Latest Updates
-
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது
தமிழ்நாட்டின் இந்த நகர இனிப்பு கடைகள் தீபாவளியை முன்னிட்டு அரசின் கண்காணிப்பில் உள்ளதாம்..காரணம் என்ன தெரியுமா
Diwali 2024: தீபாவளிப் பண்டிகை நெருங்கி விட்டது. தீபாவளி என்றாலே பட்டாசுகள் மட்டுமின்றி சுவையான இனிப்புகளும்தான். தீபாவளி காலகட்டத்தில் அனைத்து இனிப்பகங்களிலும் இனிப்புகளின் விற்பனை அதிகரிக்கும். தீபாவளி பண்டிகை தொடங்கியவுடன், இனிப்புகள் மற்றும் தின்பண்டங்களின் தேவை அதிகரிப்பதால் மாவா, பனீர், பால் மற்றும் பிற பால் பொருட்களில் கலப்படம் செய்வதற்கு வாய்ப்புகள் அதிகம்.
இந்த ஆண்டு தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் சந்தையில் கலப்படத்தை தடுக்கவும், சந்தையை கட்டுப்படுத்தவும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டு சந்தையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

சமீபத்திய அறிக்கைகளின்படி, தீபாவளியின் போது இனிப்புகளில் கலப்படம் செய்வதைத் தடுக்க, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) கோவை முழுவதும் இனிப்பு விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் கண்காணிப்பை தீவிரப்படுத்த அதன் மண்டல அளவிலான அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
பால் பொருட்களில் கலப்படம்
ஆய்வுகளின் படி, பால் பொருட்கள் பொதுவாக அதிக கலப்படம் செய்யப்படக் கூடிய பொருள் என்பதால், இனிப்பு கடைகளின் கண்காணிப்பை அதிகரிக்க அதிகாரிகளுக்கு FSSAI உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த கண்காணிப்பின் ஒரு பகுதியாக, அதிகாரிகள் கடைகளில் திடீர் ஆய்வு நடத்தி, மாதிரிகளை சேகரித்து தரத்தை சரிபார்த்து, தர விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் இனிப்புக் கடைகளுக்கு புதிய வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த புதிய வழிகாட்டுதல்களின் படி, அவர்கள் சுகாதாரமான சூழ்நிலையில் உணவுகளை தயாரிக்க வேண்டும் மற்றும் கலப்படமற்ற மற்றும் தரமான பொருட்களைப் பயன்படுத்த வேண்டும். எண்ணெய், நெய், வனஸ்பதி மற்றும் இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இதர பொருட்களின் விவரங்களையும், உற்பத்தியாளரின் முழு முகவரி, உணவுப் பொருளின் பெயர், உற்பத்தி தேதி, மற்றும் காலாவதி தேதி பேக்கேஜிங்கில் அவசியம் அச்சிடப்பட வேண்டும்.
தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பேக்கேஜிங் பயன்படுத்தினால், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம், 2006 பிரிவு 58ன் கீழ், 12000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கலர் உருவாக்கும் பொருட்களை அனுமதிக்கப்பட்ட வரம்பிற்குள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
கோயா அல்லது கோவா என்று அழைக்கப்படும் ஒரு இனிப்பு பொருள் பொதுவாக இனிப்புகள் தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் ஒரு பால் பொருளாகும். ஈரப்பதத்தின் பெரும்பகுதி ஆவியாகும் வரை குறைந்த வெப்பத்தில் பால் கொதிக்க வைப்பதன் மூலம் இது தயாரிக்கப்படுகிறது, இதன் விளைவாக அடர்த்தியான, கிரீமியான தன்மை ஏற்படுகிறது. இது குலாப் ஜாமூன், பேடா மற்றும் குஜியா மற்றும் பர்ஃபி போன்ற பல பாரம்பரிய இனிப்புகளில் முக்கிய மூலப்பொருளாகும்.
நிபுணர்களின் கூற்றுப்படி, இதில் அதிகமாக கலப்படம் செய்யப்படுகிறது, இதில் கலப்படம் செய்ய பயன்படுத்தப்படும் மிகவும் பொதுவான கலப்படங்கள் ஸ்டார்ச், காய்கறி கொழுப்புகள், பிளாட்டிங் பேப்பர், சுண்ணாம்பு தூள். ஸ்டார்ச் அதன் எடையை அதிகரிக்கிறது, அதே நேரத்தில் சுண்ணாம்பு தூள் அதன் தோற்றத்தைப் உருவாக்க உதவுகிறது.
தர சோதனை
உணவு தரநிலைகள் மற்றும் பாதுகாப்பு ஆணையத்தின் (FSSAI) படி, ஒரு டீஸ்பூன் கோயாவை எடுத்து ஒரு கப் சூடான நீரில் சேர்க்கவும். அடுத்து, அதில் சிறிது அயோடின் சேர்க்கவும். கோயாவில் அயோடின் கலந்த பிறகு நீல நிறமாக மாறினால், அது மாவுச்சத்தை பயன்படுத்தி கலப்படம் செய்யப்பட்டுள்ளது. இல்லையெனில், அது தூய்மையானது மற்றும் மனித நுகர்வுக்கு பாதுகாப்பானது.



Click it and Unblock the Notifications
