Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
கர்நாடகா வரை வந்துவிட்ட அடுத்த ஆபத்தான வைரஸ் ஜிகாவை தடுப்பது எப்படி? அதன் அறிகுறிகள் என்ன?
கொரோனாவின் கோரத்தாண்டவத்திலிருந்து தப்பித்து மக்கள் இப்போதுதான் ஓரளவிற்கு நிம்மதி பெருமூச்சு விட்டு வருகின்றனர்.
கொரோனாவின் கோரத்தாண்டவத்திலிருந்து தப்பித்து மக்கள் இப்போதுதான் ஓரளவிற்கு நிம்மதி பெருமூச்சு விட்டு வருகின்றனர். இந்த சூழலில் அடுத்த ஆபத்தான வைரஸ் இந்தியாவிற்குள் நுழைந்து விட்டது. கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் 5 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதான் தென்னிந்தியாவில் உறுதிப்படுத்தப்பட்ட முதல் ஜிகா வைரஸ் தொற்றாகும். நோய் பரவாமல் தடுக்க அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. மக்களுக்கான வழிகாட்டுதல்களின் தொகுப்பையும் வெளியிடுவார்கள். சில மாதங்களுக்கு முன்பு கேரளா, மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசத்தில் ஜிகா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் வழக்கு
அமைச்சரின் கூற்றுப்படி, டெங்கு மற்றும் சிக்குன்குனியாவுக்கு சீரம் மாதிரியை முதலில் பரிசோதித்தபோது இந்த வழக்கு வெளிச்சத்திற்கு வந்தது. "வழக்கமாக, இதுபோன்ற 10 சதவீத மாதிரிகள் புனேவுக்கு சோதனைக்கு அனுப்பப்படும், அந்த சோதனையில் முடிவு நேர்மறையாக வந்துள்ளது." அறிக்கைகளின்படி, 5 வயது சிறுமிக்கு எந்த பயண வரலாறும் இல்லை மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் சந்தேகத்திற்குரிய பிற நோயாளிகளை அரசாங்கம் தேடுகிறது.

எப்போது பரவத் தொடங்கியது?
2015-ம் ஆண்டு அமெரிக்கா முழுவதும் பரவத் தொடங்கிய ஜிகா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. உலக சுகாதார அமைப்பு (WHO) இதை சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தது. ஆனால், பின்னர் அதனை நீக்கிவிட்டனர்.

ஜிகா வைரஸ் என்றால் என்ன?
டெங்கு, சிக்குன்குனியா, மஞ்சள் காய்ச்சலைப் போலவே, ஜிகாவும் கொசுக்களால் பரவும் வைரஸ் ஆகும். இந்த தொற்று நோய் ஏடிஸ் ஈஜிப்டி மற்றும் ஏடிஸ் அல்போபிக்டஸ் இனங்கள் வழியாக பரவுகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பு குறைபாடுகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

ஜிகா வைரஸின் அறிகுறிகள்
5 பேரில் ஒருவருக்கு ஜிகா வைரஸின் அறிகுறிகள் பெரும்பாலும் லேசானவை. இருப்பினும், இது கர்ப்பிணிப் பெண்களுக்கும் அவர்களின் கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஆபத்தானதாகக் கருதப்படுகிறது. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளின் பட்டியலை தொடர்ந்து கண்காணித்து வருகின்றன, எனவே கர்ப்பிணிகள் அந்த பகுதிகளுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்கின்றனர்.

ஜிகா வைரஸின் மிகவும் பொதுவான அறிகுறிகள்
- காய்ச்சல்
- சொறி
- மூட்டு வலி
- வீக்கமடைந்த கண்கள்
- உடல் வலி (குறிப்பாக தலைவலி)
தொற்றுநோயைத் தடுப்பது எப்படி?
வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான சிறந்த வழி, தொற்று பரவும் நாடுகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்ப்பதுதான். கொசுக் கடியைத் தவிர்க்க, கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்
-நீண்ட கை மற்றும் முழு நீள பேன்ட் அணியவும்
-வீட்டுக்குள்ளேயே இருங்கள்
- பாதுகாப்பான கொசு ஸ்ப்ரே மற்றும் கொசு விரட்டி லோஷன்களைப் பயன்படுத்தவும்
இரத்த பரிசோதனை அல்லது சிறுநீர் பரிசோதனை மூலம் மட்டுமே ஜிகா வைரஸைக் கண்டறிய முடியும்.



Click it and Unblock the Notifications