Latest Updates
-
வார ராசிபலன் (15 March 2026-21 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை டபுளாக உயரும்.. -
வெயிலால் முகம் கருமை ஆகக்கூடாதா? அப்ப கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க... -
வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. குளுகுளு-ன்னு சூப்பரான குச்சி ஐஸ் செய்யலாம்.. எப்படி-ன்னு பாருங்க.. -
பங்குனி மாத ராசி பலன் 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...!
உங்க வாயில 'இப்படி' இருந்தா அது வாய் புற்றுநோயோட ஆரம்ப அறிகுறியாம்.. உஷாராகிக்கோங்க...
ஒருவருக்கு புற்றுநோய் இருந்தால், அது ஏற்கனவே ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்ட ஆரம்பித்திருக்கும். புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு வகைக்கேற்ப அறிகுறிகள் மாறுபடும்.
நோய்களிலேயே மிகவும் ஆபத்தான மற்றும் கொடிய நோய் என்றால் அது புற்றுநோய். இந்தியாவில் புற்றுநோய் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. மேலும் ஒவ்வொரு நாளும் யாராவது ஒருவர் புற்றுநோய் பற்றி புகாரளிக்கின்றனர். புற்றுநோயானது சித்ரவதை செய்து மரணத்தை உண்டாக்கும். புற்றுநோய்க்கு இன்னும் நிரந்தரமான சிகிச்சை இல்லை. மேலும் ஒரு சிகிச்சை உள்ளது என்றால், அது மிகவும் விலை உயர்ந்தது. இந்த சிகிச்சையில் லட்சம் முதல் கோடி வரை செலவாகும்.

ஒருவருக்கு புற்றுநோய் இருந்தால், அது ஏற்கனவே ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்ட ஆரம்பித்திருக்கும். புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு வகைக்கேற்ப அறிகுறிகள் மாறுபடும். அதில் வாய் புற்றுநோய் குறித்து அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதுவும் அதன் அறிகுறிகளை தெரிந்து வைத்திருந்தால் ஆரம்பத்திலேயே அதைக் குணப்படுத்திவிட முடியும். இப்போது வாய் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் என்னவென்பதைக் காண்போம்.

வெள்ளை அல்லது சிவப்பு காயங்கள்/வெடிப்பு
வாயில் வெள்ளை அல்லது சிவப்பு நிறத்தில் வெடிப்புகள் அல்லது காயங்கள் இருந்தால், உடனே அதை மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை பெற வேண்டும். அதுவும் வாயில் இருக்கும் புண் பல நாட்களாக குணமாகாமல் இருந்தால், அது வாய் புற்றுநோயின் அறிகுறியாகும்.

கட்டிகள்
உங்கள் சருமத்தில் ஏதேனும் ஒரு கட்டி இருந்தால், அதுவும் நீண்ட நாட்களாக குணமாகாமல் கட்டி இருந்தால், அந்த கட்டியை உடனே மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை மேற்கொள்ளுங்கள். ஏனென்றால் இந்த கட்டியை அப்படியே விட்டுவிட்டால், அது விரைவில் புற்றுநோயின் வளர்ச்சியை ஆரம்பித்துவிடும். பின் பெரிய சிரமத்தை சந்திக்க வேண்டியிருக்கும்.

காயங்கள்
ஒரு மாதத்திற்கும் மேலாக குணமாகாத காயம் வாயில் மட்டுமின்றி, சருமத்திலும் இருந்து, எந்த மருந்து பயன்படுத்தியும் குணமாகாமல் இருந்தால், அது புற்றுநோயினால் ஏற்பட்ட காயமாக இருக்கலாம். எனவே கவனமாக இருங்கள்.

மிகுந்த காரம்
ஒருவர் லேசான காரம் நிறைந்த உணவை உண்ணும் போது, அதிக காரத்தை உணர்ந்தால், அதுவும் தாங்கிக் கொள்ள முடியாத அளவில் காரத்தை அனுபவித்தால், அது வாய் புற்றுநோயின் அறிகுறிளாக இருக்கும்.

வாயைத் திறப்பது அல்லது பேசுவதில் சிரமம்
வாயைத் திறப்பதில் அல்லது நாக்கை வெளியே கொண்டு வருவதில் சிரமத்தை சந்தித்தால், அதுவும் வாய் புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறியாகும். இம்மாதிரி நீங்கள் அனுபவித்தால், உடனே உஷாராகிக் கொள்ளுங்கள்.

மிகுந்த காரம்
ஒருவர் லேசான காரம் நிறைந்த உணவை உண்ணும் போது, அதிக காரத்தை உணர்ந்தால், அதுவும் தாங்கிக் கொள்ள முடியாத அளவில் காரத்தை அனுபவித்தால், அது வாய் புற்றுநோயின் அறிகுறிளாக இருக்கும்.

குரல் மாற்றங்கள்
உங்கள் குரலில் மாற்றங்கள், அதிகப்படியான எச்சில் சுரப்பு அல்லது எச்சில் வெளியேறுவது, விழுங்குவது அல்லது பேசுவதில் சிரமத்தை சந்திதால், அது வாய் புற்றுநோயின் அறிகுறியாகும். இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று தோன்றினால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.



Click it and Unblock the Notifications











