Latest Updates
-
குருபெயர்ச்சியால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 4 ராசிகளுக்கு கூரையை பிச்சுட்டு அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம் -
10 வரமிளகாயும், சின்ன வெங்காயமும் இருந்தா இந்த கர்நாடகா கெம்பு சட்னியை அரைங்க - சுருக்குனு சூப்பரா இருக்கும் -
பாபா வாங்காவின் கணிப்பு படி 2026-ன் பிற்பகுதியில் உலகில் என்னென்ன சம்பவங்கள் நடக்கப்போகுது தெரியுமா? -
டெல்லியை ஆண்ட முதல் சுல்தான் யார்? அவர் எந்த வம்சத்தை சேர்ந்தவர் தெரியுமா? -
ஆந்திராவின் அட்டகாசமான வெஜ் புலாவ் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
ராகு சொந்த நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் முடிவுக்கு வரப்போகுதாம் -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ள பெண் மனைவியாக கிடைத்த ஆண்கள் உலகிலேயே அதிர்ஷ்டசாலியாம் -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. ஒரே மாதத்தில் உடல் எடையில் நல்ல மாற்றத்தை பாப்பீங்க.. -
இன்றைய ராசிபலன் 03 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்குமாம் -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்...
எலித்தொல்லை இல்லாமல் வீட்டில் நிம்மதியாக இருக்க இந்த எளிய வழிகள் போதுமாம்...!
இந்திய சமையலறையில் இன்றியமையாத பொருளாக பிரியாணி இலை உள்ளது. காய்கறி முதல் இறைச்சி வரை அனைத்து உணவுகளிலும் நறுமணத்திற்காக பிரியாணி இலை சேர்க்கப்படுகிறது.
பெரும்பாலான வீடுகளில் எலிகள், கரப்பான் பூச்சி, சிலந்தி போன்ற உயிரினங்கள் தொல்லை அதிகமாக இருக்கும். இவற்றை சமாளிப்பது பெரும் கடினமாக இருக்கும். மேலும், பெரும்பாலான பெண்கள் எலிகள் மற்றும் சிலந்திகளுக்கு பயப்படுகிறார்கள். அவை வீட்டில் இருப்பதை வெறுக்கிறார்கள். அவர்களின் பயத்தின் தோற்றம் மற்றும் காரணம் உண்மையில் விவாதத்திற்குரியது. எலி அல்லது சிலந்தியை பார்த்து திடீரென பயந்து கத்திவிடுவார்கள். இருப்பினும், வீட்டில் எலிகள் மற்றும் சிலந்திகள் இருப்பதற்கான அவர்களின் வெறுப்பை கேள்விக்குட்படுத்த முடியாது.

இந்த உயிரினங்கள் வீட்டை அசுத்தமாக்குவது மட்டுமின்றி, பல நோய்களை உண்டாக்கும் கிருமிகளை வீட்டைச் சுற்றிலும் பரவுவதற்கு காரணமாக இருக்கின்றன. இதன் விளைவாக, எலிகள் மற்றும் சிலந்திகள் இருக்கும் வீடுகளில் மக்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுகிறார்கள். ஆதலால், இப்பதிவில், எலிகள் மற்றும் சிலந்திகளை விரட்ட உதவும் வீட்டு வைத்தியம் பற்றி பார்க்கலாம்.

பிரியாணி இலை
இந்திய சமையலறையில் இன்றியமையாத பொருளாக பிரியாணி இலை உள்ளது. காய்கறி முதல் இறைச்சி வரை அனைத்து உணவுகளிலும் நறுமணத்திற்காக பிரியாணி இலை சேர்க்கப்படுகிறது. பிரியாணி இலையின் வாயில் நீர் வடியும் நறுமணத்தை மிக சிலரே விரும்புவதில்லை. இருப்பினும், எலிகள் மற்றும் சிலந்திகளை கையாள்வதில் இது ஒரு சிறந்த முகவர் என்பது பலருக்கு தெரியாது. பிரியாணி இலையை சிறிய துண்டுகளாக நறுக்கி, எலிகள் மற்றும் சிலந்திகள் வரும் அல்லது இருக்கும் அனைத்து பகுதிகளிலும் வைக்கவும். பிரியாணி இலைகளின் வலுவான நறுமணம் மீதமுள்ளவற்றை கவனித்துக் கொள்ளும்.

