Just In
- 56 min ago 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- 1 hr ago 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- 2 hrs ago தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- 2 hrs ago வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
Don't Miss
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
New Year 2023 Vastu Tips: வாஸ்துப்படி, செல்வம் பெருக புத்தாண்டிற்கு முன் வீட்டில் இருந்து அகற்ற வேண்டியவைகள்!
வாஸ்துப்படி சில பொருட்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரித்து, அந்த வீட்டில் இருப்போரின் வாழ்வில் பலவிதமான தடையை ஏற்படுத்தும். ஆகவே அந்த மாதிரியான பொருட்களை புத்தாண்டிற்கு முன்பே வீட்டில் இருந்து அகற்ற வேண்டும்.
New Year 2023 Vastu Tips: வரக்கூடிய 2023 புத்தாண்டு சிறப்பாக இருக்க வேண்டுமென அனைவருமே விரும்புவோம். வரவிருக்கும் புத்தாண்டில் பணப்பிரச்சனைகள், மன கஷ்டங்கள் எதுவும் வராமல் இருக்கவும், வீட்டில் செல்வம் பெருகவும், வாஸ்துப்படி ஒருசில விஷயங்களை செய்ய வேண்டும். ஒருவரது வீட்டில் பிரச்சனைகள் வருவதற்கு அந்த வீட்டில் இருக்கும் சில பொருட்களும் காரணமாக இருக்கும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
ஏனெனில் வாஸ்துப்படி சில பொருட்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரித்து, அந்த வீட்டில் இருப்போரின் வாழ்வில் பலவிதமான தடையை ஏற்படுத்தும். ஆகவே அந்த மாதிரியான பொருட்களை புத்தாண்டிற்கு முன்பே வீட்டில் இருந்து அகற்ற வேண்டும். இப்போது செல்வம் பெருக புத்தாண்டிற்கு முன் வீட்டில் இருந்து அகற்ற வேண்டியவைகள் குறித்து காண்போம்.
குப்பைகளை அகற்ற வேண்டும்
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் பயன்படுத்தாத அல்லது தேவையற்ற பொருட்களை சேமித்து வைக்கக்கூடாது. இது வீட்டில் உள்ளோரின் ஆரோக்கியம் மற்றும் அதிர்ஷ்டத்தை பாதிக்கும். அதுவும் பழைய ஆடைகள், பயன்படுத்தாத காலணிகள், குப்பைகள் அல்லது துருப்பிடித்த பொருட்கள் போன்றவை எதிர்மறை ஆற்றலின் மூலமாகும். எனவே உங்கள் வீட்டில் இவை இருந்தால், புத்தாண்டிற்கு முன்னரே வீட்டில் இருந்து அகற்றுக்ஙள்.
சுத்தம் செய்ய வேண்டும்
வீடு எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். சுத்தமான வீடுகளில் தான் லட்சுமி தேவி வாசம் செய்வாள். பெரும்பாலான வீடுகளின் மூலைகளில் சிலந்தி வலைகள் இருக்கும். வீட்டில் சிலந்தி வலைகள் இருந்தால், அது வாஸ்து குறைபாடுகளை உருவாக்கும். இதனால் தொழிலில் நஷ்டம் ஏற்படும், குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும், குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். எனவே 2023 ஆம் ஆண்டில் உங்கள் வீட்டில் செல்வமும், மகிழ்ச்சியும் அதிகரிக்க வேண்டுமானால், வீட்டில் உள்ள சிலந்தி வலைகளை அப்புறப்படுத்த வேண்டும்.
உடைந்த பொருட்களை அகற்றவும்
உங்கள் வீட்டில் உடைந்த சமையலறை பாத்திரங்கள், கண்ணாடிகள், எலக்ட்ரானிக் பொருட்கள், உடைந்த போட்டோக்கள், கடிகாரங்கள், விளக்குகள் போன்றவை இருந்தால், அவற்றை புத்தாண்டிற்கு முன்னரே வீட்டில் இருந்து அகற்றுங்கள். ஏனெனில் இந்த பொருட்கள் அனைத்திலும் எதிர்மறை ஆற்றல் நிரம்பியுள்ளது. இவற்றை வீட்டில் வைத்திருக்கும் போது, அது அந்த வீட்டில் உள்ளோரின் வாழ்வில் பிரச்சனைகள் அதிகரிக்கும் மற்றும் பண வருகையும் தடைப்படும். ஒருவேளை உங்கள் வீட்டில் உடைந்த தெய்வங்களின் சிலைகள் இருந்தால், அவற்றை ஓடும் நீரில் போடுங்கள்.
அகற்ற வேண்டிய படங்கள்
வீட்டில் மாமிசங்களை உண்ணும் விலங்குகளின் போட்டோக்கள் இருந்தால், அதை உடனே அகற்றுங்கள். ஏனெனில் இவை மனதில் எதிர்மறை உணர்வுகளை உருவாக்கும். இம்மாதிரியான விலங்குகள் உள்ள படங்கள் வீட்டில் வைத்திருப்பது நல்லதல்ல. இது தவிர போர் காட்சிகள், காய்ந்த மரங்கள், சோகமான போட்டோக்கள், இரத்தக்கறை படங்கள் போன்றவற்றையும் வீட்டில் வைத்திருக்கக்கூடாது. ஏனெனில் வாஸ்துப்படி, இதுப்போன்ற படங்கள் அசுபமாக கருதப்படுகிறது.
நடராஜர் சிலை
சிவபெருமானின் நடராஜர் வடிவம் சிவனின் தாண்டவத்தைக் குறிக்கிறது. சிவனின் தாண்டவம் அழிவைக் குறிக்கிறது. ஏனெனில் சிவன் கோபம் கொண்ட போது தான் தாண்டவம் ஆடினார். எனவே நவராஜர் வடிவத்தை வீட்டில் வைத்திருந்தால், அது எதிர்மறை ஆற்றலைக் கொண்டு வரும். எனவே இந்த சிலை உங்கள் வீட்டில் வைத்திருக்காதீர்கள். இல்லாவிட்டால் வீட்டில் உள்ளவர்களுக்கு இடையே பிரிவு ஏற்படும் சூழ்நிலை உருவாகும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)