்ந்து சாப்பிடுவது தான் கொடுமையிலும் கொடுமை. இதனால், பல தொற்றுகள் அண்ட வாய்ப்புகள் இருக்கின்றன.

"கக்கா" பிரச்சனை
காலையில் கக்காப் போக எங்காவது அழைத்து செல்வார்கள், யாரோ ஒருவர் வீட்டின் முன்பு கக்கா இருக்க செய்துவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவார்கள்.

குழந்தையைப் போல பாவிப்பது
தாங்கள் வளர்க்கும் செல்ல பிராணிகளை குழந்தைகளைப் போல பாவிப்பது மிகவும் நல்ல விஷயம். ஆனால், அதற்கென்று, முத்தமிடுவது, கட்டிப் பிடித்துக் கொள்வது எல்லாம் ரொம்ப ஓவர். இதன் மூலம், பல சரும பிரச்சனைகள் வரும் வாய்ப்புகள் இருக்கின்றன.

கட்டிப் பிடித்து உறங்குவது
இதன் உச்சகட்டமே, கட்டிப்பிடித்து உறங்குவது தான். இப்படி கண்டதெல்லாம் செய்துவிட்டு கடைசியில், அந்த செல்ல [பிராணிகளுக்கு ஏதேனும் சரும பிரச்சனை அல்லது நோய் பாதிப்புகள் வந்தால் ஊருக்கு வெளியில் சென்று விட்டுவிட்டு வந்துவிடுவது. (ஒரு சிலரை தவிர..)

நாய்க்கு உடை
நாய்களுக்கும் தாங்கள் உடுத்துவது போல அதே வண்ணத்தில் உடை அலங்காரம் செய்வது. ஸ்கார்ஃப், சாக்ஸ் என இவர்கள் செய்யும் லூட்டியை அடக்கவே முடியாது.



Click it and Unblock the Notifications











