Latest Updates
-
இன்றைய ராசிபலன் 09 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவை தட்டப்போகுதாம் -
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
மண் மாற்றம் செடிகளை புத்துணர்ச்சியாக்கும் ....

தொட்டிகள் இடம்மாற்றம்
வீட்டிற்குள் நாம் வளர்க்கும் செடி, கொடி, வைத்துள்ள தொட்டிகள் போன்றவற்றில் சூரிய ஒளி படுவதற்கு வாய்ப்பே இல்லை. எனவே அந்த தொட்டிகளை 20 நாட்களுக்கு ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறையாவது சூரிய ஒளி படும்படி திண்ணை அல்லது போர்டிகோ போன்ற பகுதியில் வைக்க வேண்டும். இது தவிர இந்த இடங்களில் வைக்கும் செடிகளை இடத்தை மாற்றி வைப்பதன் மூலம் முகப்பு பாகம் மற்றும் போர்டிகோ பகுதியில் வைத்துள்ள செடிகளை 2 மாதத்திற்கு ஒரு முறை வீட்டிற்குள்ளே கொண்டு வருதல் போன்ற மாற்றத்தை கையாளலாம். மனதிற்கும் புத்துணர்ச்சியாக இருக்கும்.
தண்ணீர் தேவை
செடிகளுக்குத் தேவையான தண்ணீரை சரியாக வழங்கவேண்டும். 2 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் ஊற்றுவது செடிகளின் சீரான வளர்ச்சிக்கு ஏற்றதாகும். செடிகளின் வளர்ச்சி மிதமிஞ்சிவிட்டால் அவற்றை வெட்டி வளர்ச்சியை சீர்படுத்துவது அவசியம். அப்பொழுதுதான் அழகியலாக இருக்கும்.
நோயிலிருந்து பாதுகாப்பு
செடிகளில் படியும் தூசு முதலியவற்றை வாரம் ஒரு முறை தெளிப்பதன் மூலம் தண்ணீர் தெளித்து சுத்தப்படுத்த வேண்டும். பூச்சி , பூஞ்சான நோய் தாக்குதல் இருந்தால் தக்க தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மண்மாற்றம் அவசியம்
தொட்டிகளில் நிரப்பும் மண்ணை வருடத்திற்கு ஒருமுறையோ அல்லது இருமுறையோ மாற்றவேண்டும் அப்பொழுதுதான் செடிகளின் வளர்ச்சி சீராக இருக்கும். பழைய சத்தற்ற மண்ணாக இருந்தால் செடிகள் வளர்ச்சி குன்றிவிடும், பூக்கும், காய்க்கும் தன்மை நின்றுவிடும். எனவே தொட்டியின் மேல் பகுதி மண் அரை அடி அளவுக்கு எடுத்துவிட்டு புது மண்ணைக் கொண்டு நிரப்புதல் அவசியம் என்கின்றனர் தோட்டக்கலை நிபுணர்கள்.
இது போன்ற பராமரிப்பின் மூலம் செடிகள் நல்ல நிலையில் நீண்ட நாள் நம் வீட்டு அலங்கரிப்புக்கு பயன்படுத்தலாம். செடிகளுக்கு புத்துணர்ச்சி தருவதோடு மனதிற்கும் புத்துணர்ச்சி தரும்.



Click it and Unblock the Notifications