Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க..
சாப்பிடக்கூடிய இந்த பூக்கள் உங்க ஆரோக்கியத்திற்கு என்னென்ன அதிசயங்களை செய்யும் தெரியுமா?
இந்தியாவில் பொதுவாகக் காணப்படும் பல்வேறு பூக்கள் ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. உணவுகளில் இளஞ்சிவப்பு, மஞ்சள் மற்றும் லாவெண்டர் நிற மலர்களைப் பார்த்திருப்போம்.
தற்போது உணவுகளில் கூடுதல் சுவையை சேர்க்கவும் அழகாக வடிவமைக்கவும் பூக்களை நாம் உணவுகளில் சேர்க்கிறோம். உண்ணக்கூடிய பூக்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. அடர் பழுப்பு நிற சாக்லேட் கேக் வண்ணமயமான உண்ணக்கூடிய பூக்களுடன் மிகவும் அழகாக இருக்கிறது. சிறிதளவு இளஞ்சிவப்பு நிற உண்ணக்கூடிய பூவைக் கொண்ட ஒரு சீஸ்கேக் கூட மிகவும் சுவையாக இருக்கும். ஒரு கோப்பை தேநீர் மற்றும் ஒரு கிண்ணம் சாலட் ஆகியவற்றிலும் உண்ணக்கூடிய பூக்களை சேர்க்கிறோம். சில கலாச்சாரங்களில், புதிய பூக்கள் சிற்றுண்டிகளாகவும் உண்ணப்படுகின்றன. மேலும், இனிப்பு சுவை காரணமாக பூக்கள் குழந்தைகளால் விரும்பப்படுகிறது. இப்போதெல்லாம், அதிகமான மக்கள், குறிப்பாக சமையல்காரர்கள், உணவு சுவையாக இருக்க உண்ணக்கூடிய பூக்களைப் பயன்படுத்துகிறார்கள்.

அவை அவற்றின் அழகியல் பண்புகளுக்காக மட்டுமல்ல, உண்ணக்கூடிய பூக்களின் ஆரோக்கிய நன்மைகளாலும் விரும்பப்படுகின்றன. இப்போது, அவை நோய்களை எதிர்த்துப் போராடவும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன என்று ஒரு ஆய்வு நிரூபித்துள்ளது. எந்த உண்ணக்கூடிய பூக்களில் ஆரோக்கிய நன்மைகள் உள்ளன என்பதையும் ஆரோக்கிய நன்மைகள் கொண்ட இந்தியாவில் பொதுவாகக் காணப்படும் சில பூக்களைப் பற்றியும் இக்கட்டுரையில் காணலாம்.

ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
புதிய ஆய்வில் 250 க்கும் மேற்பட்ட வகையான தாவரங்களின் தரவுகள் சேமிக்கப்பட்டிருந்தன. மேலும் மத்தியதரைக் கடலைச் சுற்றியுள்ள சில நாடுகளில் பயன்படுத்தப்படும் பல உண்ணக்கூடிய பூக்கள், பல்வேறு பாரம்பரிய உணவு மற்றும் மருந்துகளில் அவை சேர்க்கப்படுவது மற்றும் அவற்றின் ஆரோக்கிய பாதிப்பு ஆகியவற்றைப் பற்றி ஆய்வு செய்யப்பட்டது. உண்ணக்கூடிய பூக்கள் அவற்றின் ஊட்டச்சத்து பண்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற கலவைகளின் உள்ளடக்கத்திற்காக செயல்பாட்டு உணவுகளாக அடையாளம் காணப்படுகின்றன. ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும், பல்வேறு வகையான நோய்களைத் தடுப்பதிலும் அவை முக்கிய பங்கு வகிக்கின்றன.

நோய்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன
இதய நோய், அழற்சி நோய்கள், புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய் போன்ற ஆபத்தனா நோய்களுக்கு எதிராக எல்டர் ஃப்ளவர் திறம்பட போராடுவதாக கண்டறியப்பட்டுள்ளது. மற்ற சுவாரஸ்யமான உண்ணக்கூடிய பூக்களில் ஃபால்ஸ் அகாசியா (false acacia) அடங்கும். இந்த பூக்களில் ஆக்ஸிஜனேற்ற மற்றும் கட்டிகளை எதிர்த்துப் போராடும் பண்புகளுடன் பாலிபினால்கள் நிறைந்துள்ளன என்பது கண்டறியப்பட்டது. அவை காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்கவும், அமைதியைத் தூண்டவும் அல்லது பொது ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன. டாக்கஸ் கரோட்டா, பிக்ரோரிசா குரோவா, பாம்பாக்ஸ் சீபா மற்றும் ஆண்ட்ரோகிராஃபிஸ் பானிகுலாட்டா போன்ற தாவரங்கள் இருதய நோய்களுக்கு உதவுகிறது.

ஆரோக்கிய நன்மைகளை கொண்ட இந்திய பூக்கள்
இந்தியாவில் பொதுவாகக் காணப்படும் பல்வேறு பூக்கள் ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. உணவுகளில் இளஞ்சிவப்பு, மஞ்சள் மற்றும் லாவெண்டர் நிற மலர்களைப் பார்த்திருப்போம். அவர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் ஆரோக்கிய நலன்களை பற்றி நாம் அறிய வேண்டிய நேரம் இது. நிபுணரின் கூற்றுப்படி, சாமந்தி காயங்களை குணப்படுத்த உதவுகிறது, ரோஜா இதய நோய்களின் அபாயத்தை குறைக்கிறது, லாவெண்டர் முடி வளர்ச்சிக்கு நல்லது மற்றும் லில்லி நாள்பட்ட தலைவலியைத் தடுக்க உதவுகிறது.

உண்ணக்கூடிய பூக்களை எப்படி சாப்பிடுவது?
நீங்கள் இந்த உண்ணக்கூடிய பூக்களை கழுவி பழங்களைப் போல சாப்பிடலாமா அல்லது மற்ற உணவுப் பொருட்களுடன் சாப்பிடலாமா என்று நீங்கள் யோசித்துக்கொண்டிருக்கலாம். உண்ணக்கூடிய பூக்களை சர்க்கரை பாகுகளில் பயன்படுத்தலாம் மற்றும் ரோஜா இதழ்களை இனிப்புகளிலும் பயன்படுத்தலாம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

பச்சையாக பூக்களை சாப்பிடலாமா?
சிறுவயதில், நீங்கள் ரோஜா இதழ்களை சாப்பிட்டிருக்கலாம். ஆனால் பச்சையாக உண்ணக்கூடிய பூக்களை உண்பது சிறந்த யோசனையல்ல. ஏனெனில் அவற்றை உட்கொண்ட பிறகு நீங்கள் தொற்றுநோயால் பாதிக்கப்படலாம். அவை வாய் மற்றும் தோல் எரிச்சல் மற்றும் புண்கள், பூஞ்சை தொற்று, வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் வலிப்பு போன்ற பாதகமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். அடுத்த முறை, உங்கள் உணவில் பூக்களை சேர்க்கும் முன்பு இந்த விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications











