Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..
ஓமிக்ரான் பரவல்... உலக நாடுகள் செலுத்தும் பூஸ்டர் டோஸ்...மோடி கூறும் மூன்றாவது தடுப்பூசி என்ன?
மூன்றாவது டோஸ் மூலம், நோயெதிர்ப்பு அமைப்பு வைரஸுக்கு எதிராக ஆன்டிபாடிகளை உருவாக்க முடியும். உடலின் நோயெதிர்ப்பு அமைப்புக்கு எதிராக பாதுகாக்க வேண்டிய வைரஸை நினைவூட்டுவதற்கு ஒரு பூஸ்டர் ஷாட் வழங்கப்படுகிறது.
கடந்த 2020 ஆண்டு முதல் தற்போது வரை கொரோனா தொற்று நம்மை அச்சத்திலையே வைத்திருக்கிறது. சீனாவில் உருவாக்கி உலக நாடுகளில் பரவிய கொடிய வைரஸ் கோவிட்-19. பில்லியன் கணக்கான மக்களை உயிரை காவு வாங்கிய வைரஸ் இன்னும் தன் கோரத்தாண்டவத்தை காட்டி வருகிறது. கொரோனா வைரஸ் உருமாறி டெல்டா மற்றும் ஓமிக்ரான் தொற்றாக பரவி வருகிறது. இந்தியாவில் தற்போது ஓமிக்ரான் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த உள்ளதாக மத்திய மாநில அரசுகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதனால் மக்கள் மீண்டும் அச்சத்தில் உள்ளனர். கொரோனா தடுப்பூசி ஒன்றே மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

இந்நிலையில், மூன்றாவது தடுப்பூசியை அறிவித்துள்ளார் பிரதமர் மோடி. நேற்று 15 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கோவாகசின் தடுப்பூசியை அறிவித்தார். அதைப்போலவே, 60 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கு கூடுதல் டோஸ் அறிவித்துள்ளார். பிரதமர் மோடி ஆற்றிய உரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அது பூஸ்டர் டோஸுக்கான கவனம் மட்டுமல்ல, Precaution டோஸ் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதும்தான். மூன்றாவது கோவிட் தடுப்பூசி டோஸ் உலகளவில் பூஸ்டர் ஷாட் என்று அழைக்கப்படுகிறது. இதுகுறித்து இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.

இந்தியாவில் தடுப்பூசி
இந்தியாவில் கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டது. முதலில் முன்களப் பணியாளர்களுக்கு வேக்சின் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், பின்னர் அது படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டது. நாடு முழுவதும் இதுவரை 141.70 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது. இதுவரை 60% பேருக்குக் குறைந்தது ஒரு டோஸ் வேக்சினும் 41% பேருக்கு 2 டோஸ் வேக்சினும் போடப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பு
இந்தியாவில் ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 578 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இவர்களில் 151 பேர் ஓமிக்ரான் வகை தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் நாடு முழுவதும் தற்போது 427 பேர் ஓமிக்ரானுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஓமிக்ரான் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பூஸ்டர் டோஸ்
உலக நாடுகளில் பூஸ்டர் டோஸ் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இஸ்ரேல் தனது மக்களுக்கு மூன்றாவது டோஸ் வேக்சின்களை செலுத்தி முடித்துவிட்டு, தற்போது 4ஆவது டோஸ் குறித்துச் சிந்திக்கத் தொடங்கியுள்ளது. அதேநேரம் அனைத்து நாடுகளிலும் உள்ளவர்களுக்கும் 2 டோஸ் வேக்சின் செலுத்தும் வரை பூஸ்டர் டோஸ் தேவையில்லை என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. சில ஆய்வாளர்கள் பூஸ்டர் டோஸ் மூலம் ஓமிக்ரான் பாதிப்பைக் கட்டுப்படுத்த முடியும் எனக் கூறி வருகின்றனர். இந்நிலையில், ஜனவரி 10ஆம் தேதி முதல் இந்தியாவில் precaution டோஸ் எனப்படும் மூன்றாவது டோஸ் தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

'Precaution டோஸ்' என்றால் என்ன?
'Precaution டோஸ் (முன்னெச்சரிக்கை டோஸ்)' என்பதற்கு சரியான வரையறை தற்போது இல்லை. ஆனால் கோவிட் தடுப்பூசி குறித்த தொழில்நுட்பக் குழு வழங்கிய ஆலோசனைகளின்படி, கோவிட் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ், முதல் இரண்டு டோஸ்களில் இருந்து வேறுபட்ட தளத்தின் அடிப்படையில் தடுப்பூசியாக இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. .

