Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
மண் மாற்றம் செடிகளை புத்துணர்ச்சியாக்கும் ....

தொட்டிகள் இடம்மாற்றம்
வீட்டிற்குள் நாம் வளர்க்கும் செடி, கொடி, வைத்துள்ள தொட்டிகள் போன்றவற்றில் சூரிய ஒளி படுவதற்கு வாய்ப்பே இல்லை. எனவே அந்த தொட்டிகளை 20 நாட்களுக்கு ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறையாவது சூரிய ஒளி படும்படி திண்ணை அல்லது போர்டிகோ போன்ற பகுதியில் வைக்க வேண்டும். இது தவிர இந்த இடங்களில் வைக்கும் செடிகளை இடத்தை மாற்றி வைப்பதன் மூலம் முகப்பு பாகம் மற்றும் போர்டிகோ பகுதியில் வைத்துள்ள செடிகளை 2 மாதத்திற்கு ஒரு முறை வீட்டிற்குள்ளே கொண்டு வருதல் போன்ற மாற்றத்தை கையாளலாம். மனதிற்கும் புத்துணர்ச்சியாக இருக்கும்.
தண்ணீர் தேவை
செடிகளுக்குத் தேவையான தண்ணீரை சரியாக வழங்கவேண்டும். 2 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் ஊற்றுவது செடிகளின் சீரான வளர்ச்சிக்கு ஏற்றதாகும். செடிகளின் வளர்ச்சி மிதமிஞ்சிவிட்டால் அவற்றை வெட்டி வளர்ச்சியை சீர்படுத்துவது அவசியம். அப்பொழுதுதான் அழகியலாக இருக்கும்.
நோயிலிருந்து பாதுகாப்பு
செடிகளில் படியும் தூசு முதலியவற்றை வாரம் ஒரு முறை தெளிப்பதன் மூலம் தண்ணீர் தெளித்து சுத்தப்படுத்த வேண்டும். பூச்சி , பூஞ்சான நோய் தாக்குதல் இருந்தால் தக்க தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மண்மாற்றம் அவசியம்
தொட்டிகளில் நிரப்பும் மண்ணை வருடத்திற்கு ஒருமுறையோ அல்லது இருமுறையோ மாற்றவேண்டும் அப்பொழுதுதான் செடிகளின் வளர்ச்சி சீராக இருக்கும். பழைய சத்தற்ற மண்ணாக இருந்தால் செடிகள் வளர்ச்சி குன்றிவிடும், பூக்கும், காய்க்கும் தன்மை நின்றுவிடும். எனவே தொட்டியின் மேல் பகுதி மண் அரை அடி அளவுக்கு எடுத்துவிட்டு புது மண்ணைக் கொண்டு நிரப்புதல் அவசியம் என்கின்றனர் தோட்டக்கலை நிபுணர்கள்.
இது போன்ற பராமரிப்பின் மூலம் செடிகள் நல்ல நிலையில் நீண்ட நாள் நம் வீட்டு அலங்கரிப்புக்கு பயன்படுத்தலாம். செடிகளுக்கு புத்துணர்ச்சி தருவதோடு மனதிற்கும் புத்துணர்ச்சி தரும்.



Click it and Unblock the Notifications