Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
மண் மாற்றம் செடிகளை புத்துணர்ச்சியாக்கும் ....

தொட்டிகள் இடம்மாற்றம்
வீட்டிற்குள் நாம் வளர்க்கும் செடி, கொடி, வைத்துள்ள தொட்டிகள் போன்றவற்றில் சூரிய ஒளி படுவதற்கு வாய்ப்பே இல்லை. எனவே அந்த தொட்டிகளை 20 நாட்களுக்கு ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறையாவது சூரிய ஒளி படும்படி திண்ணை அல்லது போர்டிகோ போன்ற பகுதியில் வைக்க வேண்டும். இது தவிர இந்த இடங்களில் வைக்கும் செடிகளை இடத்தை மாற்றி வைப்பதன் மூலம் முகப்பு பாகம் மற்றும் போர்டிகோ பகுதியில் வைத்துள்ள செடிகளை 2 மாதத்திற்கு ஒரு முறை வீட்டிற்குள்ளே கொண்டு வருதல் போன்ற மாற்றத்தை கையாளலாம். மனதிற்கும் புத்துணர்ச்சியாக இருக்கும்.
தண்ணீர் தேவை
செடிகளுக்குத் தேவையான தண்ணீரை சரியாக வழங்கவேண்டும். 2 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் ஊற்றுவது செடிகளின் சீரான வளர்ச்சிக்கு ஏற்றதாகும். செடிகளின் வளர்ச்சி மிதமிஞ்சிவிட்டால் அவற்றை வெட்டி வளர்ச்சியை சீர்படுத்துவது அவசியம். அப்பொழுதுதான் அழகியலாக இருக்கும்.
நோயிலிருந்து பாதுகாப்பு
செடிகளில் படியும் தூசு முதலியவற்றை வாரம் ஒரு முறை தெளிப்பதன் மூலம் தண்ணீர் தெளித்து சுத்தப்படுத்த வேண்டும். பூச்சி , பூஞ்சான நோய் தாக்குதல் இருந்தால் தக்க தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மண்மாற்றம் அவசியம்
தொட்டிகளில் நிரப்பும் மண்ணை வருடத்திற்கு ஒருமுறையோ அல்லது இருமுறையோ மாற்றவேண்டும் அப்பொழுதுதான் செடிகளின் வளர்ச்சி சீராக இருக்கும். பழைய சத்தற்ற மண்ணாக இருந்தால் செடிகள் வளர்ச்சி குன்றிவிடும், பூக்கும், காய்க்கும் தன்மை நின்றுவிடும். எனவே தொட்டியின் மேல் பகுதி மண் அரை அடி அளவுக்கு எடுத்துவிட்டு புது மண்ணைக் கொண்டு நிரப்புதல் அவசியம் என்கின்றனர் தோட்டக்கலை நிபுணர்கள்.
இது போன்ற பராமரிப்பின் மூலம் செடிகள் நல்ல நிலையில் நீண்ட நாள் நம் வீட்டு அலங்கரிப்புக்கு பயன்படுத்தலாம். செடிகளுக்கு புத்துணர்ச்சி தருவதோடு மனதிற்கும் புத்துணர்ச்சி தரும்.



Click it and Unblock the Notifications