கடலை வெண்ணெய்
வேர்க்கடலை வெண்ணெய் உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும்? அதிகம் பிடிக்கும் என்றால், உங்கள் வீட்டில் உள்ள எலிகள் மற்றும் சிலந்திகளும் அவற்றை விரும்புகின்றன. எனவே, அதை அவர்களுடன் பகிர்ந்து கொள்வது நல்ல யோசனையாக இருக்கும். இவைகளை பிடிக்க கடலை வெண்ணெய் ஒரு நல்ல தூண்டில் என்பதை நிரூபிக்கும். எலிகளால் இதை எதிர்க்க முடியாது. நிச்சயமாக அதை அணுகும். வெண்ணெயின் ஒட்டும் தன்மையால், நீங்கள் பிடிக்காமலே எலி அதில் மாட்டிக்கொள்ளும், அதிலிருந்து தப்பிக்க முடியாது . சிலந்திகளைப் பொறுத்தவரை, அவற்றின் மூட்டுகள் அதில் உள்ள வேர்க்கடலை வெண்ணெயுடன் ஒட்டும். இதனால் அவை தப்பிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.

புதினா பற்பசை
உங்கள் இடத்திற்கு எலிகள் எங்கிருந்து வருகின்றன என்பதை நீங்கள் அறிந்தால் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், எலி இருக்கும் வளை திறப்பு அல்லது துளைக்கு முன்னால் ஒரு நல்ல அளவு பற்பசையை தடவ வேண்டும். நீங்கள் இதை இன்னும் சிறிது தூரம் எடுத்து, பேஸ்போர்டுகள் அல்லது அலமாரிகளின் அடிப்பகுதியில் தேய்க்கலாம். அது உங்கள் இடத்தில் உள்ள அனைத்து எலிகளையும் கவனித்துக் கொள்ளும். சிலந்திகளுக்கு, அவை ஒரே இடத்தில் மற்றும் அதைச் சுற்றி வலைகளை உருவாக்குவதை நீங்கள் கவனித்தால் (வழக்கமாக அது வீட்டின் மூலைகள் அல்லது கதவுகள் மற்றும் ஜன்னல்களின் தாழ்ப்பாள்களாக இருக்கும்) அந்தப் பகுதியைச் சுற்றி சிறிய அளவிலான புதினா பற்பசையைப் பயன்படுத்துங்கள். பின்பு பலனை நீங்களே காண்பீர்கள்.

பேக்கிங் சோடா
எலிகள் மற்றும் சிலந்திகளை அகற்றுவதற்கான பாதுகாப்பான வழிகளில் பேக்கிங் சோடாவும் ஒன்று. எலிகள் மற்றும் சிலந்திகள் வீட்டை விட்டு வெளியேறியவுடன், இதை சுத்தம் செய்வதும் மிகவும் எளிது. உலர்ந்த துணி அல்லது வெற்றிட கிளீனரை கொண்டு இவற்றை சுத்தம் செய்துவிடலாம். இங்கே நீங்கள் சிலந்தி வலைகள் அல்லது சிலந்திகள் தங்கள் வலையை அமைக்க வாய்ப்புள்ள பகுதிகளில் பேக்கிங் சோடாவை ஒரு சிறிய அளவு பயன்படுத்த வேண்டும். எலிகளுக்கு கூட இதையே மீண்டும் செய்யவும். இரண்டு பயன்பாடுகள் மூலம், உங்கள் இடத்தில் சிலந்திகள் மற்றும் எலிகள் இல்லை என்பதைக் கண்டு நீங்கள் மகிழ்ச்சியுடன் ஆச்சரியப்படுவீர்கள்.

எஃகு கம்பளி
எலிகள் நுழையும் பாதை அல்லது சிலந்திகளின் மறைவிடத்தை நீங்கள் கண்டறிந்தவுடன் நாடக்கூடிய இறுதி விஷயம் இதுதான். இங்கே நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், எஃகு கம்பளியை துண்டுகளாக உடைத்து, சிலந்திகள் வசிப்பதாகத் தோன்றும் பகுதிகள் அனைத்திலும் போட வேண்டும். எலிகள் தங்கும் நுழைவாயிலை எஃகு கம்பளியால் நிரப்பவும். இது எலிகள் வீட்டிற்குள் நுழைவதை தடுக்கும். இருப்பினும், வீட்டின் அனைத்து நுழைவாயில்களும் மூடப்பட்டிருப்பதை உறுதி செய்ய சிறப்பு கவனம் செலுத்துங்கள்.



Click it and Unblock the Notifications