சாதத்தை குழையாமல் பூ மாதிரி உதிரி உதிரியாக சமைக்கணுமா? இந்த சின்ன விஷயத்தை பண்ணுங்க போதும்...!

தென்னிந்தியாவின் முதன்மையான உணவுப்பொருள் எதுவென்றால் சந்தேகத்திற்கு இடமின்றி அது அரிசிதான். அரிசியில் சமைக்கப்படும் சாதம்தான் இந்தியாவின் பிரதான உணவாக இருக்கிறது. ஆனால் சாதம் சரியான பதத்தில் இருந்தால் மட்டுமே அதனை முழுமையாக ரசித்து உண்ண முடியும்.

பெரும்பாலும் உணவங்களில் நாம் அனைவரும் பஞ்சு போல மென்மையாகவும், உதிரியாகவும் சாப்பிடுவோம், ஆனால் அதே மாதிரி நாம் வீட்டில் சமைக்க முயற்சித்தால் நிச்சயமாக நாம் தோல்வியைத்தான் தழுவுவோம். சாதம் தயாரிப்பது எளிதானது, ஆனால் பெரும்பாலான மக்கள் அதைச் சரியாகச் செய்யத் தவறி சாதத்தை பொங்கலாக மாற்றுகிறார்கள்.

How to Cook Perfect Rice Without Sticking Together in Tamil

சாதத்தை சரியாக சமைக்க, சரியான அளவு தண்ணீர் மற்றும் சரியான அரிசியை தேர்ந்தெடுக்க வேண்டும். உங்கள் வீட்டில் சாதத்தை ஹோட்டலில் சமைப்பது போல சிறப்பாக சமைக்க உதவும் சில பயனுள்ள குறிப்புகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

சரியான அரிசியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்

சாதத்தை பர்பெக்ட்டாக சேமிக்க நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய முதல் மற்றும் முக்கிய விதி சரியான அரிசியைத் தேர்ந்தெடுப்பதாகும். அதாவது, அரிசி சிறியதாக இருந்தால், அது ஒட்டக் கூடிய தன்மையுடையதாக இருக்கும்.

அதன் அரிசி எப்போதும் ஒன்றாக ஒட்டிக்கொண்டிருக்கும். அதேசமயம், நீளமான அரிசி ஒட்டும் தன்மை குறைவாக இருக்கும். மல்லிகை அல்லது பாசுமதி அரிசி ஒட்டாது. ஏனெனில் வெள்ளை அல்லது குட்டையான அரிசியில் மாவுச்சத்து அதிகம் மற்றும் பாஸ்மதி அரிசியில் மாவுச்சத்து மிகக் குறைவு.

சரியான அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும்

அரிசியில் எவ்வளவு தண்ணீர் சேர்க்க வேண்டும் என்பது மிகவும் சவாலுக்குரிய விஷயமாகும். நாம் அனைவரும் தண்ணீரை அளவிடுவதற்கான வெவ்வேறு வழிகளைக் கொண்டுள்ளோம். பொதுவாக 1 கப் அரிசிக்கு 1.5 கப் தண்ணீர் போதுமானது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

நீங்கள் மைக்ரோவேவ் அல்லது அடுப்பில் அரிசி தயாரிக்கிறீர்கள் என்றால், தண்ணீரின் அளவு 2 கப் இருக்கு வேண்டும். இதனுடன் அரிசியை எவ்வளவு நேரம் ஊற வைக்கிறீர்கள் என்பதும் முக்கியமானது.

இது அரிசி சமைக்கும் நேரத்தைக் குறைக்கிறது மற்றும் அரிசி வேக குறைவான தண்ணீரே பொழுதுமானது. நீங்கள் அரிசியை முன்னரே ஊறவைத்திருந்தால், தண்ணீரின் அளவை அரை கப் குறைக்கவும்.

அரிசியை பாஸ்தா போல சமைக்கவும்

அரிசியை பாஸ்தா போல சமைக்க வேண்டும், நீங்கள் பானையில் அல்லது பாத்திரத்தில் அரிசியை வேகவைத்தால், 1 கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் சேர்த்து, அது ஒரு கொதி வரும் வரை சமைக்கவும். அதன் பிறகு, அரிசியை 2-3 நிமிடங்கள் குறைந்த தீயில் வைக்கவும்.

அரிசி 90 சதவீதம் வெந்ததும், தீயை அணைத்து, அரிசியை 2 நிமிடம் மூடி வைக்கவும். அதன் பிறகு, தண்ணீரை வடிகட்டி, அரிசியை அதே பாத்திரத்தில் மூடி வைக்கவும். இந்த வழியில், அரிசி சரியாக சமைக்கப்படும் மற்றும் சத்தானதாகவும் இருக்கும்.

எண்ணெய் மற்றும் எலுமிச்சைச்சாறு

ஹோட்டலில் பரிமாறுவது போல உதிரி உதிரியான சாதத்தைத் தயாரிக்க, ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து சூடாக்கவும். கொதிக்க ஆரம்பித்ததும் ஊறவைத்த அரிசியை சேர்க்கவும். 2-3 நிமிடங்களுக்குப் பிறகு 1 தேக்கரண்டி எண்ணெய் மற்றும் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும்.

பாதியாக மூடி 3-5 நிமிடங்கள் சமைக்கவும். அதற்குப் பிறகு, உங்கள் கையால் 2-3 அரிசியை எடுத்து அழுத்திப் பார்க்கவும், அரிசி எளிதில் உடைந்தால் அரிசி நன்கு வந்துவிட்டது என்று அர்த்தம். அதை வடிகட்டி, ஒரு தட்டில் எடுத்து பரிமாறவும். எண்ணெய் அரிசியை உதிரி உதிரியாக மாற்றும் அதே வேளையில், எலுமிச்சை சாறு சாதத்தின் சுவையையும் அதிகரிக்கும்.

குக்கரில் எப்படி சமைப்பது?

நீங்கள் பிரஷர் குக்கரில் அரிசியை சமைக்கிறீர்கள் என்றால், அதனை சரியான பதத்தில் சமைப்பது என்பது சற்று சவாலானது. இதற்கு முதலில் பிரஷர் குக்கரில் நெய்யை நன்றாக தடவவும். அதன் பிறகு அரிசி மற்றும் தண்ணீர் சேர்த்து 3 விசில் வரை விடவும். நீங்கள் மேலே எதையும் ஊற்ற வேண்டியதில்லை மற்றும் அரிசியும் ஒட்டாது.

Story first published: Thursday, August 10, 2023, 16:33 [IST]
Desktop Bottom Promotion