Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
உங்கள் வீட்டில் பல்லிகளின் தொல்லை அதிகமாக உள்ளதா? இனி கவலையே வேண்டாம்... இதோ விரட்ட எளிய வழிகள்..!
பல்லிகள் எல்லா வீட்டிலும் சகஜம். உலகம் முழுவதும் 600க்கும் மேற்பட்ட பல்லிகள் உள்ளன. இவை மனிதர்களுக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தாது. மேலும், வீட்டில் உள்ள பூச்சிகளை உண்பதால் அவை நமக்கு நல்லது. இருப்பினும், நம்மில் பெரும்பாலோர் பல்லிகளை விரும்புவதில்லை. அவர்களுக்கு பல்லிகளை பார்த்தாலே பயமாக இருக்கும். இரவு நேரங்களில் நம் வீட்டுச் சுவர்களில் பல்லிகள் தோன்றுவதைப் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். வீட்டில் ஒரு பல்லி இருந்தால் போதும்.. அவை முட்டையிட்டு பெருகி வீடு முழுவதும் ஆங்காங்கே பல்லிகளால் நிறைந்து காணப்படும்.
அதுமட்டுமல்லாமல் இரவில் பல்லியின் சத்தம் நம்மை தூங்க முடியாமல் செய்கிறது. சில பேருக்கு அதன் சத்தம் எரிச்சலாகவும் இருக்கும். பல முயற்சிகள் செய்தும் உங்கள் வீட்டிலிருக்கும் பல்லிகளை விரட்ட முடியவில்லை என கவலையாக இருக்கா? அப்படிப்பட்டவர்களுக்காக இப்போது பல்லிகளை விரட்டுவது எப்படி? என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

1. பொதுவாக பூச்சிகளுக்கு அஞ்சும் நபர்கள் நம்மிடையே பலரும் உண்டு. குறிப்பாக பல்லியைக் கண்டால் பலரும் பதறியடித்து அலறுவார்கள். ஆனால் அந்த பல்லிகளோ எல்லா வீட்டிலும் எங்காவது சுவரில் தென்பட்டு பயத்தையும் சலிப்பையும் ஏற்படுத்தும்.
2. அதனால் இதை வீட்டை விட்டு விரட்ட, வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள். வீட்டின் உட்புற சுவர்கள் மற்றும் தரையை பாக்டீரியா எதிர்ப்பு கரைசல் மூலம் தொடர்ந்து சுத்தம் செய்ய வேண்டும். ஜன்னல்கள் மற்றும் மூலைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
3. காபி மற்றும் புகையிலை தூள் தண்ணீரில் கலந்து பேஸ்ட் செய்யவும். அந்த கட்டிகளை சுவர்களில் ஒட்டவும். மயில் இறகுகள் பல்லிகளை பயமுறுத்துகின்றன. அவற்றை வீட்டைச் சுற்றி வைக்கவும்.
4. பல்லிகள் ஒளியால் ஈர்க்கப்படுகின்றன. அதனால் முடிந்தவரை பல்புகளை அணைத்தால் பல்லிகள் அதிகளவில் வராது. அதனால் தேவையற்ற நேரங்களில் லைட்டை நிறுத்திவிட்டு இருந்தால் பல்லிகள் வெளிச்சம் இருக்கும் இடத்தை நோக்கி ஓடிவிடும்...
5. வெங்காயத்தின் கடுமையான வாசனையை பல்லிகள் விரும்புவதில்லை. வெங்காயத்தை வெட்டியோ வைத்தாலோ அல்லது சாற்றை சுவர்களில் தெளித்தால் பல்லிகள் போய்விடும்.
6. வெங்காய தோல்களையும் வெட்டி ஜன்னல்கள் மற்றும் மூலைகளில் வைத்தால் போதும். நாப்தலீன் பந்துகளின் வாசனையிலிருந்தும் பல்லிகள் ஓடுகின்றன. அவற்றை வீட்டில் அங்காங்கே வைப்பது நன்மை பயக்கும்.
7. பிரியாணி இலையை எரித்து அந்த புகை வீடு முழுவதும் பரவுமாறு செய்ய வேண்டும். பல்லிகளுக்கு அந்த வாசனை பிடிக்காது. வீட்டின் சுவர்களில் விரிசல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதன் இடுக்குகளிலும் பல்லிகள் இருக்கும். சுவர்களுக்கு எதிராக மரச்சாமான்களை வைக்கக்கூடாது. 6 அங்குல இடைவெளியை விட்டு வைத்திருங்கள்.
8. மயில் இறகுகள் பல்லிகளை பயமுறுத்துகின்றன. எனவே மயில் இறகுகளை வீட்டில் வைத்திருந்தால் அந்த பகுதிகளை பல்லிகள் அணுகாது. அதேபோல, காபி மற்றும் தக்காளி பொடியை தண்ணீரில் கலந்து பேஸ்ட் செய்து அவற்றை வைத்தாலும் பல்லிகள் அங்கு வராது.
9. நாம் சாப்பிட்டு வீசும் முட்டை ஓடுகளை வைத்தால் அங்கெல்லாம் பல்லி வராது. அந்த வாசனைக்கு பல்லிகள் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்துவிடும்.
10. கற்பூரவல்லி இலை வாசனைக்கு பல்லி வராது. எனவே, இந்த தழைகளை எரித்து அதன் புகைகளை வீட்டில் பரவ விட்டால் பல்லி தொல்லை இருக்காது.



Click it and Unblock the Notifications