தடுப்பூசி போடாதவர்கள் கொரோனாவின் பிறழ்வுகளிடம் இருந்து தப்பிக்க என்ன செய்யணும் தெரியுமா?

கொரோனா வைரஸ் தொற்று மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை பாதித்துள்ளது. இந்த பேரழிவிற்கு மத்தியில், அரசாங்க மற்றும் சுகாதார அதிகாரிகள் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளனர் மற்றும் தடுப்பூசி பெறுவதை எளிதாக்க பல்வேறு வழிகளையும் முறைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

How Unvaccinated People Can Stay Safe From New Variants

மக்கள் தங்கள் தடுப்பூசி பெறுவதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ள நிலையில், பல இடங்களில் தடுப்பூசிகளின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு தடுப்பூசி இன்னும் கண்டறியப்படாத நிலையில்பலரும் அதை எடுக்க தயங்குகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் தடுப்பூசி போடாதவர்கள் கொரோனாவிலிருந்து உங்களையும் மற்றவர்களையும் பாதுகாக்க நீங்கள் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் முக்கியமானது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புதிய COVID பிறழ்வுகள் கவலையளிப்பதாக உள்ளது

புதிய COVID பிறழ்வுகள் கவலையளிப்பதாக உள்ளது

மக்களின் உடல் மற்றும் மன நலனில் தொற்றுநோயின் தாக்கத்தைத் தவிர, புதிய பிறழ்வுகள் உயிருக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தியுள்ளன. டெல்டா மாறுபாடு உட்பட புதிய COVID பிறழ்வுகளுக்கு முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ தடுப்பூசி போடப்பட்டவர்கள் கூட பாதிக்கப்படுகின்றனர். புதிய வளர்ந்து வரும் மாறுபாடுகளின் தாக்கங்களிலிருந்து தப்பிக்க முடியாத நபர்கள் தப்பிக்க வழி இல்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தடுப்பூசி போடாதவர்கள் எப்படி பாதுகாப்பாக இருப்பது?

தடுப்பூசி போடாதவர்கள் எப்படி பாதுகாப்பாக இருப்பது?

நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய முதல் விஷயம் என்னவென்றால், SARs-COV-2 வைரஸ் யாரையும் விடாது. நீங்கள் இளமையாக இருந்தாலும், வயதானவராக இருந்தாலும் சரி, ஆரோக்கியமானவராக இருந்தாலும், COVID-19 உங்களை பல்வேறு வழிகளில் பாதிக்கும். தடுப்பூசிகள் என்பது காலத்தின் தேவை, உங்கள் தடுப்பூசியை நீங்கள் இன்னும் பெறவில்லை என்றால், இப்போது அதைப் பெறுவது முக்கியம். இருப்பினும், COVID தடுப்பூசிகளுக்கு தகுதியற்றவர்கள், அதாவது 18 வயதிற்குட்பட்டவர்கள் அல்லது நீண்டகால நோய்கள் உள்ளவர்கள், புதிய பிறழ்வுகளுக்கு மத்தியில் நீங்கள் பாதுகாப்பாக இருக்க சில வழிகளை மேற்கொண்டு பார்க்கலாம்.

இரட்டை மாஸ்க் அணிய தவறாதீர்கள்

இரட்டை மாஸ்க் அணிய தவறாதீர்கள்

தற்போதைய காலங்களில் தடுப்பூசி போடாதவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இரண்டாவது அலைகளால் ஏற்பட்ட அழிவைக் கருத்தில் கொண்டு, COVID- பாதுகாப்பு நடத்தைகளை அவசியம் பின்பற்ற வேண்டும். அவசியம் இல்லையென்றால் வெளியில் செல்வதைத் தவிர்க்கவும். இருப்பினும், நீங்கள் நெரிசலான இடங்களுக்குச் சென்றால், உங்கள் முகமூடிகளை சரியாக அணிந்து கொள்ளுங்கள். இது உங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கும்.

சமூக இடைவெளி

சமூக இடைவெளி

சமூக இடைவெளியை கடைபிடிப்பது உங்கள் தொற்று நோய் அபாயத்தை குறைக்கிறது. இது மற்றவர்களுக்கு வைரஸ் பரவுவதையும் தடுக்கிறது. நீங்கள் தடுப்பூசி போடாத ஒருவராக இருந்தாலோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள் தடுப்பூசி போடாதவர்கள் என்று அறிந்தாலோ, உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாப்பாக வைத்திருப்பதில் சமூக இடைவெளி மிகவும் முக்கியமானதாகும்.

சரியான COVID நடவடிக்கைகளை பின்பற்றாதவர்களிடம் விலகி இருக்கவும்

சரியான COVID நடவடிக்கைகளை பின்பற்றாதவர்களிடம் விலகி இருக்கவும்

பல மாநிலங்கள் தங்கள் எல்லைக் கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளதால், பலர் இரண்டாவது அலையின் தாக்கங்களை கிட்டத்தட்ட மறந்துவிட்டதால், COVID வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதை நிறுத்தியவர்களிடம் மிகவும் கவனமாக இருப்பதுடன் அவர்களின் தவறை பாதுகாப்பாக எடுத்துக் கூறுங்கள். சிலருக்கு இது மிகவும் அசௌகரியமாக மாறக்கூடும், ஆனால் அனைவரையும் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு இது ஒரு முக்கியமான படியாகும்.

நீங்கள் தகுதியானவராக இருந்தால் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்

நீங்கள் தகுதியானவராக இருந்தால் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்

தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியற்ற நபர்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்றாலும், தகுதியுள்ளவர்கள் ஆனால் தடுப்பூசி போட தயங்குபவர்கள், உண்மையைப் புரிந்து கொண்டு தடுப்பூசியை விரைவில் பெற வேண்டும். புதிய COVID பிறழ்வுகள் பரவி வரும் நிலையில் கடுமையான தொற்றுநோயிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஒரே வழி தடுப்பூசி மட்டும்தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Saturday, July 17, 2021, 12:30 [IST]
Desktop Bottom Promotion