Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
ஆயுர்வேதத்தின்படி நீங்க ஏன் நின்னுகிட்டு தண்ணீர் குடிக்கக்கூடாது? அப்படி குடிச்சா என்ன நடக்கும்?
முதலாவதாக, ஒரு கிளாஸ் தண்ணீரை ஒரே நேரத்தில் குடிக்க வேண்டாம். மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக அருந்த வேண்டும். இரண்டாவதாக, உணவு உண்பதற்கு முன் அல்லது அதற்குப் பிறகு தண்ணீர் குடிக்கவேண்டாம்.
பூமியில் தண்ணீர் இன்றி வாழ்வது என்பது சாத்தியமற்றது. ஒரு மனிதன் உயிர்வாழ தண்ணீர் அவசியம். ஏனெனில், நச்சுகளை வெளியேற்றவும், ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனை உயிரணுக்களுக்கு கொண்டு செல்லவும், நமது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், மூட்டுகளை உயவூட்டவும், நம் உடலுக்கு தண்ணீர் தேவை. ஆனால், பழங்கால இந்திய மருத்துவ முறையான ஆயுர்வேதம், சரியான அளவு தண்ணீரைக் குடித்தால் மட்டுமே அனைத்து நன்மைகளையும் பெற முடியும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது. அது சரி, ஒரே நேரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீரை குடிப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், இதை இப்போதே நிறுத்த வேண்டும்.

ஆயுர்வேதத்தின்படி, தண்ணீரை தவறாகக் குடிப்பது பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அவற்றில் ஒன்று செரிமான செயல்முறையை சீர்குலைப்பது. எளிதில் செரிமானிக்காத உணவுகளை சாப்பிடும்போது சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும். அவற்றை சரியாக செய்யாவிட்டால் செரிமானம் தூண்டப்படுவதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். இக்கட்டுரையில் ஆயுர்வேதத்தின்படி, நீங்கள் தண்ணீர் எப்படி எவ்வாறு கூடிய வேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தண்ணீர் எப்படி செரிமான செயல்முறையை சீர்குலைக்கும்?
ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உணவு சரியான செரிமானம் அவசியம். உணவைத் தொடங்கும் முன் அதிகப்படியான தண்ணீரைக் குடித்தால் அல்லது உணவுக்கு இடையில் குடித்தால், அது மோசமான செரிமான ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. இதைச் செய்வது வயிற்றில் உள்ள உணவின் நிலையை நேரடியாக பாதிக்கிறது என்று நம்பப்படுகிறது. தவிர, தண்ணீர் ஒரு குளிரூட்டி மற்றும் உணவு நேரத்தில் செரிமான தீயை அமைதிப்படுத்தும். உணவின் போது தொடர்ந்து தண்ணீர் பருகுவதும் உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.

தண்ணீர் அருந்துவதற்கான சரியான வழி
முதலாவதாக, ஒரு கிளாஸ் தண்ணீரை ஒரே நேரத்தில் குடிக்க வேண்டாம். மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக அருந்த வேண்டும். இரண்டாவதாக, உணவு உண்பதற்கு முன் அல்லது அதற்குப் பிறகு தண்ணீர் குடிக்கவேண்டாம். இது இரைப்பைச் சாற்றை நீர்த்துப்போகச் செய்து, உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை ஜீரணித்து உறிஞ்சுவதை உங்கள் அமைப்பு கடினமாக்குகிறது.

சாப்பிடும்போது தண்ணீர் அருந்தலாமா?
உங்களுக்கு தாகமாக இருந்தால், உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் தண்ணீர் குடிக்கவும் அல்லது சாப்பிட்ட பிறகு 30 நிமிடங்கள் காத்திருந்து தண்ணீர் குடிக்கவும். சாப்பிடும் போது, நீங்கள் வறண்டு போனதாக உணர்ந்தால், ஒரு கிளாஸ் தண்ணீர் அல்லாமல், 1/2 டம்ளர் தண்ணீர் குடிக்கவும். மேலும், உணவை நன்றாக ஜீரணிக்க வெதுவெதுப்பான நீரைக் குடிக்கவும். ஒரு கிளாஸ் குளிர்ந்த நீரை விட வெதுவெதுப்பான நீர் அதிக ஈரப்பதம் கொண்டது.

ஏன் நின்று கொண்டு தண்ணீர் குடிக்கக்கூடாது?
தண்ணீர் குடிக்கும் போது நீங்கள் செய்ய வேண்டிய மற்றொரு விஷயம் இன்னும் குறைவாக உள்ளது. நீங்கள் நின்றுகொண்டு தண்ணிர் அருந்தக்கூடாது. அப்படி நின்று கொண்டு ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்தால், பல உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும். உங்களை ஆபத்தில் ஆழ்த்தும்.

நின்றுகொண்டு தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும்?
நின்றுகொண்டு தண்ணீர் குடிக்கும் போது, அது நேராக தொண்டை வழியாக செல்கிறது. இது உங்கள் உடலில் இருந்து எளிதில் கடந்து பெருங்குடலை அடைகிறது. மெதுவாக குடிப்பதால், உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் திரவம் சென்றடைகிறது. அங்கு அது வேலை செய்ய வேண்டும். இது சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீர்ப்பையில் இருந்து நச்சுகள் படிவதற்கு வழிவகுக்கிறது. மேலும், தண்ணீரை விழுங்குவது உண்மையில் உங்கள் தாகத்தைத் தணிக்காது.



Click it and Unblock the Notifications











