Latest Updates
-
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா?
கொரோனா நோயாளிகளிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவங்க இன்னும் முழுசா குணமாகலனு அர்த்தம்....!
நமது வாழ்க்கையை கொரோனாவிற்கு முன், கொரோனாவிற்கு பின் என பிரிக்கும் அளவிற்கு கொரோனா நம் வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அது ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து இன்னும் நாம் முழுதாக வெளிவர முடியாமல் இருக்கும் போது மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரிப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவிட்-19 லிருந்து மீண்டு வந்தாலும் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் அதன் நீண்டகால விளைவுகளை இன்னும் அனுபவித்துக் கொண்டிருக்கலாம். இந்த தொற்று பல COVID-19 நோயாளிகளுக்கு கடுமையான நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில அறிகுறிகள் மிகவும் கடுமையானவை, அதிலிருந்து மீள முடியாது என்று கூறப்பட்டது. இருப்பினும், காலப்போக்கில் சேதம் குறையலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கோவிட் குணமடைந்த பிறகும் நுரையீரலில் தொடரக்கூடிய சில பிரச்சினைகள் உள்ளன. அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
மூச்சு விடுவதில் சிரமம்
முழுமையான இதயம் மற்றும் நுரையீரல் பரிசோதனைகள் சில COVID-19 தொற்றிலிருந்து உயிர் பிழைத்தவர்கள் ஏன் இன்னும் மூச்சுத் திணறலை அனுபவிக்கிறார்கள் என்பதைக் கண்டறிய உதவும். ஆய்வுகளின் படி பல நோயாளிகள் நுரையீரல் செயல்பாடு சோதனைகள், எக்கோ கார்டியோகிராம்கள், மார்பு எக்ஸ்-கதிர்கள் அல்லது நிலையான செயல்பாட்டு சோதனைகள் போன்ற வழக்கமான சோதனைகளை மேற்கொண்டனர், ஆனால் முடிவுகள் எல்லாம் இயல்பாக இருப்பதாக கூறியது, மேலும் மூச்சுத்திணறலுக்கான காரணத்தை அவற்றால் கண்டறிய இயலவில்லை.
நுரையீரலில் திரவம் இருப்பது
கோவிட்-19 நோயாளிகளின் நுரையீரலில் அதிகப்படியான திரவம் இருக்கும், இது சுவாசிப்பதை கடினமாக்குகிறது. நோயின் ஆரம்ப கட்டங்களில், கோவிட்-19 நோயாளிகளின் நுரையீரலில் கசியும் புரத திரவம் சில காலம் நீடிக்கும்.
கடுமையான சுவாசக் கோளாறு நோய்க்குறி
உலகெங்கிலும் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவுகளில், COVID-19 தொற்றுநோய் கடுமையான சுவாசக் கோளாறு நோய்க்குறி (ARDS) நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது. ஆரம்ப அறிக்கைகளின்படி, கோவிட்-19-தொடர்புடைய ARDS முந்தைய ARDSல் இருந்து பல வழிகளில் வேறுபடுகிறது.
ஒரு வருடம் வரை பாதிப்புகள் இருக்கலாம்
நிமோனியாவை உண்டாக்கும் சுவாச நோயான COVID-19 மற்ற சுவாச நோய்த்தொற்றுகளைப் போலவே குறுகிய கால நுரையீரல் பாதிப்புக்கு வழிவகுக்கும். சேதம் மிகவும் கடுமையானதாக இருந்தால், அது குணமடைய நீண்ட காலமாகலாம். உண்மையில், நோய்த்தொற்று ஏற்பட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு, மூன்றில் ஒரு பங்கு COVID நோயாளிகள் நுரையீரல் பரிசோதனையின் போது வடுக்களை உணர்வதாக ஆய்வுகள் கூறுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications












