Latest Updates
-
மனிதத் தன்மையற்ற வரலாற்றின் டாப் 10 கொடூரமான அரசர்கள் - முதலிடத்தில் எந்த அரசர் இருக்கிறார் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ராகி பச்சை பயறு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா?
மண் மாற்றம் செடிகளை புத்துணர்ச்சியாக்கும் ....

தொட்டிகள் இடம்மாற்றம்
வீட்டிற்குள் நாம் வளர்க்கும் செடி, கொடி, வைத்துள்ள தொட்டிகள் போன்றவற்றில் சூரிய ஒளி படுவதற்கு வாய்ப்பே இல்லை. எனவே அந்த தொட்டிகளை 20 நாட்களுக்கு ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறையாவது சூரிய ஒளி படும்படி திண்ணை அல்லது போர்டிகோ போன்ற பகுதியில் வைக்க வேண்டும். இது தவிர இந்த இடங்களில் வைக்கும் செடிகளை இடத்தை மாற்றி வைப்பதன் மூலம் முகப்பு பாகம் மற்றும் போர்டிகோ பகுதியில் வைத்துள்ள செடிகளை 2 மாதத்திற்கு ஒரு முறை வீட்டிற்குள்ளே கொண்டு வருதல் போன்ற மாற்றத்தை கையாளலாம். மனதிற்கும் புத்துணர்ச்சியாக இருக்கும்.
தண்ணீர் தேவை
செடிகளுக்குத் தேவையான தண்ணீரை சரியாக வழங்கவேண்டும். 2 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் ஊற்றுவது செடிகளின் சீரான வளர்ச்சிக்கு ஏற்றதாகும். செடிகளின் வளர்ச்சி மிதமிஞ்சிவிட்டால் அவற்றை வெட்டி வளர்ச்சியை சீர்படுத்துவது அவசியம். அப்பொழுதுதான் அழகியலாக இருக்கும்.
நோயிலிருந்து பாதுகாப்பு
செடிகளில் படியும் தூசு முதலியவற்றை வாரம் ஒரு முறை தெளிப்பதன் மூலம் தண்ணீர் தெளித்து சுத்தப்படுத்த வேண்டும். பூச்சி , பூஞ்சான நோய் தாக்குதல் இருந்தால் தக்க தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மண்மாற்றம் அவசியம்
தொட்டிகளில் நிரப்பும் மண்ணை வருடத்திற்கு ஒருமுறையோ அல்லது இருமுறையோ மாற்றவேண்டும் அப்பொழுதுதான் செடிகளின் வளர்ச்சி சீராக இருக்கும். பழைய சத்தற்ற மண்ணாக இருந்தால் செடிகள் வளர்ச்சி குன்றிவிடும், பூக்கும், காய்க்கும் தன்மை நின்றுவிடும். எனவே தொட்டியின் மேல் பகுதி மண் அரை அடி அளவுக்கு எடுத்துவிட்டு புது மண்ணைக் கொண்டு நிரப்புதல் அவசியம் என்கின்றனர் தோட்டக்கலை நிபுணர்கள்.
இது போன்ற பராமரிப்பின் மூலம் செடிகள் நல்ல நிலையில் நீண்ட நாள் நம் வீட்டு அலங்கரிப்புக்கு பயன்படுத்தலாம். செடிகளுக்கு புத்துணர்ச்சி தருவதோடு மனதிற்கும் புத்துணர்ச்சி தரும்.



Click it and Unblock the Notifications