Latest Updates
-
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா?
நெஞ்சு சளியைக் கரைத்து வெளியேற்றணுமா? இந்த 3 டீயை அடிக்கடி செஞ்சு குடிங்க போதும்...
Winter Health Tips In Tamil: குளிர்காலத்தில் நிறைய பேர் சளி பிரச்சனையால் அவதிப்படுவார்கள். சளி பிரச்சனை ஆரம்பித்துவிட்டால், பின் அதைத் தொடர்ந்து தொண்டைப் புண், சுவாசிப்பதில் பிரச்சனையை சந்திக்க நேரிடும். அதுவும் ஏற்கனவே ஆஸ்துமா மற்றும் பிற சுவாச பிரச்சனைகளைக் கொண்டவர்கள் குளிர்காலத்தில் மிகவும் சிரமப்படுவார்கள். இத்தகைய நிலையில் இவர்கள் சளி அதிகரிக்காமல் இருக்க சரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அந்த சளி அதிரித்து, பின் நிலைமையை மோசமாக்கிவிடும்.
சளியைக் குறைக்க இயற்கை வைத்தியத்தில் பல்வேறு வைத்தியங்கள் உள்ளன. அதில் ஒன்று மூலிகை மற்றும் மசாலா பொருட்களைக் கொண்டு டீக்களை தயாரித்து குடிப்பது. இப்படியான டீக்களை ஒருவர் குளிர்காலத்தில் குடித்து வந்தால், அது நெஞ்சு சளியைக் குறைப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். இப்போது ஒன்லிமைஹெல்த் என்ற தளத்திற்கு ஆயுர்வேத மருத்துவர் ஷ்ரே ஷர்மா நெஞ்சு சளியைக் குறைக்க உதவும் 3 மூலிகை டீக்களைப் பற்றியும், அவற்றின் நன்மைகளைப் பற்றியும் கூறியுள்ளார். அந்த டீக்கள் என்னவென்பதைக் காண்போம்.

1. இஞ்சி துளசி டீ
இஞ்சி, துளசி ஆகிய இரண்டுமே ஏராளமான மருத்துவ பண்புகளைக் கொண்ட பொருட்களாகும். இவ்விரண்டும் ஆயுர்வேதத்தில் பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பயன்படுத்தப்படும் முக்கியமான பொருட்களாகும். குறிப்பாக இந்த இரண்டு பொருட்களும் குளிர்காலத்தில் உடலை சூடாக வைத்துக் கொள்ளவும், சளியைக் குறைக்கவும் சிறந்ததாக கருதப்படுகிறது.
அதுவும் இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை தொண்டைப் புண் மற்றும் சளியைக் குறைக்க உதவுகிறது. அதேப் போல் துளசியில் ஆன்டி-பாக்ரியல் மற்றும் ஆன்டி-வைரல் பண்புகள் உள்ளன. இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்க உதவுகின்றன.
இப்படிப்பட்ட துளசியின் 6 இலைகளை எடுத்து, 1 கப் நீரில் போட்டு, அத்துடன் சிறிது இஞ்சியை தட்டிப் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி, அத்துடன் சிறிது மிளகுத் தூள் மற்றும் சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து, தினமும் காலையில் காபி, டீ-க்கு பதிலாக குடிக்க வேண்டும்.
2. மஞ்சள் மற்றும் பட்டை டீ
மஞ்சள், பட்டை ஆகிய இரண்டிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. அதுவும் மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சளி, இருமலில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது. அதேப்போல் பட்டையில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன. இவை உடலைத் தாக்கும் பாக்டீரியாக்களில் இருந்து உடலைப் பாதுகாக்கிறது. இவ்விரண்டையும் கொண்டு டீ தயாரித்து குடிக்கும் போது, அவை உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சளியைக் குறைக்கவும் உதவும்.
அதற்கு ஒரு பாத்திரத்தில் 1 கப் நீரை ஊற்றி, அதில் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1/2 டீஸ்பூன் பட்டை தூள் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து, ஒரு நாளைக்கு ஒருமுறை குடிக்க வேண்டும். இப்படி குடிப்பதன் மூலம், இந்த டீ உடலுக்கு வெப்பத்தை அளிக்கிறது, சளியைக் குறைக்கிறது மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
3. அதிமதுரம் மற்றும் கிராம்பு டீ
அதிமதுரம், கிராம்பு ஆகிய இரண்டுமே சளியைக் குறைத்து, தொண்டை வலியை சரிசெய்யும் ஆற்றலைக் கொண்டது. அதுவும் அதிமதுரத்தில் ஆன்டி-வைரல் பண்புகள் அதிகம் உள்ளன. அதேப் போல் கிராம்பில் உள்ள மருத்துவ பண்புகள், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. இப்படிப்பட்ட அதிமதுரம் மற்றும் பட்டைக் கொண்டு டீ தயாரித்து குளிர்காலத்தில் குடித்து வந்தால், குளிர்காலத்தில் சந்திக்கும் சளி பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
அதற்கு ஒரு கப் நீரில் சிறிய துண்டு அதிமதுரம் மற்று 2-3 கிராம்புகளை சேர்த்து 5-10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இந்த டீயை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், அது தொண்டை மற்றும் சுவாச பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











