Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
சர்க்கரை நோயாளிகளுக்கு கொரோனாவால் இந்த மோசமான ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாம்... உஷாரா இருங்க...!
கொரோனா நோயாளிகளில் ஏற்கனவே கடுமையான ஆரோக்கிய பிரச்சினை இருப்பவர்கள் அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
கொரோனா நோயாளிகளில் ஏற்கனவே கடுமையான ஆரோக்கிய பிரச்சினை இருப்பவர்கள் அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் சர்க்கரை நோய் கொரோனா நோயாளிகளுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும் மோசமான நோயாக இருக்கிறது.

வைரஸ் பிறழ்வுகளினால் தூண்டப்பட்ட இரண்டாவது அலை நோய்த்தொற்றுகள் ஆரோக்கியமான வயதினருக்குக் கூட ஆபத்துக்களை ஏற்படுத்தினாலும், நீரிழிவு நோயாளிகள் அவர்களை விட அதிகமாக நோய்த்தொற்றின் தீவிரத்தன்மை மற்றும் இறப்பு அபாயங்களை எதிர்கொள்கின்றனர். சர்க்கரை நோயாளிகள் எதிர்கொள்ளும் சில ஆபத்தான அறிகுறிகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

சர்க்கரை நோயை ஆபத்தான நோயாக மாற்றுவது எது?
மோசமான இரத்த குளுக்கோஸ் அளவு உடலில் இன்சுலின் உற்பத்தியை சமரசம் செய்து நோய் எதிர்ப்பு சக்தியை அடக்குகிறது. சர்க்கரை நோய் ஒருவருக்கு ஊட்டச்சத்துக்களைப் பயன்படுத்துவதை கடினமாக்கலாம், மோசமான இரத்த ஓட்டம் மற்றும் குணமடையும் காலத்தை தாமதப்படுத்தலாம். COVID-19 ஐப் போலவே, நீரிழிவு நோயும் வைரஸை எதிர்த்துப் போராடுவதை கடினமாக்கும், மேலும் பிற நோய்களையும் உண்டாக்குகிறது. மருத்துவர்களின் கூற்றுப்படி, மருத்துவமனையில் அனுமதிக்கப்படாத நீரிழிவு நோயாளிகளுக்கு அடிப்படை வாஸ்குலர் பிரச்சினைகள் உள்ளன, இதனால் அவர்கள் இருதய குறைபாடுகள், சுவாசக் குறைவு, நாள்பட்ட நுரையீரல் நோய்கள் போன்றவற்றால் பாதிக்கப்படுவார்கள். இதுதவிர கொரோனா நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டிய சில அறிகுறிகளும் உள்ளன, அவற்றை மேற்கொண்டு பார்க்கலாம்.

தோல் தடிப்புகள், COVID நகங்கள் மற்றும் கால்விரல்கள்
கொரோனா வைரஸின் இரண்டாவது அலையில் முக்கிய அறிகுறிகள் தாக்கும் முன் தோல் வெடிப்பு, வீக்கம் மற்றும் ஒவ்வாமை அறிகுறிகள் போன்ற அசாதாரண அறிகுறிகள் மக்களை பாதிக்கின்றன. மேலும் COVID கால்விரல்கள், நகங்கள், படை நோய், சிவப்பு புள்ளிகள்- SARS-COV-2 வைரஸின் தோலில் ஏற்படும் அனைத்து அறிகுறிகளும் கட்டுப்பாடற்ற இரத்த சர்க்கரை அளவால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

சருமக் கோளாறுகள்
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரும பிரச்சினைகள் மற்றும் காயங்களிலிருந்து தாமதமாகவே குணமடைவார்கள். உயர் இரத்த சர்க்கரை உங்கள் சருமத்தை வறண்டு, வீக்கம், சிவப்பு திட்டுகள், கொப்புளங்கள் போன்றவற்றை அதிகரிக்கும், இவை அனைத்தும் COVID நோய்த்தொற்றுடன் இணைந்த அறிகுறிகளாகும். ஆகவே, நீரிழிவு நோயாளிகள் தங்கள் சரும ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வதிலும், கொரோனா வைரஸின் இந்த ஆரம்ப அறிகுறிகளைக் கவனிப்பதிலும் மிகுந்த முனைப்புடன் இருக்க வேண்டும்.

COVID நிமோனியா
நிமோனியா ஒரு தீவிர ஆபத்தான பிரச்சினையாகவும், கோவிட் நோயாளிகளுக்கு அச்சுறுத்தலாகவும் மாறும், மேலும் நீரிழிவு நோயுடன் போராடுபவர்களுக்கு இது அதிக ஆபத்தை ஏற்படுத்தும். அதிக அழற்சி அளவுகள் மற்றும் கட்டுப்பாடற்ற இரத்த சர்க்கரை அறிகுறிகள் இருப்பதால், சுவாச ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்பட்டு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். உயர் இரத்த சர்க்கரை அளவு, டாக்டர்களின் கூற்றுப்படி, வைரஸ் உடலில் செழித்து மேலும் சேதத்தை ஏற்படுத்த உதவுகிறது. டைப் -1 மற்றும் டைப் -2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆபத்து ஒரே அளவில்தான் உள்ளது.

ஆக்ஸிஜன் பற்றாக்குறை
COVID-19 நோயாளிகள் எதிர்கொள்ளக்கூடிய மிகப்பெரிய சிக்கல்களில் ஆக்ஸிஜன் செறிவு அளவைக் குறைப்பது ஒன்றாகும். நோயெதிர்ப்பு செயல்பாட்டை குறைக்கும் நீரிழிவு போன்ற அழற்சி நிலையில், முன்பே இருக்கும் சர்க்கரை கோளாறுகள் அல்லது பலவீனம் உள்ள நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் தொடர்புடைய அறிகுறிகளால் பாதிக்கப்படுவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக இப்போது பல ஆய்வுகள்தெரிவித்துள்ளன, இதில் மூச்சுத் திணறல், சுவாசிப்பதில் சிரமம், மார்பு வலி மற்றும் நுரையீரல் பிரச்சினைகள் ஏற்படலாம். மற்ற அறிகுறிகள் இல்லாமல் ஆக்ஸிஜன் அளவு விரைவாகக் குறையும் போது, ஹைபோக்ஸியா நிலை ஏற்படுகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட COVID-19 நோயாளிகளிலும் இந்த நிலை பொதுவாகக் காணப்படுகிறது.

கருப்பு பூஞ்சை தொற்று (மியூகோர்மிகோசிஸ்)
கருப்பு பூஞ்சை தொற்று என்னும் திடீர் அச்சுறுத்தல் COVID-19 நோயாளிகளின் கவலையை அதிகரிக்கிறது. முகத்தின் குறைபாடு, வீக்கம், தலைவலி மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும் மர்மமான பூஞ்சை தொற்று இப்போது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மற்றும் / அல்லது ஸ்டீராய்டு சிகிச்சையில் ஈடுபடும் COVID நோயாளிகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. மருத்துவர்களின் கூற்றுப்படி, நீரிழிவு போன்ற ஒரு அழற்சி நிலை நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை குறைக்கிறது மற்றும் நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்படும் அபாயத்தை உயர்த்துகிறது. உயர் இரத்த சர்க்கரை அளவுகள் வைரஸைப் போலவே பூஞ்சைகளும் இனப்பெருக்கம் செய்வதற்கான சரியான அமைப்புகளை உருவாக்குகின்றன.



Click it and Unblock the Notifications











