Just In
- 32 min ago இந்த இரண்டு பாத வடிவத்தில் உங்க வடிவம் எப்படி இருக்குனு சொல்லுங்க? நீங்க எப்படிப்பட்டவர்னு நாங்க சொல்றோம்...!
- 1 hr ago யூரிக் அமிலத்தை குறைக்கனுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
- 1 hr ago எகிப்தியர்கள் ஏன் உலகின் சிறந்த நாகரீகமாக கருதப்படுகிறார்கள் தெரியுமா? இந்த 3 அதிசயங்களே அதற்கு சாட்சி!
- 2 hrs ago பானை போன்று வீங்கியிருக்கும் தொப்பையை குறைக்கணுமா? அப்ப இந்த 2 விதையை நீரில் கொதிக்க வெச்சு குடிங்க..
Don't Miss
- Technology OPPO Find X7 Ultra.. எந்த ஆங்கிள்ல பார்த்தாலும் பக்கா மாஸ்.. மற்ற Camera Phones-லாம் இது முன்னால தூசு!
- News தங்கமான தங்கைக்கு திருமண பரிசு கொடுக்க ஆசைப்பட்ட அண்ணன்.. அடித்தே கொன்ற மனைவி
- Sports ஒரே ஓவர்.. 2 விக்கெட்டையும் தூக்கிய தமிழக வீரர்.. DC நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்த சந்தீப் வாரியர்!
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Movies ஸ்டார் ஹோட்டலில் திருமண நாள் கொண்டாட்டம்.. அஜித் மடியில் ஏஞ்சல் போல அமர்ந்திருக்கும் ஷாலினி!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இதுவரை கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசிகளால் என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளது தெரியுமா?
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. உலகின் பல நாடுகள் இந்த வைரஸால் பொருளாதாரரீதியாகவும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் முடங்கியுள்ளது.
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. உலகின் பல நாடுகள் இந்த வைரஸால் பொருளாதாரரீதியாகவும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் முடங்கியுள்ளது. உலகம் முழுவதும் இதற்கான தடுப்பூசி கண்டறியும் முயற்சிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
ரஷ்யா தனது தடுப்பூசியை அறிவித்துள்ள நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனங்களும், சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளும் தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டுள்ளது. ஒரு வைரஸ்க்காக தடுப்பூசி இவ்வளவு வேகமாக கண்டறிவது உலக வரலாற்றில் இதுதான் முதல்முறை. ரஷ்யா தடுப்பூசி கண்டறிந்து விட்டாலும் அதில் சில பக்கவிளைவுகள் உள்ளதாக கூறப்படுகிறது. மற்ற தடுப்பூசிகளிலும் சில பக்க விளைவுகள் உள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா தடுப்பூசிகளில் இருக்கும் பக்க விளைவுகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
தடுப்பூசியின் பக்க விளைவுகள்
தடுப்பூசிகள் தொற்றுநோயிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாக இருந்தாலும், இன்னும் தடுப்பூசி பக்க விளைவுகளிலிருந்து விடுபடவில்லை. ஒரு தடுப்பூசி அனைவருக்கும் பொருந்தாது, அல்லது மக்களுக்கு சில விரும்பத்தகாத பக்க விளைவுகளை ஏற்படுத்தும், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய வகைகளைச் சேர்ந்தவர்களுக்கு மெலிதான வாய்ப்புகள் உள்ளன. தடுப்பூசி ஆய்வுகளின் சமீபத்திய கண்டுபிடிப்புகள் அதையே முன்னிலைப்படுத்தியுள்ளன, நாம் ஏன் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் நமது சொந்த பாதுகாப்பிற்காக பிற சமூக நடவடிக்கைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்பதை விளக்குகிறது. தடுப்பூசி சோதனைகளில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மூன்று மிகப்பெரிய பக்க விளைவுகளை மேற்கொண்டு பார்க்கலாம்.
ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி நிறுத்தப்பட்டது
மூன்றாம் கட்ட சோதனைகளைத் தொடங்குவதற்கு தயாராக இருந்த ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி இந்த வாரம் இடைநிறுத்தப்பட்டது. சோதனை மேற்கொண்ட 60,000 தன்னார்வலர்களில் ஒருவர் சோதனைகளின் நடுவில் ஒரு 'விவரிக்கப்படாத' நோயால் பாதிக்கப்பட்டார். தடுப்பூசி, அதன் அணுகுமுறையில் புதுமையானதாகக் கருதப்படுகிறது. இந்ததடுப்பூசிக்கு ஒரு ஷாட் மட்டுமே தேவைப்படுவதால், 'உறைபனி' அல்லது சேமிப்பக தடைகள் தேவையில்லை என்பதால், ஒரு பிரதான தடுப்பூசி வேட்பாளராகக் கருதப்படுகிறது. இருப்பினும், நோயின் எதிர்பாராத அறிக்கை சோதனைகளை சற்று பின்னுக்குத் தள்ளியுள்ளது.
ஏன் நிறுத்தப்பட்டுள்ளது?
இந்த இடைநிறுத்தம் அதன் சோதனையின் ஒரு பகுதியாகும், ஆனால் "ஒழுங்குமுறை அல்லது பாதுகாப்பு" கவலைகள் காரணமாக இந்த இடைநிறுத்தம் செய்யவில்லை என்று மருந்து தயாரிப்பாளர் பரிந்துரைத்துள்ளார். தன்னார்வலருக்கு மருந்து டோஸ் கிடைத்ததா இல்லையா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், ஒரு தடுப்பூசி மீது நம்பிக்கையைத் தூண்டுவதற்கு முன்பு நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சோதனை தெளிவுபடுத்தியுள்ளது. ஜான்சன் மற்றும் ஜான்சனின் தடுப்பூசி ஆக்ஸ்போர்டு தடுப்பூசியைப் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது.
MOST READ: தலைசுற்ற வைக்கும் இந்திய அரசர்களின் அந்தப்புர ரகசியங்கள்... அதிர்ச்சியாகாம படிங்க...!
எலிலில்லியின் ஆன்டிபாடி காக்டெய்ல்
எலி லில்லியின் தனித்துவமான சோதனை ஆன்டிபாடி காக்டெய்ல், தடுப்பு மருந்தாக செயல்படுகிறது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது சிகிச்சையின் போது அதே மருந்துகளை உட்கொண்ட பிறகு அதன் செயல்திறன் விகிதங்களை பாராட்டியதிலிருந்து இது கவனம் பெற்றுள்ளது. காக்டெய்ல் மருந்து கலவையான ரெஜெனெரான் இன்னும் இரண்டாம் கட்ட ஆய்வில் இருக்கும்போது, சோதனைகள் இடைநிறுத்தப்பட்டதாக நிறுவனம் அறிவித்தது.
ஏன் நிறுத்தப்பட்டது?
இந்த தடுப்பூசியானது ஒரு வகை மோனோக்ளோனல் ஆன்டிபாடிகளைப் பயன்படுத்துகிறது, இது மீட்கப்பட்ட COVID நோயாளியிடமிருந்து தகவல்களை மீட்டெடுத்த பிறகு தயாரிக்கப்படுகிறது. ஆன்டிபாடி சிகிச்சைகள் சோதனை தடுப்பூசிகளைக் காட்டிலும் பாதுகாப்பானதாகக் கருதப்பட்டாலும் அவை நோய் எதிர்ப்பு சக்தியை நேரடியாக மேம்படுத்துவதால், எலி லில்லியின் சமீபத்திய குறைபாடு கண்டுபிடிப்பு, COVID-19 க்கு போராட்டத்தில் எந்தவொரு சிகிச்சையையும் முழுமையாக நம்ப முடியாது என்பதை இது நிரூபித்துள்ளது.
ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி
ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா பல்கலைக்கழகம் COVID தடுப்பூசியை கண்டறிந்தது, தடுப்பூசிக்கான பந்தயத்தில் இது முன்னணியில் இருப்பதாகும். இருப்பினும், தடுப்பூசியால் பக்க விளைவை சந்தித்த முதல் நபர்களில் ஒருவராக இருந்தார், குழுவில் ஒரு பெண், ஒரு ஆரோக்கியமான தன்னார்வலர் மர்ம அறிகுறிகளைப் பற்றி புகார் செய்தார், நரம்பியல் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டார். பக்க விளைவு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தடுப்பூசிக்கான கட்டம் II / III சோதனைகள் இந்தியா உட்பட உலகம் முழுவதும் மறுமதிப்பீடு செய்ய நிறுத்தப்பட்டன.
ஏன் நிறுத்தப்பட்டது?
பக்க விளைவு குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், அந்த பெண் ஒரு மர்மமான தீவிர முதுகெலும்பு அழற்சி நோய்க்குறி, டிரான்ஸ்வர்ஸ் மயிலிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது, பின்னர் அவை பங்கேற்பாளரின் முன்பே இருக்கும் சுகாதார பிரச்சினையால் ஏற்பட்டது கண்டறியப்பட்டது. ஆராய்ச்சிக்கு பின்னர், செப்டம்பர் கடைசி வாரத்தில் உலகெங்கிலும் ஒரு மருத்துவ ஆய்வுக்கு சோதனைகள் வழங்கப்பட்டன.
MOST READ: இந்த ராசி பெண்கள் சிறந்த மனைவியாக இருப்பதற்காக பிறந்தவர்கள்... இவங்க கிடைக்கிறது உங்க அதிர்ஷ்டம்...!
இந்த பாதுகாப்பு அறிக்கைகள் ஆபத்தானதா?
இந்த கட்டத்தில் ஏதேனும் பாதுகாப்பு கவலைகள் அல்லது சிக்கல்களைக் கண்டுபிடிப்பது, உலகெங்கிலும் உள்ள வழக்குகளில் பெரும் உயர்வைக் காணும்போது, சிக்கலானதாகத் தோன்றுகிறது. இவை அனைத்தும் மோசமான செய்திகள் இல்லை. இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட சோதனைகளின் போது ஏற்படும் ந்தவொரு கண்டுபிடிப்பும் அல்லது எதிர்மறையான விளைவுகளும் விஞ்ஞானிகளுக்கு பாதுகாப்பான தடுப்பூசி கண்டறிய உதவியாக இருக்கும். ஒரு சமூகமாக, நம்முடைய வெளிப்பாடு அபாயத்தைக் குறைப்பதற்கும், நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்துவதற்கும் இன்னும் பல தடுப்பு நடவடிக்கைகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும். ஏனெனில் இந்த ஆரம்ப நிலையில் பாதுகாப்பான தடுப்பூசியை பெறுவது சாத்தியமில்லை.