Latest Updates
-
2 வெள்ளரிக்காயும், 1 கப் ரவையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போறாங்களாம் -
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 8 மாதம் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
வாஸ்துப்படி, ஃப்ரிட்ஜ்ஜின் மேல் இந்த பொருட்களை ஒருபோதும் வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை அதிகரிக்கும்.. -
Malai Ice Cream: கொளுத்துற வெயிலுக்கு வெறும் 4 பொருளை வெச்சு குளுகுளு-ன்னு இப்படி ஐஸ்க்ரீம் செய்யுங்க.. -
வெயிலால் உங்க கை கருப்பா மாறுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
1 கப் தயிரும், 1 குடைமிளகாயும் இருந்தா.. மதியம் இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு அள்ளும்.. -
உங்களுக்கு உடம்பு சூடு பிடிக்கக்கூடாதா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த 4 காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க! -
1 வருடம் கழித்து மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கபோறாங்க.!
ஒரு கிலோ 12 இலட்சத்திற்கு விற்கும் 'இமயமலை வயாகரா' மூலிகை... அப்படி இதில் என்ன ஸ்பெஷல் தெரியுமா?
கார்டிசெப்ஸ் பூஞ்சை அல்லது கம்பளிப்பூச்சி பூஞ்சை, திபெத், பூட்டான், இந்தியா, சீனா மற்றும் நேபாளத்தின் உயரமான இமயமலைப் பகுதிகளில் இயற்கையாகக் காணப்படும் ஒரு குறிப்பிடத்தக்க பூஞ்சை வகை மூலிகையாகும்.
கார்டிசெப்ஸ் பூஞ்சை அல்லது கம்பளிப்பூச்சி பூஞ்சை, திபெத், பூட்டான், இந்தியா, சீனா மற்றும் நேபாளத்தின் உயரமான இமயமலைப் பகுதிகளில் இயற்கையாகக் காணப்படும் ஒரு குறிப்பிடத்தக்க பூஞ்சை வகை மூலிகையாகும். சீன வீரர்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ இந்த மூலிகை மிகவும் முக்கியாமான காரணமாகும்.
இந்தியாவிலேயே அதிக விலைமதிப்புக் கொண்ட இந்த பூஞ்சை மூலிகையானது சீனாவில் தங்கத்தை விட அதிக விலை கொண்டதாக இருப்பதால் 'ஹிமாலயன் தங்கம்' என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் இதன் பெயர் 'ஹிமாலயன் வயாகரா' ஆகும். கார்டிசெப்ஸ் பூஞ்சை என்றால் என்ன? அதன் நன்மைகள் என்ன?

இது ஏன் கிலோ 12 இலட்சம் வரை விற்கப்படுகிறது? இந்த கேள்விகளுக்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.

கார்டிசெப்ஸ் பூஞ்சை என்றால் என்ன?
கார்டிசெப்ஸ் என்பது பூச்சிகளின் லார்வாக்களில் வளரும் ஒரு வகை பூஞ்சை ஆகும். இது அறிவியல்ரீதியாக ஓபியோகார்டிசெப்ஸ் சினென்சிஸ் என்றும், திபெத்தியர்கள் இதை ‘யார்ட்சா கம்பு' என்றும் அழைக்கின்றனர். இது கம்பளிப்பூச்சி மற்றும் பூஞ்சையின் தனித்துவமான கலவையாகும் என்று தேசிய மருத்துவ நூலகம் கூறுகிறது. இது மெதுவாக ஹோஸ்டின் திசுக்களை மாற்றத் தொடங்குகிறது, தண்டுகள் முளைக்கத் தொடங்குகிறது மற்றும் ஹோஸ்டின் உடலுக்கு வெளியே வளரத் தொடங்குகிறது. பின்னர் அவை கையால் கவனமாக எடுக்கப்பட்டு மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன. இது கார்டிசெப்ஸ் அல்லது கம்பளிப்பூச்சி பூஞ்சை பழுப்பு நிறத்திலும் 2 அங்குல நீளம் வரையிலும் இருக்கும்.

