Latest Updates
-
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
பசும்புல் தோட்டங்களை வளர்த்து பராமரிக்கலாம்

புல்தரை அமைக்கும் முன் நடைபாதை அமைக்கும் இடத்தையும், புல்தரை அமைக்கும் இடத்தையும் தேர்வு செய்யவேண்டும்.
அருகம்புற்கள்
அருகம்புல் என்று பொதுவாக அழைக்கப்படும் பெர்முட புல்லானது விரைவான வளர்ச்சி, வறட்சியைத் தாங்கும் தன்மை, குறைந்த நீர் தேவை மற்றும் அடிக்கடி வெட்டப்படுவதற்கான தன்மைகளைக் கொண்டுள்ளதால் இத்தகைய புல்லினை நீங்கள் பயன்படுத்தலாம்.
இதில் பூச்சிகளும் அண்டாது. பார்க்கவும் அழகாக இருக்கும். இவை ஒரு வேளை கோடைக்காலத்தில் வாடிப்போனாலும், மீண்டும் நீர் ஊற்றினால் பசுமையாக முளைத்துவிடும். இவை படரும் தன்மை கொண்டிருப்பதால் வளர்ப்பதும் எளிது, வறட்சி காலத்திலும் நீண்ட நாட்களுக்கு வாழும் தன்மை கொண்டது.
நடவு செய்யும் முறை
வேர்களை ஊன்றி புல்தரை அமைப்பதே சிக்கனமான முறையாகும். ஆனால் இம்முறையில் புல்தரை அமைப்பதற்கு அதிக காலம் தேவைப்படும். இதில் ஈரமான நிலையிலுள்ள தயார்படுத்தப்பட்ட நிலத்தில் சிறு வேர்களை ஊன்ற வேண்டும்.
நடவு செய்த ஆறுமாத காலத்தில் வேர்கள் நன்கு படர்ந்து வளர்ந்ததுடன் புல் வெட்டுதல், உருளையை உருளவிடுதல் மற்றும் நீர்ப்பாசனம் ஆகிய செயல்களை மேற்கொண்டு திடமான புல்தரையும் உருவாகிவிடும்.
சீராக வெட்டி பராமரிக்கலாம்
புல்வெட்டும் கருவியைக் கொண்டு சீரான உயரத்திற்கு புற்களை வெட்ட வேண்டும். பருவத்தைப் பொறுத்து புல் வெட்டுவதற்கான கால இடைவெளி மாறுபடும். ஆனால் புதிதாக அமைக்கப்பட்ட புல்தரையினை நன்கு படர்ந்து வளரும் வரை வெட்டக்கூடாது.
புற்களின் உயரம் 5-6 செ.மீட்டருக்கு மிகையாகமல் இருக்கும்படியாக புல்வெட்டும் கருவியிலுள்ள கத்திகளின் உயரத்தை பொறுத்த வேண்டும்.ஆரம்பத்தில் வீசுக் கத்தியினைக் கொண்டு புற்களை நறுக்க வேண்டும்.
படர்ந்த புல்தரையானது அழகாகக் காணப்பட்டாலும் சில சமயம் ஒரேமாதிரியாகக் காணப்படும். ஆனால் பல சிறுஞ்செடிகள் அல்லது மரங்களை இப்புல்தரையில் வளர்ப்பது சரியானதல்ல. இருப்பினும் பரந்து விரிந்த புல் தரையின் நடுவே ஒரேயொரு மரம் அல்லது சிறுஞ்செடியை புல்தரையின் நடுவில் நடவுசெய்யலாம் என்கின்றனர் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள்.



Click it and Unblock the Notifications