மழைக்காலத்தில் AC பயன்படுத்தும் போது இந்த தவறுகளை பண்ணாதீங்க... இல்லனா உங்க காசும், ஆரோக்கியமும் போயிரும்...!

பெரும்பாலான மக்களுக்கு மிகவும் பிடித்த பருவ காலம் என்றால் அது மழைக்காலம்தான். கிட்டதட்ட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மழைக்காலம் தொடங்கிவிட்டது. என்னதான் சுற்றுசூழல் ஈரப்பதமாக இருந்தாலும் மழைக்காலத்திலும் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வீட்டில் ஏர் கண்டிஷனரை பயன்படுத்துகின்றனர்.

மழைக்காலத்தில் ஏர் கண்டிஷனர்களைப் பயன்படுத்தும் விதம் மாறினாலும், மழைக்காலத்தில் ஏசியை பயன்ன்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் மற்றும் ஆபத்துக்களை மக்கள் சில நேரங்களில் மறந்து விடுகிறார்கள். மழைக்காலத்தில் காற்றின் ஈரப்பதம் அதிகரிக்கும் நிலையில், இந்த நிலையில் ஏர் கண்டிஷனரை தவறாக பயன்படுத்துவது எதிர்பாராத சிக்கல்களுக்கு வழிவகுக்கும். அதனால்தான் கோடை காலத்தை விட மழைக்காலத்தில் ஏசியை கவனமாக பயன்படுத்த வேண்டும். இந்த பதிவில் மழைக்காலத்தில் ஏசியை பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

How to Use Air Conditioner Safely in Rainy Season

காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பது ஏசியை கடினமாக உழைக்க வைக்கும்

கோடைக்காலம் போலல்லாமல், மழைக்காலத்தின் ஏசி சந்திக்கும் முக்கிய சிக்கல் சவால் வெப்பம் அல்ல, காற்றில் உள்ள ஈரப்பதம். இந்த அதிகப்படியான ஈரப்பதத்தை அகற்ற ஏர் கண்டிஷனர்கள் கடினமாக உழைக்க வேண்டும். உங்கள் ஏசியை வழக்கமான "கூல் மோடில்" இயக்குவது போதுமான அளவு பயனுள்ளதாக இருக்காது. "Dry Mode"-ல் ஏசியை இயக்குவது அதிகப்படியான குளிர் இல்லாமல் ஈரப்பதத்தைக் குறைக்கவும், ஆற்றலைச் சேமிக்கவும், உங்கள் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

ஏசியின் உள்ளே பூஞ்சை காளான் வளர வாய்ப்புள்ளது

மழைக்காலத்தில் காற்றில் அதிகரிக்கும் ஈரப்பதம் ஏசியின் வடிகட்டிகள் மற்றும் குழாய்களுக்குள் சென்று சேரும். இந்த பாகங்களை அடிக்கடி சுத்தம் செய்யாவிட்டால், பூஞ்சை காளான் உருவாகி, ஏசியில் இருந்து துர்நாற்றம் வீசுவதோடு, இருமல் மற்றும் தும்மல் போன்ற சுவாசப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் வடிகட்டிகளை சுத்தம் செய்வது அவசியம் செய்ய வேண்டிய எளிய பராமரிப்பு நடவடிக்கையாகும், இது உங்கள் அறையின் காற்றின் தரத்தை மேம்படுத்துவதோடு உங்கள் ஏசியை சீராக இயங்க வைக்கும்.

மின்சார பிரச்சினைகள்(Power Fluctuations) ஏசியை சேதப்படுத்தும்

மழைக்காலத்தில் ஏற்படும் மிகவும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்று அடிக்கடி நிகழும் மின்சாரத் துண்டிப்பு, குறிப்பாக சென்னை, பெங்களூர், மும்பை போன்ற பெருநகரங்களில் இவை அடிக்கடி நிகழும். சரியான Stabilizer இல்லாவிட்டால், திடீர் மின் ஏற்ற இறக்கங்கள் உங்கள் ஏசியின் உள்ளே உள்ள சாதனங்களை சேதப்படுத்தும். ஏசியால் ஏற்படும் பெரிய செலவுகளைத் தடுக்க மின் ஏற்ற இறக்கங்களைத் தடுக்கும் சாதனங்களை வேண்டும்.

மழை அவுட்டோர் யூனிட்டின் செயல்திறனை பாதிக்கும்

ஒருவேளை உங்கள் வீட்டில் ஸ்பிளிட் ஏசி அமைப்பு இருந்தால் அதன் வெளிப்புற கூறு மழைநீர், தேங்கி நிற்கும் நீர் மற்றும் மழைக்காலங்களில் அடைபட்ட வடிகால்களால் பாதிக்கப்படக்கூடியது. இந்த நிலைமைகள் துரு பிடிப்பது அல்லது இயந்திர கோளாறுகளுக்கு வழிவகுக்கும், இது உங்கள் ஏசியின் செயல்திறனைக் குறைக்கும். அவுட்டோர் யூனிட் சரியான வடிகால் வசதியுடன் கூடிய ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியில் நிலைநிறுத்துவது அல்லது கனமழைக்குப் பிறகு அதை ஆய்வு செய்வது சேதத்தைத் தவிர்க்க உதவும்.

அதிக குளிர் ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்

மழைக்காலம் இயற்கையாகவே குளிர்ச்சியாகவும் ஈரப்பதமாகவும் இருக்கும். உங்கள் ஏர் கண்டிஷனரை 18 டிகிரி செல்சியஸ் போன்ற மிகக் குறைந்த வெப்பநிலையில் அமைப்பது, தொண்டை புண் மற்றும் உடல் வலி போன்ற உடல்நலப் பிரச்சினைகள ஏற்படுத்தும். அறைக்குள் காற்றைச் சுற்றுவதற்கு ஒரு விசிறியுடன் சேர்ந்து, 24 முதல் 26 டிகிரி செல்சியஸ் வரை மிதமான வெப்பநிலையைப் பராமரிப்பது மிகவும் வசதியானது மற்றும் ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படுவதைத் தவிர்க்கிறது.

Story first published: Tuesday, July 29, 2025, 16:03 [IST]
Desktop Bottom Promotion