சமையலுக்கு மிகவும் தேவையான இந்த பொருட்களை வீட்டிலேயே ப்ரெஷா வளர்க்கலாமாம்... ட்ரை பண்ணுங்க...!

ப்ரெஷான பொருட்கள் மற்றும் மசாலா பொருட்களை சமையலில் உபயோகிப்பது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி உணவை சுவையாகவும், நேர்த்தியானதாகவும் மாற்றும். இது தவிர, சூப்கள் மற்றும் சாலட்களில் கொத்தமல்லி, கருவேப்பில்லை போன்றவற்றை மேலே தூவுவது அவற்றுக்கு கூடுதல் சுவையையும், வாசனையையும் சேர்க்கிறது.

நீங்கள் ஒரு பொழுதுபோக்காக சமையலறை தோட்டத்தை வளர்க்கிறீர்களோ அல்லது ஆரோக்கியமான உணவை நோக்கி விழிப்புடன் நடவடிக்கை எடுக்க விரும்புகிறீர்களோ, எதுவாக இருந்தாலும் அதற்கு நீங்கள் அதிக சிரமப்பட வேண்டிய அவசியமில்லை. உங்கள் வீட்டிலேயே சில அத்தியாவசிய செடி மற்றும் மூலிகைகளை எளிதில் வளர்க்கலாம்.

Easiest Cooking Herbs To Grow At Kitchen Garden in Tamil

துளசி

நார்ச்சத்துக்கான சிறந்த ஆதாரமான இந்த மூலிகை, நரம்புகளை அமைதிப்படுத்த உதவுகிறது, உடலில் இருந்து நச்சுகிகளை நீக்குகிறது மற்றும் இதற்கு தினமும் தண்ணீர் தேவைப்படாது, துளசி ஒரு கடினமான தாவரமாகும், இது வீட்டிற்குள்ளேயே வளரும் மற்றும் முகப்பருவைக் குறைக்க உதவும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.

கொத்தமல்லி

கொத்தமல்லி நம் உடலில் இருந்து உலோக அடிப்படையிலான நச்சுகளை அகற்ற சிறந்த மூலிகையாகும். இந்த மூலிகை பாதரசம், ஈயம் போன்ற உலோக அடிப்படையிலான நச்சுப் பொருட்களுடன் இணைந்து அவற்றை திசுக்களில் இருந்து பிரித்தெடுக்கின்றன. கொத்தமல்லி பல்வேறு உணவு வகைகளில் சுவையான மசாலாப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

ஆர்கனோ

இது உங்கள் இத்தாலிய உணவுகளுக்கு நல்ல சுவையூட்டலாக இருப்பதுடன், ஆர்கனோ உங்கள் ஆரோக்கியத்தில் அற்புதமாக செயல்படுகிறது. இது பூஞ்சை தொற்று, பொடுகு, தசைவலி, மூட்டு வலி மற்றும் வயிற்றுக் கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. பூச்சிகள் உங்கள் வீட்டை ஆக்கிரமித்திருந்தால், நீங்கள் ஆர்கனோவை பூச்சி விரட்டியாகவும் பயன்படுத்தலாம்.

தைம்

கண்கள், தோல், முடி மற்றும் நகங்களுக்கு நன்மை பயக்கும் தைமில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது மற்றும் அழற்சி எதிர்ப்பு, கிருமி நாசினிகள் மற்றும் ஆண்டிபயாடிக் பண்புகள் உள்ளன. சமைக்கும் போது, இது , வெங்காயம், பூண்டு மற்றும் இஞ்சியுடன் நன்றாக இணைகிறது. இதனை உங்கள் வீட்டிலேயே எளிதில் வளர்க்கலாம்.

ரோஸ்மேரி

உங்கள் வீட்டில் தோட்டத்தை அமைக்க திட்டமிடுகிறீர்களானால், இந்த அதிசய செடி அவசியம் இருக்க வேண்டும். ரோஸ்மேரியின் சிறந்த விஷயம் என்னவென்றால், அது தனது மந்திர நறுமணத்தை வெறும் தொடுதலிலேயே வெளியிடுகிறது. இந்த மூலிகை அறைக்கு நறுமணத்தை சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், நினைவகத்தையும் அதிகரிக்கிறது. மேலும், இது புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.

பார்ஸ்லே

பார்ஸ்லே பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது, குறிப்பாக வைட்டமின் ஏ, சி மற்றும் கே ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இது இரத்த சுத்திகரிப்புக்கு அவசியம். இதற்கு அதிக சூரிய ஒளி மற்றும் பராமரிப்பு தேவையில்லை. கவலைப்பட வேண்டிய ஒரே விஷயம் என்னவென்றால், அது மிகவும் மெதுவாக வளரும்.

லெமன் க்ராஸ்

ஆன்டிஆக்ஸிடன்ட்களை வழங்குவதால், புற்று நோய் மற்றும் கண் அழற்சியை எதிர்த்துப் போராட லெமன் க்ராஸ் பயன்படுகிறது. அதன் வலுவான எலுமிச்சை வாசனை, உங்கள் உணவின் நறுமணத்தை அதிகரிக்கும். மேலும் புத்துணர்ச்சியூட்டும் சுவைக்காக தேநீரிலும் இதனை சேர்க்கலாம்.

லெவெண்டர்

கண்களுக்கு அழகாக இருப்பதைத் தவிர, லாவெண்டர் பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. இதில் வயிறு வீக்கத்தைக் குணப்படுத்தும் பாலிபினால்கள் எனப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. லாவெண்டரை சுவையூட்டும் பொருளாகவும் பேக்கிங்காகவும் பயன்படுத்தலாம். இதனை உங்கள் வீட்டுத் தோட்டத்திலேயே வளர்க்கலாம்.

புதினா

புதினா சைனஸ் நெரிசலை அகற்ற உதவுகிறது மற்றும் ஒரு புத்துணர்ச்சியூட்டும் மூலிகையாக செயல்படுகிறது, தேநீர் வடிவில் உட்கொள்ளும்போது, நீண்ட சோர்வான நாளுக்குப் பிறகு தலைவலி மற்றும் உடல் வலியைத் தணிக்கும் ஆற்றல் கொண்டது. இதில் உள்ள இயற்கை எண்ணெய்கள் செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் மாதவிடாய் பிடிப்புகளில் இருந்து விடுபட உதவுகிறது.

Story first published: Wednesday, July 26, 2023, 16:33 [IST]
Desktop Bottom Promotion