For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டில் செல்வ வளம் அதிகரிக்க சில தெய்வீக வாஸ்து குறிப்புகள்!

By Maha
|

பொதுவாக மனிதன் உயிர் வாழ அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் தான் இருந்தது. ஆனால் தற்போது அதோடு பணம் சேர்ந்துவிட்டது. ஆம், இன்றைய காலத்தில் பணம் இல்லாவிட்டால், வாழ்வது என்பதே மிகவும் சிரமமாகிவிடும்.

நல்ல ஆரோக்கியத்திற்கான 11 வாஸ்து டிப்ஸ்...

பலருக்கும் பணப்பிரச்சனையினால் தான் மன அழுத்தம் அதிகரிக்கிறது. ஆனால் வாஸ்து குறிப்புக்களின் மூலம் ஒருவரின் வீட்டில் செல்வ நிலையை அதிகரிக்க முடியும். இங்கு அப்படி ஒருவரின் வீட்டில் செல்வ வளம் பெருக உதவும் சில தெய்வீக வாஸ்து குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

வீட்டில் கண்ணாடியை வைப்பதற்கான சில வாஸ்து டிப்ஸ்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பணப்பெட்டி மற்றும் நகைப்பெட்டி

பணப்பெட்டி மற்றும் நகைப்பெட்டி

வீட்டில் பணம் வைக்கும் பெட்டி மற்றும் நகை வைக்கும் பெட்டியை தெற்கு அல்லது தென்மேற்குப் பகுதியில் வைக்கவும். இதனால் அந்த பெட்டியானது திறக்கும் போது வடக்கு நோக்கி இருக்கும். பொதுவாக வடக்கு குபேரனின் சாம்ராஜ்யம். இந்த திசையை நோக்கி ஒவ்வொரு முறை திறக்கும் போதும், குபேரன் அப்பெட்டியில் செல்வத்தை நிரப்ப வழி செய்வாராம்.

இயந்திரங்கள் வைக்க கூடாத இடம்

இயந்திரங்கள் வைக்க கூடாத இடம்

எப்போதும் வீட்டின் வடகிழக்கு பகுதியில் எந்த ஒரு பொருளையும் வைக்காதீர்கள். மேலும் வீட்டின் இந்த திசையில் மாடிப் படிக்கட்டுக்களை வைக்க வேண்டாம் மற்றும் மிகவும் கனமான இயந்திரங்களையும் இப்பகுதியில் வைப்பதைத் தவிர்த்திடுங்கள்.

ஓட்டை குழாய்

ஓட்டை குழாய்

வீட்டில் உள்ள குழாயில் எப்போதும் நீர் வடிந்தவாறு இருந்தால், உடனே அதை சரிசெய்யுங்கள். இல்லாவிட்டால், அதிலிருந்து வெளியேறும் நீரைப் போல், வீட்டில் உள்ள செல்வ நிலையும் வெளியேறும்.

பணப்பெட்டி முன் கண்ணாடி

பணப்பெட்டி முன் கண்ணாடி

பணம் வைக்கும் பெட்டியின் முன் கண்ணாடியை வைப்பதால், பெட்டியில் உள்ள பணம், மீண்டும் பெட்டியில் பிரதிபலித்து, செல்வ நிலையை இரட்டிப்பாக்கும்.

அதிக செலவைக் குறைக்க

அதிக செலவைக் குறைக்க

உங்கள் வீட்டில் இருந்து பணம் அதிகம் வெளியேறுவது போன்று நீங்கள் உணர்ந்தால், வீட்டில் தென்மேற்கு பகுதியில் கனமான பொருளை வையுங்கள்.

பச்சை நிறம்

பச்சை நிறம்

வீட்டின் வடக்கு பகுதியில் பச்சை நிற வண்ணத்தைப் பூசுவதன் மூலமும், வீட்டின் செல்வ நிலையை மேம்படுத்தலாம்.

சோபா வைக்கும் திசை

சோபா வைக்கும் திசை

வீட்டில் நாற்காலி அல்லது சோபாவை வடக்கு நோக்கி அமருமாறு தெற்கு பகுதியில் வைக்க வேண்டும். இதன் மூலமும் செல்வ வளம் அதிகரிக்கும்.

வீட்டின் முன் கோயில் அல்லது பெரிய கட்டிடங்கள் கூடாது

வீட்டின் முன் கோயில் அல்லது பெரிய கட்டிடங்கள் கூடாது

நீங்கள் தங்கும் வீட்டின் முன் உயரமான கட்டிடங்களோ அல்லது கோவிலோ இருந்தால், அவை வீட்டில் உள்ள செல்வ வளத்தை குறைக்கும். ஒருவேளை அந்த உயரமான கட்டிடம் அல்லது கோவிலின் நிழல் வீட்டில் படாதவாறு இருந்தால், அந்த வீட்டில் குடியேறலாம். இல்லையெனில் அந்த வீட்டில் தங்குவதைத் தவிர்த்திடுங்கள்.

வீட்டின் மையப் பகுதி

வீட்டின் மையப் பகுதி

வீட்டின் மையப் பகுதியில் எந்த ஒரு பொருளையும் வைக்காதீர்கள். எப்போதுமே வீட்டின் மையப்பகுதி ப்ரீயாக இருந்தால் தான் அந்த வீட்டில் செல்வம் கொட்டும்.

ஜன்னல் மற்றும் கதவு

ஜன்னல் மற்றும் கதவு

வீட்டில் உள்ள ஜன்னல் மற்றும் கதவு மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். ஒருவேளை மிகவும் அழுக்குடன் இருந்தால், பின் வீட்டில் உள்ள செல்வம் பறந்து போகும்.

மீன் தொட்டி

மீன் தொட்டி

வீட்டில் மீன் தொட்டியை வடகிழங்கு பகுதியில் வைப்பதன் மூலம் வீட்டின் செல்ல வளத்தை அதிகரிக்கலாம்.

கடிகாரம்

கடிகாரம்

வீட்டின் சுவற்றில் தொங்கவிடப்பட்டிருக்கும் கடிகாரம் எப்போதும் ஓடிய நிலையில் இருக்க வேண்டும். ஒருவேளை கடிகாரம் ஓடாமல் அப்படியே இருந்தால், வீட்டின் வருமானமும் அதிகரிக்காமல் அப்படியே இருக்கும்.

குடும்ப தலைவர்

குடும்ப தலைவர்

குடும்பத் தலைவர் வீட்டின் வடகிழக்குப் பகுதியில் தங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Divine Vastu Tips For Home To Improve Wealth

Here are some divine vastu tips for home to improve wealth. Read on to know more...
Desktop Bottom Promotion