Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
தோட்டத்தில் மாட்டு சாணத்தை உரமாக பயன்படுத்துவதற்கான சில டிப்ஸ்...
தோட்டத்தில் வளரும் செடிகள் நன்கு செழிப்புடன், எந்த ஒரு பூச்சியும் தாக்காமல் வளமாக வளர்வதற்கு உரம் மிகவும் இன்றியமையாதது. இத்தகைய உரம் செடிகளில் தாக்கும் பூச்சிகளை அழிப்பதோடு, செடியின் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும். ஏனெனில் உரங்களில் நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்றவை இருக்கும். இவை தான் செடிகளை புரோட்டீனை உற்பத்தி செய்ய வைத்து, வேர்களையும், தண்டு மற்றும் இவைகளை நன்கு வலுவோடும் செழிப்புடனும் வளர வைக்கும்.
உரங்களில் பல உள்ளன. மேலும் தற்போது கெமிக்கல் கலந்த பல உரங்களும் மார்கெட்டுகளில் வந்துள்ளன. எனவே இத்தகைய கெமிக்கல் உரங்களையும் தற்போது பலர் பயன்படுத்துகிற்னர். இருப்பினும் நிறைய தோட்டங்களில் மாட்டு சாணத்தையும் பயன்படுத்துகின்றனர். ஆனால் எல்லாவற்றையும் விட, இது ஒரு இயற்கையான மற்றும் செடிகளை ஆரோக்கியத்துடன் வைக்க உதவும் உரங்களில் முதன்மையானது. இப்போது அத்தகைய மாட்டு சாணத்தை எப்படி உரமாக பயன்படுத்துவது என்பதற்கான சில டிப்ஸ்களை கொடுத்துள்ளோம். அதைப் பார்ப்போமா!!!

* நல்ல ப்ரஷ்ஷாக இருக்கும் மாட்டுச் சாணத்தையும் செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்தலாம். அதற்கு செடியைச் சுற்றிலும், அதனை போட்டு, காய வைத்து, பின் அதனை லேசாக கொத்தி மண்ணுடன் கலக்குமாறு செய்யலாம்.
* மாட்டு உரத்தில் ஊட்டச்சத்துக்கள் அளவுக்கு அதிகமாக இருப்பதால், அதனை வைக்கோலுடன் சேர்த்து போடலாம்.
* ஒரு வேளை ஆர்கானிக் உரம் செய்ய வேண்டுமெனில், மாட்டுச் சாணத்தை காய்கறிகளின் தோல், தோட்ட குப்பைகளுடன் கலந்து, உரம் போடலாம்.
* குறிப்பாக செடியை தொட்டியில் வளர்க்கும் போது, அதற்கு அதிகப்படியான மாட்டு சாணத்தைப் போடக்கூடாது. மேலும் மாட்டு சாணத்தை உரமாக போடும் போது, அதற்கு போதிய வெயில், காற்று மற்றும் சிறிது அதிகப்படியான இடம் போன்றவை தேவைப்படும் எனவே அளவாக பயன்படுத்தினால், அது காய்ந்து நல்ல உரமாக இருப்பதோடு, செடியும் நன்கு வளரும்.
* தோட்டத்தில் செடியைச் சுற்றிலும் ஒரு கால்வாய் அமைக்கும்போது, அங்கு மண்ணுடன், மாட்டுச் சாணத்தை சரிசமமாக கலந்து செய்வதன் மூலமும், செடிக்கு போதிய சத்துக்கள் கிடைக்கும்.
இவையே மாட்டுச் சாணத்தை தோட்டத்தில் பயன்படுத்துவதற்கான சில டிப்ஸ்கள். வேறு ஏதாவது தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications