மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் உடம்புக்குள்ள என்னலாம் நடக்கும்-ன்னு தெரியுமா?

மலச்சிக்கலின் போது உடலுக்கு என்ன நடக்கிறது என்று எப்போதாவது யோசித்ததுண்டா? அல்லது உங்களுக்கு என்ன நடக்கும் என்றாவது தெரியுமா?

பெரும்பாலானோர் தங்கள் வாழ்நாளில் கட்டாயம் சந்திக்கும் ஓர் பொதுவான பிரச்சனை தான் மலச்சிக்கல். இப்பிரச்சனையைப் பற்றி பலர் வெளிப்படையாக மற்றவர்களுடன் பேச தயக்கம் கொள்வார்கள். மலச்சிக்கலானது ஒருவருக்கு ஏற்படுவதற்கு அவர்களது பழக்கவழக்கங்களும், வாழ்க்கை முறையும் தான் முக்கிய காரணம்.

What Happens To Your Body When You’re Constipated

நார்ச்சத்து குறைவாக உணவுகளைக் குறைத்து, கொழுப்புக்கள் அதிகம் நிறைந்த உணவுகளை உண்பதால், குடலால் கழிவுகளை வெளியேற்ற முடியாமல், வெளியேற்றப்பட வேண்டிய கழிவுகள் இறுக்கமடைந்து, மலச்சிக்கலை உண்டாக்குகின்றன. இப்படிப்பட்ட மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்ய பல இயற்கை வழிகள் உள்ளன.

ஆனால் மலச்சிக்கலின் போது உடலுக்கு என்ன நடக்கிறது என்று எப்போதாவது யோசித்ததுண்டா? அல்லது உங்களுக்கு என்ன நடக்கும் என்றாவது தெரியுமா? இல்லையெனில், இக்கட்டுரையில் மலச்சிக்கலின் போது உடலுக்குள் என்ன நடக்கிறது என்பதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தசை கிழியும்

தசை கிழியும்

மலம் எளிதில் வெளியேறாமல் இருக்கும் போது சங்கடமாக இருக்கலாம். ஆனால் மலச்சிக்கலால் கழிவறையில் சிரமப்படும் போது அது குறிப்பிட்ட தசை கழிய வழிவகுக்கும். அதிலும் மலத்தை வெளியேற்ற அதிகமான அழுத்தத்தைக் கொடுக்கும் போது, மலம் வெளியேறும் வெளிப்புற தசை கழிக்கப்படலாம். இந்த தசை தான் குடலியக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது. இந்த தசையில் வழக்கத்திற்கு அதிகமான அழுத்தம் தினசரி கொடுக்கப்படும் போது, அப்பகுதியில் வீக்கத்தை மட்டுமின்றி, இரத்தப்போக்கையும் ஏற்படுத்தக்கூடும்.

பசியில் மாற்றம் ஏற்படும்

பசியில் மாற்றம் ஏற்படும்

எப்போது ஒருவரால் சரியாக மலத்தை வெளியேற்ற முடியாமல் போகிறதோ, அப்போது சிறிது சாப்பிட்டாலும், அது எளிதில் வயிறு நிறைந்த உணர்வை உண்டாக்கும். குறிப்பாக நாள்பட்ட மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தான், இம்மாதிரியான பிரச்சனையை சந்திப்பார்கள்.

உடல் வறட்சி/நீரிழப்பு

உடல் வறட்சி/நீரிழப்பு

உடலில் போதுமான அளவு நீரில்லாமல் போகும் போது, உடலில் இருந்து வெளியேற்றப்பட வேண்டிய கழிவுகள் இறுக்கமடைந்து, மலச்சிக்கல் ஏற்படுகிறது. அதிலும் ஒருவர் மலச்சிக்கலுடன், உடல் வறட்சியையும் கொண்டிருந்தால், அது அவர்களுக்கு தலை வலி, தலைச் சுற்றல் மற்றும் அதிகப்படியான வியர்வை வெளியேறுவது போன்றவற்றை சந்திக்க வழிவகுக்கும்.

மூல நோய்

மூல நோய்

மலச்சிக்கலால் அடிக்கடி கஷ்டப்படுபவர்களுக்கு, மூல நோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. ஏனெனில் மலம் கழிக்கும் போது அதிகப்படியான அழுத்தத்தை வழக்கத்தை விட அதிகமாக கொடுக்கும் போது, ஆசன வாயில் உள்ள சிறிய இரத்த குழாயில் தொடர்ச்சியாக அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டு, அந்த இரத்த நாளங்கள் வீக்கமடைய ஆரம்பித்து, மூல நோயை உண்டாக்கும்.

சிறுநீர் கசிவு

சிறுநீர் கசிவு

உடலில் சிறுநீர்ப்பை மற்றும் பெருங்குடலும் அருகாமையில் அமைந்துள்ளது. கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் சிறுநீரகத் துறையின் கூற்றுப்படி, சிறுநீர்ப்பையை ஒழுங்குபடுத்தும் தசைகள் மற்றும் நரம்புகளுக்கும், குடலியக்கத்தை சீராக வைத்துக் கொள்ளும் தசைகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. பெருங்குடலில் அதிகளவிலான மலம் சேரும் போது, அது சிறுநீர்ப்பையில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். இதன் விளைவாக பகல் மற்றும் இரவு நேரங்களில் சிறுநீர் கசிவுக்கு வழிவகுக்கும்.

வயிற்று உப்புசம் மற்றும் வாய்வு தொல்லை

வயிற்று உப்புசம் மற்றும் வாய்வு தொல்லை

மலச்சிக்கல் பிரச்சனையால் கஷ்டப்படுபவர்களால், எளிதில் வாய்வு வெளியேற்ற முடியாமல் போகும். இதன் விளைவாக அவர்கள் வயிறு உப்புச பிரச்சனையை சந்திக்கக்கூடும். ஏனெனில் எப்போது ஒருவரது குடலில் மலம் வழக்கத்தை விட அதிக நேரம் இருக்கிறதோ, அப்போது குடலில் உள்ள பாக்டீரியாக்கள் மலத்துடன் சேர்ந்து செயல்பட்டு வாய்வை உருவாக்கும். இப்படி உருவாகும் வாய்வு இறுக்கமடைந்த மலம் காரணமாக எளிதில் வெளியேற்ற முடியாமல், வயிற்று உப்புச பிரச்சனையை சந்திக்க வைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Friday, February 19, 2021, 14:45 [IST]
Desktop Bottom Promotion