Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
தோட்டத்திலிருந்து எலிகளை விரட்டும் வழிகள்!!!
நாம் பாடுபட்டு பண்படுத்திய தோட்டங்களுக்கு பூச்சிகள் தான் எதிரிகளாக இருக்கின்றன. தோட்டத்தை பராமரிக்கும் மனிதனுக்கு, அங்கிருக்கும் தாவரங்களின் நலனுக்கு பூச்சிகள் எந்தவளவுக்கு காரணமாக உள்ளன என்றும், தோட்டத்தை பூச்சிகளிடமிருந்து எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதும் தான் முக்கியமான விஷயமாக இருக்கும். இவ்வாறான தொல்லைகளில் ஒன்றாக கருதப்படும் எலிகளை தோட்டங்களிலிருந்து விரட்டும் வழிகளைப் பற்றி தான் இந்த கட்டுரையில் படிக்கப் போகிறோம். இந்த குறிப்புகள் பூச்சிகளின் தொல்லைகளை தவிர்த்துக் கொள்ளும் வழிகளை உங்களுக்கு சொல்லும் என்பதில் ஐயமில்லை. மேலும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
மனிதர்களுடன் வசிக்க பழகி விட்டிருக்கும் எலிகள் தான், தோட்டங்களையும் வசிப்பிடமாக கொண்டிருக்கின்றன. இவை அங்கிருக்கும் தானியங்களுக்கு மிகவும் அபாயம் தரும் விஷயங்களாக இருப்பதற்கு காரணம், இவற்றை கட்டுப்படுத்த முடியாமல் இருப்பது தான்! ஆம், நம்முடைய தோட்டங்களிலிருந்து எலிகளை முழுமையாக ஒழித்துக் கட்டுவதென்பது நடவாத காரியமாகும். எனினும், தோட்டங்களுக்கு இந்த எலிகள் வந்து செல்வதை, கட்டுப்படுத்த முடியும் என்பது ஆறுதலான சங்கதி.

முதலில், எலிகள் உங்களுடைய தோட்டத்திற்கு வரக்கூடிய நேரங்களில் மிகவும் தனித்தன்மையானவை என்பதால், அந்த நேரங்களைக் கணிப்பது மிகவும் கடினமான விஷயமாக இருக்கும். எனினும், தக்காளிகள் அல்லது உருளைக் கிழங்குகளை கடித்து போட்டு விட்டிருப்பதைக் கண்டால், எலிகள் வந்து போயிருக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ளலாம். சில நேரங்களில், இலைகள் கூட கடித்து விடப்பட்டிருக்கும். நீங்கள் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான அடையாளமாக இதைக் கொள்ளலாம். இவ்வாறு எலி வந்து போவதை தெரிந்து கொண்ட பின்னர், அவற்றை விரட்டியடிக்கும் வழிகளில் கவனம் செலுத்தலாம்.
முதலாவதாக, உங்களுடைய வீட்டிலிருந்து தோட்டத்திற்குள் வர எந்தவிதமான ஓட்டைகளும் இல்லாததை உறுதி செய்யுங்கள். இவ்வாறு எலிகள் தோட்டத்திற்கு வர வழி காட்டும் துவாரங்களை அடைத்து விட்டால் முதல் பணி தொடங்கி விட்டது எனலாம்.
அடுத்ததாக, உங்களிடம் செல்லப்பிராணிகள் இருந்தால், அவற்றின் உணவுக் கிண்ணங்களை சுத்தமாக வைத்திருப்பதை உறுதி செய்யுங்கள். ஏனெனில், செல்லப் பிராணிகளுக்கு உணவு வைக்கும் பாத்திரங்களால், எலிகளும் ஈர்க்கப்படுகின்றன. அவை வழக்கமாகவே மோசமான சுகாதாரமுடைய இடங்களுக்கு சென்று வரும் என்பது உண்மை. எனவே, உங்களுடைய தோட்டமும் கூட சுத்தமாக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்யுங்கள்.
எட்டிக்காய், கற்பூரம் மற்றும் லாவெண்டர்களை பயன்படுத்துங்கள். இவை பூச்சிகளை மற்றும் எலிகளை விரட்டியடிப்பதில் சிறந்த பங்கு வகிக்கும் பொருட்களாகும். மேலும், அம்மோனியம் பூச்சிக் கொல்லிகளை அருகிலுள்ள கடைகளில் கேட்டு வாங்கி பயன்படுத்துங்கள். அம்மோனியாவின் நெடியை வாங்கிக் கொண்டு எலிகள் அதிக நேரம் இருப்பதில்லை.
இறுதியாக, உங்களுடைய தோட்டத்தில் எலிகளை பிடிக்கும் பொறிகளை அமைத்திடுங்கள். எலிகளை விரட்டுவதில் மிகவும் திறமையான வழிமுறையாக இது இருக்கும். உங்களுடைய தோட்டத்திலிருந்து எலிகளை விரட்டுவதற்கு உதவியாக, கடைகளில் பல்வேறு வகையான எலிப்பொறிகள் விற்கப்பட்டு வருகின்றன. அவற்றை வாங்கிப் பயன்படுத்துங்கள் மற்றும் எலிகளை விரட்டுங்கள்.



Click it and Unblock the Notifications











