நீங்க மலம் கழிக்கும்போது இந்த அறிகுறிகள் இருக்கா? அப்ப அது பெருங்குடல் புற்றுநோயா இருக்கலாமாம்..!

பல சமயங்களில், ஒருவர் குடல் பழக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் மலத்தின் நிலைத்தன்மையில் மாற்றம் அல்லது பெருங்குடலில் உள்ள கட்டி ஆகியவை சீழ் போன்ற திரவத்தை சுரக்கக்கூடும்

நாம் ஆரோக்கியமாக இருக்க நம் ஒவ்வொரு உறுப்பின் செயல்பாடுகளும் சரியாக இருக்க வேண்டியது அவசியம். உங்கள் குடல் இயக்கங்கள் உங்கள் குடல் மற்றும் பெருங்குடல் ஆரோக்கியத்தைப் பற்றி நிறைய சொல்ல முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், பலர் தங்கள் குடலில் ஏற்படும் மாற்றங்களை சாதாரணமாக புறக்கணிக்கிறார்கள். மலம் கழிக்கும் நேரம், நிலைத்தன்மை போன்றவை அடிப்படை நோயின் எச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கலாம் என்பதை அவர்கள் உணரவில்லை. சமீப காலமாக மலச்சிக்கல் அல்லது வயிற்றில் வலி போன்ற குடல் அசைவுகளில் மாற்றத்தை அனுபவித்து வருபவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், அத்தகைய அறிகுறிகளை எக்காரணம் கொண்டும் புறக்கணிக்காமல் இருக்க வேண்டும்.

Changes In Stool That Are Indicative Of Colorectal Cancer In Tamil

உடனே உங்கள் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்ய வேண்டும். ஏனெனில், அது பெருங்குடல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறிகளை காட்டும் உங்கள் குடல் இயக்கங்களில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெருங்குடல் புற்றுநோய் என்றால் என்ன?

பெருங்குடல் புற்றுநோய் என்றால் என்ன?

பெரிய குடலில் ஏற்படும் புற்றுநோய் பெருங்குடல் புற்றுநோய் அல்லது குடல் புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக, இந்த புற்றுநோய் பெருங்குடல் பகுதியில் ஏற்படுகிறது மற்றும் மலக்குடல் பகுதியையும் பாதிக்கலாம். எனவே, பெரிய குடலில் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பொறுத்து, இது குடல் புற்றுநோய் அல்லது மலக்குடல் புற்றுநோய் என்று குறிப்பிடப்படுகிறது. பெருங்குடல் புற்றுநோய் யாரையும் பாதிக்கலாம் என்றாலும், சமீபத்தில், பல இந்திய இளைஞர்கள் பல காரணிகளால் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

ஆபத்தான நிலையை ஏற்படுத்தலாம்

ஆபத்தான நிலையை ஏற்படுத்தலாம்

குறிப்பிட்ட ஆரம்பகால புற்றுநோய் அறிகுறிகள் இல்லாததால் பெருங்குடல் புற்றுநோயைக் கண்டறிவதற்கு தாமதமாகிறது. இதனால், பெரும்பாலான மக்களுக்கு புற்றுநோய் கட்டி கணிசமாக பரவியிருக்கும் போது மட்டுமே மருத்துவ நிபுணர்களால் கண்டறியப்படுகிறது. இதனால் சிகிச்சை தாமதப்படுகிறது மற்றும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலமைக்கு செல்ல வாய்ப்புள்ளது. எனவே, பெருங்குடல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளைக் குறிக்கும் குடல் இயக்கங்களில் ஏற்படும் மாற்றங்களை பற்றி நாம் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

மலம் கழிக்கும்போது வலி ஏற்படுவது

மலம் கழிக்கும்போது வலி ஏற்படுவது

மலம் கழிக்கும்போது வலி ஏற்படுவது மிகவும் பொதுவான அறிகுறிகளில் ஒன்றாகும். இது பெரும்பாலான நேரங்களில் இரைப்பை குடல் பிரச்சினைகளாக கருதி புறக்கணிக்கப்படுகிறது. மேலும், ஒருவர் வயிற்று வலி அல்லது பிடிப்புகள் அல்லது குடல் பகுதியில் வலியை அனுபவிக்கலாம். இது பெருங்குடல் பகுதியில் உள்ள அடைப்பு காரணமாக ஒரு நபருக்கு மலம் கழிப்பதை கடினமாக்குகிறது. மலம் கழித்த பிறகும் வலி தொடர்ந்தால், மருத்துவ பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

 மலம் கழிக்கும்போது இரத்தம் வருவது

மலம் கழிக்கும்போது இரத்தம் வருவது

மலம் கழிக்கும்போது இரத்தம் வருவதை மக்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள். இது மலச்சிக்கலின் அறிகுறியாக இருக்கலாம் எனத் தவறாகக் கருதுகிறார்கள். இருப்பினும், அறிகுறிகளை வேறுபடுத்தி பார்ப்பது அவசியம். மலச்சிக்கல் இரத்தப்போக்கு மீண்டும் வராத நிலையில், பெருங்குடல் புற்றுநோயால் ஏற்படும் உட்புற இரத்தப்போக்கு வழக்கமான அறிகுறியாகும். இது புறக்கணிக்கப்பட்டால் நிலைமை மோசமடைய வாய்ப்புள்ளது.

