தண்ணீரை இப்படி குடிப்பது உங்களின் ஆயுளை இருமடங்கு அதிகரிக்குமாம் தெரியுமா?

நீர் உண்ணாவிரதம் உங்களுக்கு பல நன்மைகளை வழங்கக்கூடும், அதேசமயம் இதனை அதிகமாக பின்பற்றும் போது உங்களுக்கு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும்.

விரதம் இருப்பது என்பது உங்களின் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும் ஒரு சிறந்த வழியாகும். விரதம் என்பது உணவிற்கு மட்டுமின்றி தண்ணீருக்கும் பொருந்தும். நீர் உண்ணாவிரதம் உங்கள் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற, எடையை குறைக்க, இரத்த அழுத்தத்தை குறைக்க என பல நன்மைகளை வழங்குகிறது.

how water fasting improves metabolism

இந்த நீர் உண்ணாவிரதம் உங்களுக்கு பல நன்மைகளை வழங்கக்கூடும், அதேசமயம் இதனை அதிகமாக பின்பற்றும் போது உங்களுக்கு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். இந்த பதிவில் நீர் விரதம் உங்களுக்கு வழங்கும் நன்மைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீர் விரதம் என்றால் என்ன?

நீர் விரதம் என்றால் என்ன?

நீர் விரதம் என்பது ஒரு வகை உண்ணாவிரதம், அதில் நீங்கள் தண்ணீரை மட்டுமே குடிக்க வேண்டும். இது பொதுவாக 24 மணி முதல் 72 மணி நேரம் வரை நீடிக்கும். மருத்துவ நிபுணர்களின் கருத்துப்படி உண்ணாவிரதம் என்பது முழுமையான ஓய்வெடுக்கும் சூழலில் தண்ணீரைத் தவிர அனைத்து பொருட்களும் முழுமையாக இல்லாதது என்று வரையறுக்கப்படுகிறது. எனவே விரதம் மற்றும் உண்ணாவிரதம் இரண்டுமே ஒரே மாதிரியானவை. நீர் உண்ணாவிரதம் மருத்துவ உண்ணாவிரதத்திற்கு சமமானதல்ல. மருத்துவ உண்ணாவிரதத்தை மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் மேற்பார்வையிடுகிறார்கள். இது நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும் விரதமாகும். நீர் விரதத்தின் நன்மைகள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

இரத்த அழுத்தத்தை குறைக்கிறது

இரத்த அழுத்தத்தை குறைக்கிறது

பொதுவாக அதிக அளவு உப்பு கொண்டிருக்கும் துரித உணவை அதிகமாக உட்கொள்வது உங்கள் இரத்த அழுத்தத்தை உயர்த்தக்கூடும். இரத்த அழுத்தத்தைக் குறைக்க நீர் உண்ணாவிரதம் ஒரு சிறந்த வழியாகும். நீர் விரதம் மேற்கொள்பவர்களில் 82 சதவீததினருக்கு இரத்த அழுத்தம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதயத்தை பாதுகாக்கும்

இதயத்தை பாதுகாக்கும்

ஒரு வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் உண்ணாவிரதம் இருக்கும்போது, நீங்கள் குறைந்த கலோரிகளை உட்கொள்கிறீர்கள். இதன் விளைவாக, நீங்கள் அதிகளவு எடையை குறைப்பீர்கள். இது பல்வேறு வகையான இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. தொடர்ச்சியான உண்ணாவிரதம் இடுப்பு சுற்றளவைக் குறைக்க உதவுகிறது மற்றும் எல்.டி.எல் கொழுப்பு, லெப்டின் மற்றும் இன்சுலின் போன்ற வளர்ச்சி காரணி அளவைக் குறைக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

குறைந்த ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திற்கு உதவுகிறது

குறைந்த ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திற்கு உதவுகிறது

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுப் பழக்கம் ROS குவிப்புக்கு காரணமாகின்றன. ROS அல்லது எதிர்வினை ஆக்ஸிஜன் இனங்கள் செல் அமைப்பு, டி.என்.ஏ, புரதங்கள் மற்றும் செல் செயல்பாடுகளை பாதிக்கின்றன. பல எதிர்வினை ஆக்ஸிஜன் இனங்களின் (ROS) குவிப்பு உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் வீக்கத்தையும் அதிகரிக்கிறது. ROS ஐ வெளியேற்றுவதன் மூலம் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்க நீர் உண்ணாவிரதம் உதவுகிறது.

தன்னியக்கத்தை அதிகரிக்கும்

தன்னியக்கத்தை அதிகரிக்கும்

தன்னியக்கவியல் என்பது உங்கள் உயிரணுக்களின் இயல்பான செயல்முறையாகும், இது உயிரணு சிதைவு அல்லது கூறுகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் கழிவுகளை செயலிழக்கச் செய்கிறது, இது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இது அடிப்படையில் உங்கள் உடலை தூய்மைப்படுத்தும் ஒரு செயல்முறையாகும். உங்கள் உடல் இதைச் செய்யத் தவறினால், அது நச்சுகளின் அளவை அதிகரிக்கிறது, இது புற்றுநோய் போன்ற நோய்கள் உருவாக காரணமாகிறது.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

நீர் விரதம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. அதிகப்படியான நச்சுகளை வெளியேற்ற நீர் உதவுகிறது. உங்கள் செல்கள் சாதாரணமாக செயல்படத் தொடங்குகின்றன. இதன் விளைவாக, உங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் சிறப்பாக செயல்படத் தொடங்குகிறது.

எப்படி செய்ய வேண்டும்?

எப்படி செய்ய வேண்டும்?

இந்த நீர் விரதத்தில் இரண்டு துணை நிலைகள் உள்ளது, பிரத்தியேக நீர் விரதம் மற்றும் உணவுக்கு பிந்தைய விரதம். பிரத்தியேக நீர் விரதத்தில் நீங்கள் நீர் மட்டும்தான் குடிக்க வேண்டும், 24 மணி நேரம் முதல் 72 மணி நேரம் வரை இதை செய்யலாம். உணவுக்கு பிந்தைய விரதத்தில் 1 முதல் 3 நாட்கள் வரை இதனை கடைபிடிக்க வேண்டும்.

பிரத்தியேக நீர் விரதம்

பிரத்தியேக நீர் விரதம்

இந்த இந்த விரதத்தில் நீங்கள் நீர் மட்டுமே குடிக்க வேண்டும். பழச்சாறுகள், தேநீர், மதுபானம் போன்றவை குடிக்கக்கூடாது. நாள் முழுவதும் தண்ணீர் மட்டும்தான் குடிக்க வேண்டும், நீங்கள் உண்ணாவிரதத்தில் புதியவர் என்றால், 4 மணி நேரம் உணவு இல்லாமல் செல்ல முயற்சிக்கவும். காலை 8 மணிக்கு ஒரு காலை உணவை உட்கொண்டு, மதியம் 12 மணிக்கு உங்கள் விரதத்தை முடிக்கவும். உண்ணாவிரத காலத்தை படிப்படியாக 8 மணி நேரமாக அதிகரிக்கவும். நாளடைவில் இதனை 24 மணி நேரமாக அதிகரிக்கவும். வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை இதை செய்யுங்கள்.

உணவுக்கு பிந்தைய விரதம்

உணவுக்கு பிந்தைய விரதம்

இந்த கட்டம் மிக முக்கியமானது, ஏனெனில் நீங்கள் உண்ணாவிரதத்தை முறித்தவுடன் அதிக அளவில் சாப்பிடலாம். எனவே, உங்கள் உண்ணாவிரத நிலைக்கு நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சில உலர் பழங்களுடன் உங்கள் விரதத்தை முறித்துக் கொள்ளுங்கள், அதைத் தொடர்ந்து ஆரோக்கியமான பழச்சாறுகள் அல்லது பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். தசை இழப்பை நிரப்பவும், வலிமையை மேம்படுத்தவும் உங்கள் உணவில் முழு தானியங்கள் மற்றும் புரதத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களை மீட்டெடுக்க உலர்ந்த பழங்கள் மற்றும் கொட்டைகள் மற்றும் விதைகளின் கலவையை உட்கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion