Just In
- 7 min ago குழந்தையின்மைக்கு இந்த பிரச்சனைகள் எல்லாம் காரணமாக இருக்கலாம்.. கவனியுங்கள்..!
- 1 hr ago புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- 1 hr ago உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
- 1 hr ago ஜாகிங் போகும் போது இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க... இல்லனா உங்க எலும்புகள் அவ்வளவுதான்...!
Don't Miss
- News நிர்மலா சீதாராமன் ஒரே போடு.. "மீண்டும் தேர்தல் பத்திர திட்டம் கொண்டு வருவோம்".. ஓடோடி வந்த காங்கிரஸ்
- Sports தோனி பேட்டிங் ஆட வருவதை தாமதப்படுத்திய வீரருக்கு விருது கொடுத்த ஜான்டி ரோட்ஸ்.. என்ன நடந்தது?
- Movies Trisha: 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே கொண்டாட்டம்.. வீடியோ வெளியிட்ட திரிஷா!
- Finance TikTok: கங்கணம் கட்டுக்கொண்டு சுத்தும் அமெரிக்கா.. 70 லட்சம் நிறுவனங்களுக்கு ஆப்பு..!!
- Automobiles ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
கொரோனா தடுப்பூசி போட்டவர்களிடம் வெளிப்படும் கொரோனாவின் புதிய அறிகுறிகள்!
கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னரும், கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் கொரோனா தடுப்பூசி போட்ட பின் ஏற்படும் தொற்றினால் சந்திக்கும் கொரோனா அறிகுறிகள் மாறுபடலாம்.
தற்போது இந்தியா கொரோனா வைரஸின் இரண்டாவது அலையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. பலர் காய்ச்சல், இருமல், சளி, மூச்சுத் திணறல், உடல் வலி போன்ற கடுமையான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர் மற்றும் பல நோயாளிகளுக்கு சிக்கல்கள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆக்ஸிஜன் தெரபி அவசியமாக உள்ளது. அதிர்ஷ்டவசமாக, ஒரு வருடத்திற்கு பின் கோவிட்-19-க்கு எதிராக பாதுகாப்பளிக்கும் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு போடப்பட்டு வருகின்றன.
கொரோனா அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த அதிகபட்ச மக்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி போடும் நோக்கத்துடன், இந்திய அரசு மக்களுக்கு தடுப்பூசிகள் கிடைக்க முயற்சித்து வருகிறது. கொரோனாவுடன் போரிடுவதற்கான ஒரே வழி, தடுப்பூசி போட்டுக் கொண்டு தொற்றுநோயில் இருந்து பாதுகாப்புடன் இருப்பது தான். இருப்பினும், கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னரும், கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் கொரோனா தடுப்பூசி போட்ட பின் ஏற்படும் கோவிட் தொற்றினால் சந்திக்கும் கொரோனா அறிகுறிகள் மாறுபடலாம்.
MOST READ: நகத்தை வெச்சே உங்களுக்கு கொரோனா வந்திருக்கா-ன்னு சொல்ல முடியும்.. எப்படி-ன்னு தெரியுமா?
கோவிட் தொற்றில் இருந்து தடுப்பூசி எவ்வாறு பாதுகாக்கும்?
கோவிட் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள கோவிட் தடுப்பூசி ஒரு முக்கிய கருவியாகும். இந்த தடுப்பூசியுடன் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது மற்றும் தொடர்ச்சியாக கையை சுத்தப்படுத்துதல் ஆகியவையும் மிகவும் அவசியமாகும். மாஸ்க் அணிந்து கொண்டு 6 அடி சமூக இடைவெளியைப் பராமரிப்பது கோவிட் பரவலைக் குறைக்கும்.
தடுப்பூசி குறித்து மருத்துவர் கூற்று...
கோவிட் தடுப்பூசி குறித்து மருத்துவர் ஒருவர் கூறுகையில், "தடுப்பூசி கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பையும், ஒருவேளை நோய்த்தொற்று ஏற்பட்டால் ஏற்படும் சிக்கல்களையும் குறைக்கிறது என்பதை ஆய்வுகள் நிரூபித்துள்ளன. கோவிட்-19 தடுப்பூசி இயற்கையான பாதுகாப்பை வழங்குகிறது. அதாவது இயற்கையான நோயெதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. ஆகவே இது முற்றிலும் பாதுகாப்பானது மற்றும் இது டி.என்.ஏ-வை மாற்றாது. கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்வது ஒருவரது உடலில் வைரஸ்களை எதிர்க்கும் ஆன்டிபாடிகளை உருவாக்க அனுமதித்து, வைரஸிலிருந்து பாதுகாப்புடன் இருக்க வைக்கும். கோவிட் தடுப்பூசி கொரோனாவால் தீவிரமாக நோய்வாய்ப்படுவதையும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதையும் தடுக்கும். மொத்தத்தில் கோவிட் தடுப்பூசி உங்கள் குடும்பத்திற்கும், உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் நன்மை பயக்கும்." என்றார்.
தடுப்பூசி போட்ட பிறகு கொரோனாவால் பாதிக்க முடியுமா?
லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில், தடுப்பூசி பெற்ற பின் மக்கள் அடிக்கடி சந்திக்கும் அறிகுறிகள் வெளிக்காட்டப்பட்டது. இந்த அறிகுறிகள் குறித்து விரிவாக தெரிந்து கொள்வதற்கு, ZOE கோவிட் அறிகுறி ஆய்வு ஆப்பைப் பயன்படுத்தி இந்த நோய்த்தொற்றுகள் ஏற்படும் அறிகுறிகளை ஆராய்ச்சியாளர்கள் விரிவாகப் பார்த்தனர். அதில் முதல் டோஸ் பெற்ற சுமார் 1.1 மில்லியன் மக்களுள், 0.2 சதவீதம் பேர் கோவிட் -19 பாசிட்டிவ் பெற்றதை பதிவு செய்துள்ளனர். மேலும் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றவர்களுள் 0.03 சதவீதம் பேர் கோவிட்-19 பாசிட்டிவ் பெற்றிருந்தனர் என்பதும் ஆய்வாளர்களுக்கு தெரிய வந்தது.
கோவிட்-19 தடுப்பூசிக்கு பிந்தைய அறிகுறிகள் என்ன?
லண்டனின் கிங்ஸ் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள், கோவிட் தடுப்பூசி பெற்ற பின் மக்கள் கவனிக்க வேண்டிய நான்கு முக்கிய அறிகுறிகளை வெளியிட்டனர். அந்த அறிகுறிகள் பின்வருமாறு:
தும்மல்
தடுப்பூசி போடாதவர்களைக் காட்டிலும், தடுப்பூசி போட்டு கொடிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனுபவித்த அறிகுறிகளுள் ஒன்று தும்மல் என்று ஆராய்ச்சி கூறுகிறது. மேலும் 60 வயதிற்கு உட்பட்டவர்களில், தடுப்பூசி பெற்ற பின் 24 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு கோவிட் -19 இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
மூச்சுத் திணறல்
கொரோனா வைரஸின் மிக முக்கியமான அறிகுறிகளில் ஒன்று மூச்சுத் திணறல். தடுப்பூசி போட்டவர்கள் மூச்சுத் திணறலை அனுபவித்ததாக ஆராய்ச்சி கூறுகிறது. எனவே கொரோனா தடுப்பூசி பெற்ற பின் உங்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டால், உங்கள் உடலில் கொரோனா வைரஸ் உள்ளது என்று அர்த்தம்.
காது வலி/காதுகளில் சப்தம்
உங்களுக்கு காதுகளில் ஒலிக்கும் சப்தம் கேட்கிறதா? அப்படியானால் இது கோவிட்-19 இன் அறிகுறியாக இருக்கலாம். ஆய்வின் படி, கொரோனா தடுப்பூசி பெற்ற பல நோயாளிகள் காதுகளில் ரீங்கார சப்தத்தை அனுபவித்ததாக புகாரளித்துள்ளனர்.
வீங்கிய சுரப்பிகள்
தடுப்பூசிகளின் பக்க விளைவுகளில் ஒன்று அக்குள் அல்லது கழுத்தில் வீக்கம் ஏற்படுவது. இம்மாதிரியான வீக்கம் வழக்கமாக ஒன்று அல்லது இரண்டு நாட்களில் சரியாகிவிடும். ஆனால் அது தொடர்ந்து நீடித்திருநதால், அது கோவிட்-19 இன் அடையாளமாக இருக்கலாம்.