Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
நீங்க சாதாரணமா நினைக்கிற இந்த பிரச்சினைகள் இந்த ஆபத்தான புற்றுநோயின் ஆரம்ப நிலையாக இருக்கலாம்...!
மிகவும் ஆபத்தான புற்றுநோய்களில் ஒன்று மூளை புற்றுநோய் ஆகும். உலக மக்கள் தொகையில் 1 சதவீதத்தினர் மட்டுமே இந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது.
ஆண்டுதோறும் உலகில் பல்வேறு புற்றுநோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குணப்படுத்தக் கூடிய புற்றுநோய், குணப்படுத்த முடியாத புற்றுநோய் என இந்த உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட புற்றுநோய்கள் உள்ளது. இதில் மிகவும் ஆபத்தான புற்றுநோய்களில் ஒன்று மூளை புற்றுநோய் ஆகும்.

உலக மக்கள் தொகையில் 1 சதவீதத்தினர் மட்டுமே இந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது. ஆனால் இதில் மோசமான பகுதி என்னவென்றால், அதன் அறிகுறிகள் பெரும்பாலும் தலைவலி அல்லது ஒற்றைத் தலைவலி போன்ற அன்றாட சாதாரண குறைபாடுகளாகவே உள்ளது. எனவே மூளைப் புற்றுநோய்க்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியமாகும். அதற்கு இதன் ஆரம்பகால அறிகுறிகளை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். இந்த பதிவில் நீங்கள் புறக்கணிக்க கூடாத மூளை புற்றுநோயின் அமைதியான அறிகுறிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

அடிக்கடி தலைவலி
மூளைப் புற்றுநோயின் பொதுவான அறிகுறிகளில் ஒன்று தொடர்ச்சியான தலைவலி. சிகிச்சையளிக்க நீங்கள் சாதாரண மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம் மற்றும் இது சிறிது நேரத்தில் நிவாரணம் பெறலாம், ஆனால் இது ஒரு புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம், இது மூளை புற்றுநோயாக கூட இருக்கலாம். நாளடைவில் இந்த தலைவலி மோசமாக மாறலாம், குறிப்பாக காலையில் எழுந்தவுடன் தலைவலி அதிகமாக இருக்கும். இவ்வாறு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியமாகும்.

பார்வையின் தரம் குறைதல்
மூளைப் புற்றுநோயின் மற்றொரு முக்கியமான அறிகுறி பார்வை இழப்பு அல்லது பார்வையின் தரத்தில் குறைவு ஏற்படுவதாகும். நீங்கள் மங்கலான கண்பார்வையை அனுபவிக்கலாம் மற்றும் நீங்கள் பார்வையை இழக்கும் தருணங்களைக் கொண்டிருக்கலாம், இதை கண்களின் நரைத்தல் என்றும் அழைக்கலாம். குறிப்பாக நீங்கள் விரைவாக எழுந்து நிற்கும்போது அல்லது நீங்கள் திடீரென நீங்கள் இருக்கு நிலையை மாற்றும்போது கண்கள் மங்கலாக தெரிந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியமாகும்.

பலவீனம்
மூளையில் புற்றுநோய்க் கட்டி வளர தொடங்கும்போது நீங்கள் பெரும்பாலான நேரம் பலவீனமாகவும், சோம்பலாகவும் உணரலாம். ஏனெனில், கட்டி வளர்ச்சியுடன், மூளை அதிக அழுத்தத்தால் தாக்கப்பட்டு, உங்கள் தூக்க முறையை கூட பாதிக்கும். நிம்மதியற்ற தூக்க முறை ஏற்பட்டு இறுதியில் நீங்கள் மயக்கம் மற்றும் சோம்பல் உணர முடியும்.

வலிப்பு
மூளைப் புற்றுநோயின் மிகவும் பொதுவான அறிகுறி இதுவாகும். வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரிடம் சென்றால் முதலில் அவர்களுக்கு மூளைப் புற்றுநோய்க்கான சோதனைதான் எடுக்கப்படும். அவர்களது குடும்பத்தில் யாருக்கும் இல்லாமல் திடீரென ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு மூளையில் கட்டி இருக்க வாய்ப்புள்ளது. மூளைப் புற்றுநோய் கண்டறியப்பட்ட நோயாளிகளில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதியினர் புற்றுநோயைக் கண்டறிவதற்கு முன்பு வலிப்பை உணர்ந்ததாக கூறுகிறார்கள்.

சமநிலை இழப்பு
உங்கள் மூளை அமைப்பு பாதிக்கப்படும்போது, அது உங்கள் உடலின் இயந்திர செயல்பாட்டை பாதிக்கிறது. எனவே, நீங்கள் நடப்பதில் சிக்கல் இருந்தால் அல்லது ஒரு பக்கம் சாய்ந்தால், உங்கள் மூளை ஒருங்கிணைப்பு மற்றும் சமநிலையில் பிரச்சினை உள்ளது என்று அர்த்தம். இவ்வாறு இருந்தால் உங்களுக்கு மூளையில் புற்றுநோய் இருக்க வாய்ப்புள்ளது.

கருவுறாமை
நம் ஹார்மோன்களின் உற்பத்தியைக் கூட மூளை கட்டுப்படுத்த முடியும். நீங்கள் புற்றுநோயால் அவதிப்பட்டால், அது பிட்யூட்டரி சுரப்பியை பாதிக்கும் மற்றும் அதிக அளவு ஹார்மோன்களை சுரக்கக்கூடும் மற்றும் பிற சுரப்பிகளின் இயல்பான வேலையைத் தடுக்கலாம். இதனால் கருவுறுதலில் பிரச்சினை ஏற்படலாம்.

கேட்கும் திறன் இழப்பு
மூளை புற்றநோய்க் கட்டிகள் ஒரு நபரின் கேட்கும் திறனையும் பாதிக்கலாம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனுபவிக்கும் சில அசாதாரண இடையூறுகள் காது கேளாமை மற்றும் காதுகளில் ஒலிக்கும் உணர்வு ஆகியவை அடங்கும்.

அறிவாற்றல் வீழ்ச்சி
மூளைக் கட்டி மூளையின் செயலாக்க வேகத்தையும் பாதிக்கலாம். ஒரு நபர் அடிப்படை பணிகளை முடிக்க வழக்கத்தை விட அதிக நேரம் எடுத்தால், மருத்துவரை அணுகுவது பரிந்துரைக்கப்படுகிறது. அறிவாற்றலில் இடையூறு மற்றும் நினைவக இழப்பு மூளைப் புற்றுநோயின் குறிப்பிடத்தக்க அறிகுறிகளாக இருக்கலாம்.



Click it and Unblock the Notifications