வயிற்றுப்போக்கு

வயிற்றுப்போக்கு

பல சமயங்களில், ஒருவர் குடல் பழக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் மலத்தின் நிலைத்தன்மையில் மாற்றம் அல்லது பெருங்குடலில் உள்ள கட்டி ஆகியவை சீழ் போன்ற திரவத்தை சுரக்கக்கூடும். இதன் விளைவாக வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. சில சந்தர்ப்பங்களில், வயிற்றுப்போக்கு நாள்பட்டதாக இருக்கலாம், இதன் விளைவாக நோயாளிகளுக்கு உடல் சோர்வு ஏற்படும். உங்களுக்கு வயிற்றுப்போக்கு இருந்தால், அது எதனால் ஏற்படுகிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

மலச்சிக்கல்

மலச்சிக்கல்

பெருங்குடல் புற்றுநோயின் ஆரம்ப நிலைகளில் சிலவற்றில், பெருங்குடலில் உள்ள கட்டியானது மலம் வெளியேறுவதைத் தடுக்கலாம். இதன் விளைவாக மலச்சிக்கல் ஏற்படுகிறது. எனவே, பெருங்குடல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறியாக ஒருவர் தொடர்ந்து மலச்சிக்கல் பிரச்சனையை அனுபவிக்கலாம்.

குறுகிய மலம்

குறுகிய மலம்

பெருங்குடல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறியாக, ஒரு மெல்லிய குச்சி அல்லது பேனா போன்ற குறுகிய மலத்தை வெளியேற்றலாம். இது முதன்மையாக பெரிய குடலில் அடைப்பை ஏற்படுத்தும் கட்டியின் காரணமாக இருக்கலாம். இப்போது, பெரும்பாலும் இந்த அறிகுறி மலச்சிக்கல் காரணமாக அல்லது அதிகப்படியான துரித உணவு மற்றும் உட்கார்ந்த வாழ்க்கை முறை காரணமாக கருதப்படுகிறது. இருப்பினும், ஒருவர் அவர்களின் குடல் பழக்கத்தை கண்காணிக்கவும், அறிகுறி தொடர்ந்தால் மருத்துவரை அணுகவும் பரிந்துரைக்கப்படுகிறது.

மலம் கழித்த பிறகும் அசௌகரியம்

மலம் கழித்த பிறகும் அசௌகரியம்

பெருங்குடலில் உள்ள புற்றுநோய் கட்டி மற்றும் அதன் அடைப்பு காரணமாக டெனெஸ்மஸ் எனப்படும் அடிக்கடி மலம் கழிக்கும் உணர்வை ஒருவர் அனுபவிக்கலாம். மலம் கழித்தாலும், குடலைக் காலியாக்கும் மனக்குழப்பம் மற்றும் மன உளைச்சல் போன்ற உணர்வு அறிகுறிகள் இருக்கலாம். நீங்கள் மலம் கழித்த பின்பும் அசெளகரியமாக உணர்ந்தால், உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும்.

மற்ற அறிகுறிகள்

மற்ற அறிகுறிகள்

மலக்குடல் பாதை அடைக்கப்படுவதால், குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படுவதும் ஓர் அறிகுறியாக இருக்கலாம். குடல் இரத்தப்போக்கு மற்றும் மலத்தில் இரத்த இழப்புடன், ஒருவர் குறைந்த அளவு ஹீமோகுளோபின் அல்லது இரத்த சோகை பிரச்சனையை அனுபவிக்கலாம். இது மேலும் முகம் மற்றும் உள்ளங்கைகளில் வெளிறிய தன்மைக்கு வழிவகுக்கும். அடிக்கடி, சோர்வு ஏற்படுவது என்பது தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு மற்றும் உடல் செயல்பாடு குறைவதன் விளைவாகவும் இருக்கலாம்.

இறுதிக்குறிப்பு

இறுதிக்குறிப்பு

நல்ல உணவுப் பழக்கம், ஆரம்பகால நோயறிதல் மற்றும் சரியான சிகிச்சை மூலம், ஒருவர் பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டு, இயல்பான வாழ்க்கையை வாழ முடியும். எனவே, ஒருவர் அவர்களின் குடல் ஆரோக்கியத்தை தொடர்ந்து கண்காணிக்கு வேண்டும். மேலும், குடல் அசைவுகளில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால், அதைக் கவனிப்பது குறித்த சரியான தகவலைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion