Latest Updates
-
பாபா வங்கா கணிப்பு படி 2026 முதல் 2030 வரை உலகில் என்னென்ன மோசமான சம்பவங்கள் நடக்கப்போகுது தெரியுமா? -
செவ்வாயால் உருவாகும் சக்திவாய்ந்த ருச்சக யோகம்: மே மாதம் இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டபோகுது -
2 வெள்ளரிக்காயும், 1 கப் ரவையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போறாங்களாம் -
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 8 மாதம் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
வாஸ்துப்படி, ஃப்ரிட்ஜ்ஜின் மேல் இந்த பொருட்களை ஒருபோதும் வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை அதிகரிக்கும்.. -
Malai Ice Cream: கொளுத்துற வெயிலுக்கு வெறும் 4 பொருளை வெச்சு குளுகுளு-ன்னு இப்படி ஐஸ்க்ரீம் செய்யுங்க.. -
வெயிலால் உங்க கை கருப்பா மாறுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
1 கப் தயிரும், 1 குடைமிளகாயும் இருந்தா.. மதியம் இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு அள்ளும்..
வீட்டை சுத்தம் செய்யும் போது கண்டிப்பாக இதை செய்யக்கூடாது.. ஏன் தெரியுமா?
மத நம்பிக்கைகளின்படி, தூய்மை இருக்கும் இடத்தில் லட்சுமி தேவி வசிக்கிறாள். வீட்டை சுத்தமாக வைத்திருப்பது லட்சுமி தேவியின் அருள் முழுவதுமாக நமக்கு கிடைக்கும்.. அதுமட்டுமல்லாமல் வீடு த்ய்ய்மையாக இருப்பதினால் நோய்களைத் தடுக்கிறது.
அதே நேரத்தில் பாசிட்டிவ் எனர்ஜி வீட்டிற்குள் வரும். தூய்மையான வீட்டுச் சூழல் மனம், உடல், ஆரோக்கியம் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் வளர்ச்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே வீட்டின் தூய்மை வாஸ்து சாஸ்திரத்தில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அப்படி வீட்டை சுத்தம் செய்யும் போது என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

1. எதிர்மறை ஆற்றல்களை மிக எளிதாக ஈர்க்கும் என்பதால், ஒழுங்கீனம் செயல்களை தவிர்க்க வேண்டும். இது அனைத்து நல்ல ஆற்றல்களையும் தடுக்கலாம் மற்றும் நீங்கள் மந்தமான மற்றும் குறைந்த ஆற்றலை உணரலாம். நேர்மறையை ஈர்க்க, உங்கள் வீட்டை அவ்வப்போது சுத்தமாக வைத்திருக்க வேண்டும்..
2. அப்படி சுத்தம் செய்ய்யும் போது, வாஸ்து சாஸ்திரத்தின்படி.. பிரம்ம முகூர்த்தத்தின் போதும் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு அல்லது அதிகாலையில் வீட்டை துடைக்கக் கூடாது. இந்த நேரத்தில் லட்சுமி தேவி வீட்டிற்குள் நுழைவதாக நம்பப்படுகிறது, ஆனால் இந்த நேரத்தில் நீங்கள் ஏதேனும் காரணத்திற்காக துடைக்க வேண்டியிருந்தால்.. காலையில் சூரிய உதயத்திற்குப் பிறகுதான் குப்பைகளை வீட்டிற்கு வெளியே வீச வேண்டும். இதனால் லட்சுமி தேவி மகிழ்ச்சி அடைவார். நமக்கு செல்வங்களை அள்ளி தருவாள்..
3. வீட்டில் காய்ந்து போகும் செடிகள் அசுபத்தை மட்டுமே தருவதாகவும், வீட்டில் வைக்க பரிந்துரைக்கப்படாத சில செடிகள் இருப்பதால் கற்றாழை மற்றும் பருத்தி செடி போன்ற நல்ல அதிர்வுகளை ஒருபோதும் வீட்டிற்குள் கொண்டு வராததால், மக்கள் விரைவில் அவற்றை அகற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள்..
4. நீங்கள் பயன்படுத்தாத, அல்லது உடைந்த கண்ணாடிகளை வீட்டை விட்டு வெளியே எறிய வேண்டும். உடைந்த கண்ணாடிகள் எதிர்மறை மற்றும் தீய சக்திகளின் முக்கிய ஆதாரமாக இருக்கின்றன. எனவே உடைந்த கண்ணாடியை வீட்டிலிருந்து உடனடியாக அகற்றுவது நல்லது..
5. வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் உள்ள குழாய்கள் கசிவது நிதி இழப்பைக் குறிக்கிறது மற்றும் பணப்புழக்கத்தில் நீங்கள் சிக்கலை சந்திக்க நேரிடும். எனவே தண்ணீர் வீணாகாமல் இருக்க இதை விரைவில் சரி செய்ய வேண்டும்.
6. வாஸ்து சாஸ்திரத்தின்படி குப்பைகளை துடைப்பதற்கு சில விதிகள் உள்ளன. இப்படி யாராவது வீட்டை விட்டு வெளியே போனால்.. சிறிது நேரம் கழித்து அந்த வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், அந்த நபர் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று கூறப்படுகிறது.
7. லட்சுமி தேவி வீட்டு வாசலில் வசிக்கிறாள் என்பது நம்பிக்கை. வீட்டைச் சுத்தம் செய்த பிறகு, வீட்டு வாசலில் அழுக்குத் தண்ணீரை ஊற்றக் கூடாது. அவ்வாறு செய்வது மிகவும் அபத்தமாக கருதப்படுகிறது. ஏனெனில் வீட்டின் வாசல் லட்சுமி தேவியின் வாயாக கருதப்படுகிறது.
8. எந்த நேரத்திலும் வீட்டு வாசலில் துப்புரவுப் பொருட்களை வைகக் கூடாது.. அப்படி செய்தால் லட்சுமி தேவி உங்கள் மீது கோபம் கொள்வாள். எனவே தவறுதலாக இந்த தவறை செய்யாதீர்கள்.
9. வீட்டை சுத்தம் செய்யும்போதெல்லாம் பழைய துணிகளையே பயன்படுத்துவார்கள். பெரும்பாலும் மக்கள் பழைய துணிகளை கொண்டு வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பிக்கிறார்கள். ஆனால் இதைச் செய்வது அபத்தமானது. மேலும், இது ஆரோக்கியத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
10. உடைந்த கடிகாரங்கள் மற்றும் வேலை செய்யாத கடிகாரங்களை நீங்கள் பயன்படுத்தாமல் இருந்தால், அவற்றை வீட்டிலிருந்து உடனே அகற்றவும். பயன்பாட்டில் இல்லாத விஷயங்கள் உங்கள் வாழ்க்கையில் தடைகளை உருவாக்குகின்றன. எனவே அவர்கள் அனைவரும் நன்றாக செயல்படுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications











