Latest Updates
-
சூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வருமானம் உயரப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தைத் தரப்போகுதாம் -
பொட்டுக்கடலை இருந்தா இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷா இருக்கும் -
சப்பாத்திக்கு இப்படி உருளைக்கிழங்கு சைடு டிஷ் பண்ணுங்க.. கறிக்குழம்பு சுவையில் செமயா இருக்கும்.. -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் எது? இதன் கடைசி ஸ்டாப் தமிழ்நாடுதானாம் -
மின்சாரமே இல்லாத காலத்தில் முகலாய மன்னர்களுக்கு எப்படி ஐஸ்கட்டிகள் கிடைத்தது தெரியுமா? இப்படித்தானாம் -
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த பால் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
உடுப்பி ஸ்டைலில் சாம்பார் சாப்பிட்ருக்கீங்களா? இந்த பக்குவத்தில் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பணம் சம்பாதிக்க கஷ்டப்படுவாங்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
பூண்டும், கறிவேப்பிலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்..
காமசூத்ராவின் படி முதல் இரவின் போது பாலுடன் இந்த பொருட்களைச் சேர்த்து குடிக்கணுமாம்? ஏன் தெரியுமா?
நமது இந்தியா பழங்காலம் முதலே பல வினோதமான சடங்குகளைக் கொண்டுள்ளது. அதில் சில சடங்குகள் இன்றுவரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
நமது இந்தியா பழங்காலம் முதலே பல வினோதமான சடங்குகளைக் கொண்டுள்ளது. அதில் சில சடங்குகள் இன்றுவரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பழமையான சடங்குகளை கேள்விக்குள்ளாக்குவதும் அவற்றின் பின்னால் உள்ள தர்க்கத்தை கண்டுபிடிப்பதும் பலருக்கு நிந்தனையாகத் தோன்றலாம். ஆனால் இந்து திருமணத்தின் முதல் இரவில் மணப்பெண் ஏன் பாலுடன் அல்லது குங்குமப்பூ கலந்த பாலுடன் படுக்கையறைக்குள் நுழைகிறார் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

இதற்குப் பின்னால் உள்ள உண்மை பெரும்பாலும் உங்களுக்கு கூறப்பட்டிருக்காது, ஆனால் இந்த பாரம்பரியத்தின் பின்னால் ஏதேனும் உண்மையான தர்க்கம் உள்ளதா? முதல் இரவில் குங்குமப்பூ பால் குடிக்கும் இந்த பாரம்பரியத்தின் பின்னணியில் உள்ள சில உண்மையான காரணங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

மணமகள் ஏன் ஒரு கிளாஸ் பாலுடன் வருகிறார்?
திருமணம் ஒரு புனிதமான உறவாகும், இது போன்ற பல காரணிகளை மனதில் கொண்டு பல பழக்கவழக்கங்கள் உருவாக்கப்பட்டன. முதல் இரவு மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு அடித்தளம் என்று நம்பப்படுகிறது. மரபுகளின்படி, ஒரு இனிமையான பாலுடன் திருமண வாழ்க்கையைத் தொடங்குவது உறவுக்கு இனிமை சேர்க்கும் என்று நம்பப்படுகிறது.

பாலும் குங்குமப்பூவும் எதற்கு?
பால் மற்றும் குங்குமப்பூ பெரும்பாலும் பல இந்து சடங்குகளில் பயன்படுத்தப்படுகிறது, குறிப்பாக பால் மங்களகரமானதாக கருதப்படுகிறது, இது திருமணத்தின் முதல் இரவில் பால் கலவையை உட்கொள்வதற்கு இதுவும் ஒரு காரணம். ஆனால் சடங்கு சம்பந்தம் தவிர, முதலிரவில் பால் குடிக்கும் வழக்கத்திற்கு வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா?

இந்தக் கலவையைக் குடித்தால் என்ன நடக்கும்?
குங்குமப்பூ பழங்காலத்திலிருந்தே பாலுணர்வைக் அதிகரிக்கும் மருந்தாகக் கருதப்பட்டு, அதை டிரிப்டோபான் நிறைந்த பாலில் கலந்து குடிப்பது உயிர்ச்சக்தியை மேம்படுத்துகிறது மற்றும் புதுமணத் தம்பதிகளின் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. அறிவியல்ரீதியாக, குங்குமப்பூவில் சிறந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன, அவை மனநிலையை மேம்படுத்துவதற்கும், மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், பதட்டத்தைக் குறைப்பதற்கும், தொடர்ந்து உட்கொள்ளும் போது மனச்சோர்வின் ஆரம்ப அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது. இருப்பினும், முதல் இரவில் இந்த கலவையை குடிப்பதன் பின்னணியில் உள்ள லாஜிக் என்னவென்றால், ஒரு நிதானமான மற்றும் மகிழ்ச்சியான மனநிலையில் திருமண வாழ்க்கையைத் தொடங்குவதாகும்.

பாதாம்
பால், குங்குமப்பூ கலவையுடன் நொறுக்கப்பட்ட பாதாம் ஆகியவை திருமண கொண்டாட்டங்களுக்குப் பிறகு தம்பதியருக்கு ஆற்றலை வழங்குவதாகும். ஏனென்றால், பாதாம் மற்றும் பால் இரண்டும் நமது உடலுக்கு பலம் தரும் புரதச்சத்து நிறைந்த ஆதாரங்கள். சிறந்த பாலியல் அனுபவத்திற்கு வழிவகுக்கும் டெஸ்டோஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்களை உருவாக்கவும் புரதங்கள் தேவைப்படுகின்றன. இந்த கலவை பாலுணர்வைக் குறிக்கிறது, இது உட்கொள்ளும் போது நமது செக்ஸ் டிரைவ் அல்லது லிபிடோவை அதிகரிக்கிறது. பால், குங்குமப்பூ மற்றும் நொறுக்கப்பட்ட பாதாம் ஆகியவை நமது உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கும் ஒரு சக்திவாய்ந்த கலவையாகும்.

இந்த சடங்கு எப்போது தோன்றியது?
பழங்கால நூல்களின்படி, காமசூத்திரத்தில் பால் கலவையைக் குடிப்பது என்ற கருத்து அறிமுகப்படுத்தப்பட்டது, உடலுறவில் ஈடுபடும் முன் சில கலவைகளைப் பருகுவது சகிப்புத்தன்மையை மேம்படுத்துகிறது மற்றும் பாலியல் ஆற்றலை அதிகரிக்கிறது என்று நம்பப்பட்டது. இருப்பினும், ஒரு கிளாஸ் பாலில் பெருஞ்சீரகம் சாறு, தேன், சர்க்கரை, மஞ்சள், மிளகு மற்றும் குங்குமப்பூ போன்ற பல்வேறு வகையான சேர்க்கைகள் இருந்தன, இது இந்த முக்கிய இந்து திருமண வழக்கத்திற்கு வழிவகுத்தது. பல ஆண்டுகளாக, பன்முகத்தன்மையைப் பொறுத்து பொருட்களின் சேர்க்கை மாறியிருக்கலாம், ஆனால் அந்த பாரம்பரியம் இன்னும் உள்ளது.



Click it and Unblock the Notifications