Latest Updates
-
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன?
World Sickle Cell Day 2026: அரிவாள் செல் நோய் என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்!
World Sickle Cell Day 2026: நமது உடலில் உள்ள இரத்தம் உயிரை இயக்கும் ஒரு முக்கியமான திரவமாகும். இது உடலின் பல்வேறு பகுதிகளுக்கு ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு, வளர்சிதை மாற்றக் கழிவுகளையும் வெளியேற்றுகிறது. இந்த இரத்தம் இல்லாவிட்டால், முக்கிய உறுப்புகளால் செயல்பட முடியாது மற்றும் உயிர்வாழ்வதும் சாத்தியமற்றதாகிவிடும். இப்படிப்பட்ட இரத்தத்தில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். அதில் ஒன்று தான் 'அரிவாள் செல் நோய்'.

இந்த அரிவாள் செல் நோய் ஒரு அரிதான இரத்த கோளாறு. இந்த அரிவாள் செல் நோய் குறித்த விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் சபையால் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 19 ஆம் தேதி உலக அரிவாள் செல் தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்த தினத்தை முன்னிட்டு, அரிவாள் செல் நோய் என்றால் என்ன, அதன் அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள் குறித்து சென்னையில் உள்ள கிளீனீகிள்ஸ் மருத்துவமனையின் உள் மருத்துவம் மற்றும் நீரிழிவு சிகிச்சைத் துறை மூத்த ஆலோசகரான டாக்டர்.S.பிரசன்ன கார்த்திக் அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையிடம் பகிர்ந்து கொண்டார்.
அரிவாள் செல் நோய் என்றால் என்ன?
"அரிவாள் செல் இரத்த சோகை என்பது பெற்றோரிடமிருந்து மரபணு ரீதியாகப் பெறப்படும் ஒரு இரத்தக் கோளாறு ஆகும். இது நுரையீரலிலிருந்து உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ஆக்சிஜனைக் கொண்டு செல்ல வேண்டிய சிவப்பு இரத்த அணுக்களைப் பாதிக்கிறது.
அரிவாள் செல் இரத்த சோகை (Sickle Cell Anemia) உள்ளவர்களுக்கு, சில குறிப்பிட்ட நோய்த்தொற்றுகளின் போதோ அல்லது இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறையும் போதோ, சில சிவப்பு இரத்த அணுக்கள் மென்மையாகவும் வட்டமாகவும் இருப்பதற்குப் பதிலாக, கடினமாகவும் ஒட்டும் தன்மையுடனும் மாறி, பிறை அல்லது 'அரிவாள்' வடிவத்தைப் பெறுகின்றன. இந்த அசாதாரண செல்கள் சாதாரண சிவப்பு இரத்த அணுக்களை விட எளிதில் சிதையக்கூடியவை; இதனால் இத்தகைய நோயாளிகளுக்கு இரத்த சோகை ஏற்படுகிறது" என்று கூறினார்.
அரிவாள் செல் நோயின் அறிகுறிகள்
"அரிவாள் செல் இரத்த சோகையானது எளிதில் சோர்வடைதல், மூச்சுத்திணறல் மற்றும் கால்களில் வீக்கம் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. இந்த அசாதாரண செல்கள் இரத்த நாளங்கள் வழியாக எளிதாக நகர்வதில்லை; மாறாக, அவை ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டு அடைப்புகளை உருவாக்குகின்றன. இது இரத்த ஓட்டத்தைத் தடுக்கக்கூடும்.
எலும்புகள், விரல்கள் அல்லது உடலின் பிற பகுதிகளில் இரத்த ஓட்டம் தடைபடும் போது, அது கடுமையான வலியை ஏற்படுத்துகிறது. மூளையில் அடைப்பு ஏற்பட்டால், அது ஒரு சிறிய பக்கவாதம் முதல் முழுமையான பக்கவாதம் வரை ஏற்படுத்தலாம்" என்று கூறினார்.
அரிவாள் செல் நோய்க்கான சிகிச்சைகள்
"தற்போது அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒரே தீர்வு எதுவும் இல்லையென்றாலும், சிகிச்சைகளால் அரிவாள் செல் இரத்த சோகை உள்ளவர்கள் சிறப்பாகவும் நீண்ட காலமும் வாழ பெரிதும் உதவியுள்ளன.
சிகிச்சையில் பொதுவாக வலி நிவாரணம், இரத்த அணுக்கள் அரிவாள் வடிவமாக மாறுவதைக் குறைப்பதற்கான மருந்துகள் மற்றும் தேவையின் போது இரத்த மாற்று சிகிச்சை ஆகியவை அடங்கும்.
எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை மற்றும் மரபணு சிகிச்சை ஆகியவை தகுதியுள்ள நோயாளிகளுக்குப் புதிய நம்பிக்கையை அளிக்கின்றன.
நோயை முன்கூட்டியே கண்டறிதல், மருத்துவரை தவறாமல் சந்தித்தல், போதுமான அளவு தண்ணீர் குடித்தல், நோய்த்தொற்றுகளுக்கு விரைவாக சிகிச்சை அளித்தல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுதல் ஆகியவை அரிவாள் செல் இரத்த சோகை உள்ளவர்கள் சுறுசுறுப்பான மற்றும் நிறைவான வாழ்க்கையை வாழ உதவும்" என்றும் டாக்டர் கூறினார்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
