Latest Updates
-
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா? -
கோடையில் தினமும் ராகி ரொட்டி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
18 மாதம் கழித்து மீனம் செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் என்னலாம்-ன்னு தெரியுமா? இதுதான்...
கொரோனா நோய்த்தொற்றின் தீவிரத்தைக் குறைக்க மருத்துவர்கள் பெரும்பாலும் 5 மருந்துகளை பரிந்துரைக்கின்றனர். கீழே கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவர்கள் பெரும்பாலும் பரிந்துரைக்கும் 5 மருந்துகளின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக நாட்டின் நிலைமை மோசமாகிக் கொண்டிருப்பதை நாம் தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்நோய்த்தொற்று எவ்வளவு தீவிரமாகிக் கொண்டிருக்கிறது, தினமும் எவ்வளவு பேர் இந்நோய்த்தொற்றால் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை வரைபடத்தைக் கொண்டு மதிப்பிடலாம். தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மருத்துவமனையில் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜனுக்காக அலைய வேண்டியிருக்கும் போது, கொரோனா தடுப்பூசி, பிளாஸ்மா சிகிச்சை மற்றும் மருந்துகளைப் பெறுவதும் எளிதான காரியமல்ல. வல்லுநர்கள் கூட வரும் நாட்களில், கொரோனா நோய்த்தொற்று மேலும் மோசமாக மாறப்போகிறது என்று கூறுகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில் மக்கள் இந்த தொற்றுநோயைத் தவிர்ப்பது கடினமான ஒன்றாகிவிட்டது.

ஆனால் கொரோனா நோய்த்தொற்றின் தீவிரத்தைக் குறைக்க மருத்துவர்கள் பெரும்பாலும் 5 மருந்துகளை பரிந்துரைக்கின்றனர். கீழே கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவர்கள் பெரும்பாலும் பரிந்துரைக்கும் 5 மருந்துகளின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி ஒருபோதும் கொரோனா நோயாளிகளுக்குக் கொடுக்கக்கூடாது. மருத்துவரின் அனுமதியின்றி கொரோனா நோயாளிக்கு எந்த மருந்தையும் கொடுப்பது மிகவும் ஆபத்தானது என்பதை மறக்க வேண்டாம்.

ரெம்டெசிவிர் (Remdesivir)
தற்போதெல்லாம் ரெம்டெசிவிர் மருந்திற்கு அதிக தேவை உள்ளது. அரசு மருத்துவமனைகள் அல்லது தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருந்து கடைகள் என எல்லா இடங்களிலும் ரெம்டெசிவிர் தேவை உள்ளது. இந்த மருந்து கொரோனாவை சரிசெய்யக்கூடிய மருந்து அல்ல என்றாலும் இது கொரோனாவின் அறிகுறிகளைக் கட்டுப்படுத்தும். அதனால் தான் மருத்துவர்கள் மோசமான நிலையில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்தை வழங்குகிறார்கள். மேலும், ரெமிடிஸ்விர் ஒரு உயிர் காக்கும் மருந்து அல்ல என்றும் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். இதை அதிகளவு பயன்படுத்தினால், ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். ரெம்டெசிவிர் ஒரு ஆன்டிவைரல் மருந்து. முன்பு இது கடுமையான சுவாச தொற்று மற்றும் ஹெபடைடிஸுக்கு பயன்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனாவின் அறிகுறிகளையும் ரெம்டெசிவிர் குறைப்பதை காண முடிந்ததால், இன்று இது பலரும் இந்த மருந்தை விரும்ப முக்கிய காரணமாகிவிட்டது.

டெக்ஸாமெதாசோன் (Dexamethasone)
ரெம்டெசிவிர் ஊசியைப் போட முடியாதவர்களுக்கு, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாற்று மருந்து தான் டெக்ஸாமெதாசோன். இந்த டெக்ஸாமெதாசோன் ஒரு கொரோனாவை சரிசெய்யும் மருந்தா என்றால் நிச்சயம் இல்லை. ஆனால் நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, டெக்ஸாமெதாசோன் சுவாச நோய்களுக்கு பயன்படுத்தப்படலாம். அதே நேரத்தில் சில மருத்துவர்கள் டெக்ஸாமெதாசோன் கொரோனா நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் என்று கூறுகின்றனர்.

டோசிலிசுமாப் (Tocilizumab)
ரெம்டெசிவிருக்குப் பிறகு, இந்தியாவில் அதிக தேவைப்படும் மருந்தாக இருப்பது என்றால், அது டோசிலிசுமாப் ஆகும். பொதுவாக முடக்கு வாதம் கொண்ட நோயாளிகளுக்கு இந்த மருந்து பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த மருந்தை கொரோனா நோயாளிகளுக்கும் மருத்துவர்கள் போடுகிறார்கள். ஏனெனில் இது நிலை 1 மற்றும் 2 கொரோனா நோயாளிகளை விரைவாக குணப்படுத்துகிறது. இதுப்போன்ற சூழ்நிலையில், ரூ .40,000 க்கு கிடைக்கும் இந்த ஊசி இன்று ஒன்றரை லட்சத்திற்கு விற்கப்படுகிறது.

இடோலிஸுமாப் (Itolizumab)
கொரோனா நோயாளிகளின் அறிகுறிகளைக் குறைக்கும் ரெம்டெசிவிரைப் போன்றே பயன்படுத்தப்படும் மற்றொரு மருந்து தான் இடோலிஸுமாப். இந்த இடோலிஸுமாப் ஒரு மோனோக்ளோனல் ஆன்டிபாடி. இந்த மருந்தின் சோதனை நடந்து கொண்டிருந்த போது, இரண்டாவது மட்டத்தில் இடோலிஸுமாப் கொரோனாவின் அறிகுறிகளைக் கட்டுப்படுத்த முடியும் என்பது தெரிய வந்தது. இந்த மருந்து மிகவும் மலிவானது மற்றும் மருத்துவர்களும் இதை நோயாளிகளுக்கு பரிந்துரைக்கின்றனர். ஆனால் அதிகரித்து வரும் தேவையில் இதுவும் மக்களுக்கு எளிதில் கிடைப்பதில்லை.

அஜித்ரோமைசின் (Azithromycin)
கொரோனாவுக்கு மிகவும் பயனுள்ள மருந்து ஏதேனும் இருந்தால், இன்று அது அசித்ரோமைசின் ஆகும். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகள் முதல் வீட்டு தனிமைப்படுத்தும் நோயாளிகள் வரை அனைவரும் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் அஜித்ரோமைசின் எடுத்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











