Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
நெய்யோடு 'இந்த' உணவு பொருளை சேர்த்து சாப்பிட்டா... அது விஷம் போல உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமாம்!
பஞ்சாமிர்தம் நச்சுத்தன்மையுடையதாக மாறாததற்குக் காரணம், நெய்யும் தேனும் சம விகிதத்தில் கலக்கப்படுவதில்லை. மேலும், பஞ்சாமிர்தம் ஒரு பிரசாதமாக வழங்கப்படுகிறது மற்றும் மிகச் சிறிய அளவில் உட்கொள்ளப்படுகிறது.
தேன் மற்றும் நெய் இரண்டும் ஆயுர்வேதத்தில் உயர்வாகக் கருதப்படுகின்றன மற்றும் அவை மனித ஆரோக்கியத்திற்கான நன்மைகளுக்காக அறியப்படுகின்றன. ஆனால் தேனும் நெய்யும் கலந்தால் விஷக் கலவையாக மாறுவதாக கூறப்படுவது ஏன்? இவை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் கூறுகளாக இருக்கின்றன. ஆதலால், தேனையும் நெய்யையும் சம அளவில் கலந்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுவது வழக்கம். ஆனால், நாம் பல உணவுப்பொருட்களில் நம்மை அறியாமேலே இவை இரண்டையும் சேர்த்து சாப்பிடுகிறோம்.

தேன் மற்றும் நெய் ஒரு சிறந்த கலவையாக கருதப்படவில்லை. தேன்-ஓட் குக்கீகள் அல்லது மஃபின்கள் போன்ற பல உணவு தயாரிப்புகளில், தெளிவுபடுத்தப்பட்ட வெண்ணெய் பெரும்பாலும் தேனுடன் பயன்படுத்தப்படுகிறது. இது ஒருவரின் ஆரோக்கியத்தில் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும். தேன் மற்றும் நெய்யின் கலவை எவ்வாறு ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக மாறும் என்பதை அறிய தொடர்ந்து இக்கட்டுரையை படியுங்கள்.

நெய் மற்றும் தேன் கலவை
நெய் மற்றும் தேன் சம விகிதத்தில் கலந்து சாப்பிடுவது நச்சுத்தன்மையுடையதாக மாறும். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு பிரச்சனையை ஏற்படுத்தலாம். நெய் மற்றும் தேனைக் கலந்து சாப்பிட்டால், க்ளோஸ்ட்ரிடியம் போட்யூலினம் என்ற பொருள் உடலில் வேகமாகப் பரவி சுவாசக் கோளாறுகள், வயிற்றுவலி மற்றும் புற்றுநோயை உண்டாக்கும். க்ளோஸ்ட்ரிடியம் போட்யூலினம் என்பது ஒரு வகை பாக்டீரியா ஆகும். இது ஆபத்தான நச்சுகளை உருவாக்குகிறது. குறிப்பாக குறைந்த ஆக்ஸிஜன் நிலைகளில் அவை உருவாகின்றன.

நெய் மற்றும் தேன் கலந்தால் விஷம்
நெய் மற்றும் தேன் கலந்த கலவை விஷம் என்றால் பஞ்சாமிர்தம் செய்யும் போது ஏன் பயன்படுத்தப்படுகிறது? என்று கேள்வி எழுப்பலாம். பஞ்சாமிர்தம் என்பது ஐந்து உணவுகளின் கலவையாகும். இது பூஜையின் போது அபிஷேகம் செய்யப் பயன்படுகிறது. பின்னர் பிரசாதமாக வழங்கப்படுகிறது. முக்கியமாக, பால், தயிர், தேன், நெய் மற்றும் சர்க்கரை ஆகியவை சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகின்றன.

பஞ்சாமிர்தத்தில் ஏன் நச்சுத்தன்மை இல்லை?
பஞ்சாமிர்தம் நச்சுத்தன்மையுடையதாக மாறாததற்குக் காரணம், நெய்யும் தேனும் சம விகிதத்தில் கலக்கப்படுவதில்லை. மேலும், பஞ்சாமிர்தம் ஒரு பிரசாதமாக வழங்கப்படுகிறது மற்றும் மிகச் சிறிய அளவில் உட்கொள்ளப்படுகிறது. வழக்கமாக, வெறும் 1 அல்லது 2 தேக்கரண்டி உட்கொள்ளப்படுகிறது. அதனால், இது உடலுக்கு கிட்டத்தட்ட எந்தத் தீங்கும் செய்யாது.

நெய்யின் நன்மைகள்
தேன் வழங்கும் நன்மைகள் பற்றிய அறிமுகம் தேவையில்லை. தெளிவுபடுத்தப்பட்ட வெண்ணெய் என்றும் அழைக்கப்படும் நெய், பால் புரதங்கள், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின் ஏ மற்றும் பியூட்ரிக் அமிலம் போன்ற ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாகும். இது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

மலச்சிக்கலை குணப்படுத்தும்
பருப்பு வகைகள், கறிகள், சப்ஜி மற்றும் கிச்சடி ஆகியவற்றில் ஒரு ஸ்பூன் நெய்யைச் சேர்ப்பது, அவற்றின் சுவைகளை தனித்தனியாக மேம்படுத்தும். ஒரு துளி நெய் சேர்த்து சாதம் மற்றும் சப்பாத்தியின் உயர் கிளைசெமிக் குறியீட்டைக் குறைக்கலாம். நெய் நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமல்ல, மலச்சிக்கலை விரைவில் குணப்படுத்தும் இயற்கையான மலமிளக்கியாகவும் செயல்படுகிறது.

தேனின் நன்மைகள்
பழங்காலத்திலிருந்தே தேன் அதன் மருத்துவ குணங்களுக்கு பெயர் பெற்றது. தொண்டை புண் மற்றும் இருமலை குணப்படுத்துவது முதல் இனிப்பு மற்றும் பானங்களை இயற்கையாகவே இனிமையாக்குவது வரை, தேன் பல வழிகளில் நமக்கு பயனளிக்கும். இதில், ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளுக்கு பிரபலமான தேனின் நன்மைகள் பல்வேறு மருத்துவ ஆராய்ச்சிகளிலும் விவாதிக்கப்பட்டுள்ளன.

எடை இழப்புக்கு உதவும்
எடை இழப்புக்கு தேனை எலுமிச்சை நீரில் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடலாம் அல்லது தொண்டை புண் குணமாக கருப்பு மிளகு மற்றும் இஞ்சியுடன் கலந்து தேனை சாப்பிடலாம். மேலும், நீங்கள் எடுத்துக்கொள்ளும் பானங்களில், சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக ஸ்மூத்திகள், ஓட்ஸ் மற்றும் இனிப்புகளில் தேன் சேர்த்து சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications











