Latest Updates
-
இன்றைய ராசிபலன் 22 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நல்ல நேரம் தேடிவருமாம்...! -
வார ராசிபலன் (22 March 2026-28 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கும்.. -
Tamil Nadu Election 2026: பாரம்பரிய தமிழ் உணவுகளை உட்கொள்ளும் தமிழகத் தலைவர்கள்! -
முட்டையும், பிரட்டும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
கோடையில் எப்பவும் பளிச்சுன்னு பிரகாசமா தெரியணுமா? அப்ப பப்பாளியை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
புதன் பெயர்ச்சியால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்கு தொழிலில் டபுள் லாபம் கிடைக்கும்... -
இந்த ரசத்தை அடிக்கடி செஞ்சு சாப்பிடுங்க.. உடல் கொழுப்பும், எடையும் சர்ர்-ன்னு குறையும்.. -
Ramzan Eid 2026: ரம்ஜான் பிரியாணி சாப்பிட்டு அஜீரண கோளாறு வரக்கூடாதா? அப்ப இத ஒரு டம்ளர் குடிங்க போதும்.. -
பீன்ஸ் பருப்பு கூட்டு ரெசிபி... இந்த மாதிரி செஞ்சு கொடுங்க... பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
தினமும் நைட் இத 1/4 டீஸ்பூன் சாப்பிட்டா, நல்ல நிம்மதியான தூக்கம் கிடைக்கும் தெரியுமா?
தூக்கமின்மையை சரிசெய்யும் சிறப்பான பொருள் தான் ஜாதிக்காய். இது தூக்கமின்மையை குணப்படுத்தும் இயற்கையான சக்திவாய்ந்த மயக்க மருந்தாக செயல்படுகிறது. மேலும் ஜாதிக்காய் மன அழுத்தத்தைக் குறைக்கும்.
இன்று பலர் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை தான் தூக்கமின்மை. உலகம் முழுவதும் ஏராளமானோர் இப்பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறார்கள். உதாரணமாக, அமெரிக்காவில் சுமார் 30 சதவீத மக்கள் தூக்கமின்மையால் கஷ்டப்படுகிறார்கள் மற்றும் இப்பிரச்சனையில் இருந்து விடுபட எதையும் செய்வதற்கு தயாராக உள்ளனர்.

தூக்கமின்மை என்பது இரவு நேரத்தில் நல்ல நிம்மதியான ஆழ்ந்த உறக்கத்தைப் பெற முடியாத நிலையாகும். மேலும் நாள் முழுவதும் எவ்வளவு தான் கடினமாக வேலை செய்தாலும், எவ்வளவு சோர்வுடன் இருந்தாலும் தூங்க முடியாமல் அவஸ்தைப்படும் நிலை. தூக்கமின்மை பிரச்சனையால் கஷ்டப்படுபவர்கள், இரவு நேரத்தில் அடிக்கடி விழிப்பதோடு, அதிகாலையில் வேகமாக எழுந்துவிடுவார்கள்.

தூக்கமின்மையின் விளைவு
உடலுக்கு ஓய்வு கொடுக்க வேண்டிய இரவு நேரத்தில் தூங்காமல் இருந்தால், மறுநாள் மேற்கொள்ளும் ஒவ்வொரு சிறு வேலையும் செய்வதற்கு கடினமாக இருப்பதோடு, உடலில் ஆற்றல் இல்லாதது போல் உணரக்கூடும். முக்கியமாக எந்நேரமும் சோம்பேறித்தனமாக களைப்புடனேயே இருக்க வேண்டியிருக்கும்.

யாரெல்லாம் தூக்கமின்மை பிரச்சனையால் அவஸ்தைப்படுவார்கள்?
தூக்கமின்மை பிரச்சனையானது அதிகளவு வெளிச்சம் அல்லது அதிக சப்தம் போன்ற வெளிக் காரணிகள் மட்டும் காரணமல்ல. பெரும்பாலும் இந்த பிரச்சனை மன அழுத்தம், மன இறுக்கம் அல்லது பதற்றம் போன்றவற்றால் கஷ்டப்படுபவர்களுக்கு தான் இருக்கும்.
தூக்கமின்மை பிரச்சனை இருப்பவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகுவதற்கு முன், இயற்கை வழிகளை ஒருமுறை முயற்சித்துப் பார்ப்பது நல்லது. இதனால் அதிக மருந்து மாத்திரைகளை எடுப்பதைத் தவிர்ப்பதோடு, அதனால் சந்திக்கும் பக்க விளைவுகளையும் தவிர்க்கலாம்.

தூக்கமின்மையை சரிசெய்யும் மருந்து மாத்திரைகளால் சந்திக்கும் பக்க விளைவுகள்
* தலைச்சுற்றல் மற்றும் பலவீனம்
* வயிற்றுப் போக்கு அல்லது மலச்சிக்கல்
* விசித்திரமான கனவுகள்
* கவனம் செலுத்த முடியாமை
* மூட்டுக்களில் எரிச்சல்
* தலைவலி
* நெஞ்செரிச்சல்
* வயிற்று வலி
* வாய் வறட்சி மற்றும் தொண்டை வறட்சி
* பகல் நேர தலைச்சுற்றல்
இப்போது தூக்கமின்மையை சரிசெய்ய உதவும் அற்புத பொருள் குறித்தும், அதை எடுக்கும் முறை குறித்தும் காண்போம்.

ஜாதிக்காய்
தூக்கமின்மையை சரிசெய்யும் சிறப்பான பொருள் தான் ஜாதிக்காய். இது தூக்கமின்மையை குணப்படுத்தும் இயற்கையான சக்திவாய்ந்த மயக்க மருந்தாக செயல்படுகிறது. மேலும் ஜாதிக்காய் மன அழுத்தத்தைக் குறைக்கும். ஏனெனில் இதில் மிரிஸ்டிஸின் என்னும் மன அழுத்த அளவு அதிகரிக்கும் நொதிகளின் உற்பத்தியைக் குறைக்கும் பொருள் அதிகளவில் உள்ளது.

இந்தோனேசியா
ஜாதிக்காயின் பிறப்பிடம் இந்தோனேசியா. இது உண்மையில் மைரிஸ்டிகா ஃப்ராக்ரான்ஸ் என்று அழைக்கப்படும் பசுமையான மரத்தில் வளரும் பழத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட விதைகளால் ஆனது. தற்போது இது தென்னிந்தியா, மலேசியா போன்ற பகுதிகளில் காணப்படுகிறது. இந்த ஜாதிக்காய் அழகுப் பராமரிப்பு பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது மற்றும் பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கவும் பயன்படுகிறது. ஏனெனில் ஜாதிக்காயில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான வைட்டமின் பி1, வைட்டமின் பி6 மற்றும் கனிமச்சத்துக்களான மாங்கனீசு, காப்பர், மக்னீசியம் போன்றவை அதிகம் உள்ளது.
ஜாதிக்காயை மிதமான அளவில் எடுத்து வந்தால், உடல் ரிலாக்ஸாக இருக்கும் மற்றும் மனம் அமைதியடையும். இதன் விளைவாக தூக்கமின்மை பிரச்சனை குணமாகும்.

உட்கொள்ளும் முறை
ஒரு கப் நீரில் 1/4 டீஸ்பூன் ஜாதிக்காய் பொடி சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த நீரை இரவு தூங்க செல்வதற்கு முன் குடிக்க வேண்டும். ஆனால் இந்த பானத்தை கர்ப்பிணிப் பெண்கள் குடிக்கக்கூடாது.



Click it and Unblock the Notifications











