Just In
- 4 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 6 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 6 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 7 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
குட்டி நாயை வளர்க்க போறீங்களா! இதெல்லாம் மனசுல வெச்சுக்கோங்க!!!
இவ்வளவு பிரச்சனை இருப்பினும், அனைத்து மக்களும் சற்று பெரிய நாயை வாங்குவதை விட, குட்டியை வாங்க தான் ஆசைப்படுவார்கள். ஏனெனில் பெரிய நாயை விட, சிறிதாக இருக்கும் நாய் நன்கு பழகிவிடும். மேலும் எந்த ஒரு பயமும் இல்லாமல் இருக்கும். ஆகவே அத்தகைய பிறந்த குட்டி நாயை ஒரு சிறந்த பெற்றோராக இருந்து வளர்க்க, ஒருசிலவற்றை மனதில் கொள்ள வேண்டும். அது என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...
* குட்டி நாய்களுக்கு சற்று வெதுவெதுப்பான சூழ்நிலை இருக்க வேண்டும். அதிலும் 90 டிகிரி வெப்பநிலை அதற்கு சரியானது. அதனால் தான் நாய் குட்டி அடிக்கடி தன் தாயின் பக்கத்தில் ஒட்டி தூங்குகிறது. ஆகவே தாய் நாய் அருகில் இருந்தால், எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், குட்டியை மட்டும் வைத்திருந்தால், அதற்கு தேவையானவற்றை செய்து கொடுக்க வேண்டும்.
* நாய் குட்டி பிறந்ததும் அது குறைந்தது 16 முதல் 18 மணிநேரம், பிறந்த குழந்தையைப் போன்றே தூங்கும். இந்த அமைதியான தூக்கம் அனைத்தும் ஒரு சில வாரங்கள் மட்டுமே. ஆகவே அதற்கு ஏற்றவாறு எப்படி குழந்தைகளுக்கு தொட்டில் செய்து தூங்க வைக்கின்றோமோ, அதேப் போல் அதற்கு ஒரு தொட்டி போன்று அமைத்து, அதில் படுக்க வைக்க வேண்டும்.
* குட்டி நாய்க்கு பிறந்ததும் இரண்டு நாட்கள் கண்கள் தெரியாது. நிறைய தாய் நாய் தன் குட்டிகளுக்கு கண்கள் தெரியாத நிலையில் தான் பாலைக் கொடுக்கும். அதன் கண்கள் திறக்க இரண்டு நாட்கள் ஆகும், சில நாய்களுக்கு ஒரு வாரம் கூட ஆகும். இந்த நேரத்தில் அதனால் சரியாக நடக்க கூட முடியாது. இருப்பினும் மெதுவாக நகரும். எனவே அச்சமயத்தில் அதை சரியாக வழிநடத்த வேண்டும்.
* தாய் நாய் இல்லாமல் குட்டி நாய்களுக்கு உணவை ஊட்டுவது என்பது எளிதானதல்ல. ஆகவே அதற்கென்று இருக்கும் ஒரு ஸ்பெஷல் பாட்டிலில் வெதுவெதுப்பான பாலை ஊற்றி கொடுக்க வேண்டும். அதனால் பாட்டில் நிப்புல் மூலம் சாப்பிட முடியவில்லை என்றால், அப்போது அதன் வாயில் அந்த பாலை ஸ்பூனால் ஊற்ற வேண்டும்.
* நிறைய நாய் குட்டிகள் சீக்கிரம் நடக்க தொடங்கிவிடும். குழந்தைகள் நடக்க ஒரு வருடம் ஆகலாம், ஆனால் நாய் குட்டிகள் நடக்க ஒரு வாரம் போதும். ஆனால் நடப்பது மட்டும் தான் வேகமாகவே தவிர, அதன் மூளை வளர்ச்சி மிகவும் குறைவாக தான் இருக்கும். மேலும் அது விரைவில் நடப்பதால், எங்கு வேண்டுமானாலும் செல்லும், ஆகவே அதனை இந்நேரத்தில் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
* குட்டி நாய்களுக்கு விரைவிலேயே பற்கள் முளைத்துவிடாது. அது முளைக்க ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் ஆகும். ஆகவே அவ்வாறு பற்கள் முளைக்கும் போது, அதற்கு எதையாவது கடிக்க வேண்டும் என்று தோன்றும். எனவே அதற்கு ஏதேனும் பொம்மைகளைக் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அது நாற்காலி, கட்டில் போன்றவற்றை கடித்து மெல்லுவதற்கு ஆரம்பிக்கும்.
எனவே, இவை அனைத்தையும் மனதில் கொண்டு, உங்கள் வீட்டு செல்ல நாய்க்குட்டிகளை பாதுகாப்பாக வளர்த்து, மகிழுங்கள்.