மருத்துவ குணங்கள்
இந்திய இமயமலை மற்றும் திபெத்திய பீடபூமியின் மலைப்பகுதிகளில் காணப்படும் கார்டிசெப்ஸ் அதன் மருத்துவ குணங்களுக்கு புகழ் பெற்றது. அதன் செயல்திறனை நிரூபிக்க அறிவியல் ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றாலும், விஞ்ஞானிகள் அதில் கார்டிசெபின் எனப்படும் உயிர்வேதியியல் மூலக்கூறு இருப்பதாகக் கூறுகின்றனர், இது வைரஸ் தடுப்பு மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு சிகிச்சையை உருவாக்க உதவும்.

ஆரோக்கிய நன்மைகள்
இதிலுள்ள கார்டிசெப்ஸ் சோர்வைக் குறைக்கும் மற்றும் வலிமை மற்றும் செக்ஸ் டிரைவை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இது வயதாகும் அறிகுறிகளை தாமதப்படுத்துகிறது, மேலும் நினைவகம் மற்றும் பாலியல் செயல்பாட்டை மேம்படுத்தவும் அறியப்படுகிறது. அதன் அற்புதமான பாலியல் நன்மைகளுக்காக அது இமயமலை வயாகரா என்றும் குறிப்பிடுகின்றனர். கூடுதலாக, கார்டிசெப்ஸ் உடலில் ஏற்படும் அழற்சியை எதிர்த்துப் போராட உதவுகிறது. இது எலிகளில் தோல் அழற்சியைக் குறைப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

தங்கத்தை விட விலை உயர்ந்தது?
சீனாவில் தங்கம் அல்லது வைரங்களை விட கார்டிசெப்ஸ் பூஞ்சை அல்லது 'ஹிமாலயன் தங்கம்' விலை அதிகம் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதன் தேவை மிக அதிகமாக உள்ளதால், இது மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கிறது. சர்வதேச சந்தை நிலவரப்படி ஒரு கிலோ இந்த மருத்துவ மூலிகை சுமார் 12 லட்சம் வரை விற்கப்படுகிறது, அதேசமயம் அதன் சந்தை மதிப்பு 2022ல் $1,072.50 மில்லியனாக இருந்தது.

பக்க விளைவுகள் உள்ளதா?
கார்டிசெப்ஸ் 1 வருடம் வரை தினசரி 3-6 கிராம் அளவுகளில் எடுத்துக் கொள்ளும்போது பெரும்பாலான மக்களுக்கு பாதுகாப்பானது. ஆனால் இது வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் மற்றும் வயிற்று அசௌகரியம் போன்ற லேசான பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

ஊடுருவலுக்கு காரணமாக இருக்கிறது
அறிக்கைகளின்படி, இந்த பூஞ்சையின் அறுவடை ஓரிரு ஆண்டுகளாக குறைந்து வருவதால், நாட்டில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், கார்டிசெப்ஸ் அறுவடை குறைந்துவிட்டது, சீனாவின் மிகப்பெரிய உற்பத்திப் பகுதியான கிங்காயில் பூஞ்சை பற்றாக்குறையாக வளர்ந்துள்ளது. அதே நேரத்தில், விஞ்ஞான ஆதாரங்கள் இல்லாத போதிலும், வளர்ந்து வரும் சீன நடுத்தர வர்க்கம் சிறுநீரக கோளாறுகள் முதல் ஆண்மைக்குறைவு வரை அனைத்தையும் குணப்படுத்த முயல்வதால், கடந்த தசாப்தத்தில் மிகவும் விலையுயர்ந்த கார்டிசெப்ஸின் தேவை கடுமையாக அதிகரித்துள்ளது.
இமயமலையில் உள்ள சில கிராமங்கள் இந்த பூஞ்சையை சேகரித்து விற்பனை செய்வதை நம்பி வாழ்கின்றனர். உண்மையில், நிபுணர்கள் கூறுகையில், திபெத்திய பீடபூமி மற்றும் இமயமலையில் உள்ள குடும்ப வருமானத்தில் 80 சதவீதம் வரை இந்த பூஞ்சையை விற்பதன் மூலமே கிடைக்கிறது.



Click it and Unblock the Notifications











