Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
காமசூத்ராவின் படி முதல் இரவின் போது பாலுடன் இந்த பொருட்களைச் சேர்த்து குடிக்கணுமாம்? ஏன் தெரியுமா?
நமது இந்தியா பழங்காலம் முதலே பல வினோதமான சடங்குகளைக் கொண்டுள்ளது. அதில் சில சடங்குகள் இன்றுவரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
நமது இந்தியா பழங்காலம் முதலே பல வினோதமான சடங்குகளைக் கொண்டுள்ளது. அதில் சில சடங்குகள் இன்றுவரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பழமையான சடங்குகளை கேள்விக்குள்ளாக்குவதும் அவற்றின் பின்னால் உள்ள தர்க்கத்தை கண்டுபிடிப்பதும் பலருக்கு நிந்தனையாகத் தோன்றலாம். ஆனால் இந்து திருமணத்தின் முதல் இரவில் மணப்பெண் ஏன் பாலுடன் அல்லது குங்குமப்பூ கலந்த பாலுடன் படுக்கையறைக்குள் நுழைகிறார் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

இதற்குப் பின்னால் உள்ள உண்மை பெரும்பாலும் உங்களுக்கு கூறப்பட்டிருக்காது, ஆனால் இந்த பாரம்பரியத்தின் பின்னால் ஏதேனும் உண்மையான தர்க்கம் உள்ளதா? முதல் இரவில் குங்குமப்பூ பால் குடிக்கும் இந்த பாரம்பரியத்தின் பின்னணியில் உள்ள சில உண்மையான காரணங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

மணமகள் ஏன் ஒரு கிளாஸ் பாலுடன் வருகிறார்?
திருமணம் ஒரு புனிதமான உறவாகும், இது போன்ற பல காரணிகளை மனதில் கொண்டு பல பழக்கவழக்கங்கள் உருவாக்கப்பட்டன. முதல் இரவு மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு அடித்தளம் என்று நம்பப்படுகிறது. மரபுகளின்படி, ஒரு இனிமையான பாலுடன் திருமண வாழ்க்கையைத் தொடங்குவது உறவுக்கு இனிமை சேர்க்கும் என்று நம்பப்படுகிறது.

பாலும் குங்குமப்பூவும் எதற்கு?
பால் மற்றும் குங்குமப்பூ பெரும்பாலும் பல இந்து சடங்குகளில் பயன்படுத்தப்படுகிறது, குறிப்பாக பால் மங்களகரமானதாக கருதப்படுகிறது, இது திருமணத்தின் முதல் இரவில் பால் கலவையை உட்கொள்வதற்கு இதுவும் ஒரு காரணம். ஆனால் சடங்கு சம்பந்தம் தவிர, முதலிரவில் பால் குடிக்கும் வழக்கத்திற்கு வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா?

இந்தக் கலவையைக் குடித்தால் என்ன நடக்கும்?
குங்குமப்பூ பழங்காலத்திலிருந்தே பாலுணர்வைக் அதிகரிக்கும் மருந்தாகக் கருதப்பட்டு, அதை டிரிப்டோபான் நிறைந்த பாலில் கலந்து குடிப்பது உயிர்ச்சக்தியை மேம்படுத்துகிறது மற்றும் புதுமணத் தம்பதிகளின் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. அறிவியல்ரீதியாக, குங்குமப்பூவில் சிறந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன, அவை மனநிலையை மேம்படுத்துவதற்கும், மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், பதட்டத்தைக் குறைப்பதற்கும், தொடர்ந்து உட்கொள்ளும் போது மனச்சோர்வின் ஆரம்ப அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது. இருப்பினும், முதல் இரவில் இந்த கலவையை குடிப்பதன் பின்னணியில் உள்ள லாஜிக் என்னவென்றால், ஒரு நிதானமான மற்றும் மகிழ்ச்சியான மனநிலையில் திருமண வாழ்க்கையைத் தொடங்குவதாகும்.

பாதாம்
பால், குங்குமப்பூ கலவையுடன் நொறுக்கப்பட்ட பாதாம் ஆகியவை திருமண கொண்டாட்டங்களுக்குப் பிறகு தம்பதியருக்கு ஆற்றலை வழங்குவதாகும். ஏனென்றால், பாதாம் மற்றும் பால் இரண்டும் நமது உடலுக்கு பலம் தரும் புரதச்சத்து நிறைந்த ஆதாரங்கள். சிறந்த பாலியல் அனுபவத்திற்கு வழிவகுக்கும் டெஸ்டோஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்களை உருவாக்கவும் புரதங்கள் தேவைப்படுகின்றன. இந்த கலவை பாலுணர்வைக் குறிக்கிறது, இது உட்கொள்ளும் போது நமது செக்ஸ் டிரைவ் அல்லது லிபிடோவை அதிகரிக்கிறது. பால், குங்குமப்பூ மற்றும் நொறுக்கப்பட்ட பாதாம் ஆகியவை நமது உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கும் ஒரு சக்திவாய்ந்த கலவையாகும்.

இந்த சடங்கு எப்போது தோன்றியது?
பழங்கால நூல்களின்படி, காமசூத்திரத்தில் பால் கலவையைக் குடிப்பது என்ற கருத்து அறிமுகப்படுத்தப்பட்டது, உடலுறவில் ஈடுபடும் முன் சில கலவைகளைப் பருகுவது சகிப்புத்தன்மையை மேம்படுத்துகிறது மற்றும் பாலியல் ஆற்றலை அதிகரிக்கிறது என்று நம்பப்பட்டது. இருப்பினும், ஒரு கிளாஸ் பாலில் பெருஞ்சீரகம் சாறு, தேன், சர்க்கரை, மஞ்சள், மிளகு மற்றும் குங்குமப்பூ போன்ற பல்வேறு வகையான சேர்க்கைகள் இருந்தன, இது இந்த முக்கிய இந்து திருமண வழக்கத்திற்கு வழிவகுத்தது. பல ஆண்டுகளாக, பன்முகத்தன்மையைப் பொறுத்து பொருட்களின் சேர்க்கை மாறியிருக்கலாம், ஆனால் அந்த பாரம்பரியம் இன்னும் உள்ளது.



Click it and Unblock the Notifications