எப்போது டோஸ் செலுத்த வேண்டும்?
இந்தியாவில், Precaution டோஸ் செலுத்திக்கொள்ள, 5 முதல் 6 மாதங்களுக்கு முன்பு கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு டோஸ் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்களாக இருக்க வேண்டும். ஓமிக்ரான் பரவலுக்கு மத்தியில், இடைவெளியில் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்திருக்கலாம் என்ற அச்சம் இருந்தது. எனவே, "Precaution டோஸ்" என்ற சொல், அடுத்த ஷாட் மூன்றாவது ஷாட் அல்லது புதிய தடுப்பூசியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இரண்டாவது டோஸுக்கும் இந்த மூன்றாவது Precaution டோஸுக்கும் இடையே எத்தனை காலம் இருக்க வேண்டும் என்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது மற்றும் Precaution டோஸுக்கு இடையேயான இடைவெளி 9 முதல் 12 மாதங்கள் வரை இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயது முதியவர்கள்
Precaution டோஸ் முடிவு சுகாதார மற்றும் முன்கள பணியாளர்களின் நம்பிக்கையை பலப்படுத்தும். 2022 ஜனவரி 10 ஆம் தேதி முதல் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு, நோய்த்தொற்றுகள் உள்ளவர்களுக்கு Precaution டோஸ் செலுத்தப்படும் என்று கூறினார் பிரதமர் மோடி. இவர்கள் ஏற்கனவே இருமுறை செலுத்திக் கொண்டே அதே தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பூஸ்டர் ஷாட் என்றால் என்ன?
பூஸ்டர் ஷாட் என்பது வெளியேறும் கோவிட் தடுப்பூசி திட்டத்தின் இயல்பான பகுதியாகும். கொரோனா தடுப்பூசி நிர்வகிக்கப்பட்ட பிறகு இது ஒரு தடுப்பூசியின் கூடுதல் டோஸ் ஆகும். பூஸ்டர் ஷாட் என்றழைக்கப்படும் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ், அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தால் பரிந்துரைக்கப்பட்டது. இது ஃபைசர் அல்லது மாடர்னா என்ற இரண்டு-டோஸ் போட்டுக்கொண்ட மிதமான மற்றும் கடுமையான நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நபர்களுக்கு தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் 28 நாட்களுக்குப் பிறகு பெறப்படுகிறது. இது அவர்களின் இரண்டாவது டோஸ்.

மூன்றாவது தடுப்பூசி
மூன்றாவது டோஸ் மூலம், நோயெதிர்ப்பு அமைப்பு வைரஸுக்கு எதிராக ஆன்டிபாடிகளை உருவாக்க முடியும். உடலின் நோயெதிர்ப்பு அமைப்புக்கு எதிராக பாதுகாக்க வேண்டிய வைரஸை நினைவூட்டுவதற்கு ஒரு பூஸ்டர் ஷாட் வழங்கப்படுகிறது. இந்த மூன்றாவது ஷாட், ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு கொடுக்கப்பட்டால், நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது அல்லது ஊக்கமளிக்கிறது.

கோவாக்சின் தடுப்பூசி
15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு, ஜனவரி 3 ஆம் தேதி முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள சிறுவர்களுக்கான கோவாக்சின் தடுப்பூசிக்கு மட்டுமே இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதனால், குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்படும்.

இறுதிகுறிப்பு
பூஸ்டர் டோஸ் என்று அழைக்கப்படும் இந்த மூன்றாவது தடுப்பூசி தான் கொரோனாவுக்கு எதிரான முக்கிய ஆயுதமாக கூறப்படுகிறது. அனைத்து வழிகாட்டுதல்களையும் பின்பற்றுவதே கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மிகப்பெரிய ஆயுதம் என்று தொற்றுநோயை எதிர்த்துப் போராடிய உலகளாவிய அனுபவம் கூறியுள்ளதாக பிரதமர் கூறினார்.



Click it and Unblock the Notifications











