தீபாவளியன்று ஆஸ்துமா பிரச்சனை தீவிரமாகாமல் இருக்க சில வழிகள்!

தீபாவளி பண்டிகை ஒரு சிலருக்கு மட்டும் பாதிப்பை உண்டாக்கும். தீபாவளிப் பண்டிகையால் அதிகம் பாதிக்கப்படுபவர் ஆஸ்துமா நோயாளிகள். ஆஸ்துமா என்பது நுரையீரலின் காற்றுப்பாதைகளின் ஒரு நோயாகும்.

பண்டிகை காலம் வந்தாலே சந்தோஷம் தான். புத்தாடை, பலகாரம், பட்டாசு என்று எல்லாமே சந்தோஷத்தை இரண்டு மடங்காக மாற்றக்கூடியவை. ஆனால் தீபாவளி பண்டிகை ஒரு சிலருக்கு மட்டும் பாதிப்பை உண்டாக்கும். தீபாவளிப் பண்டிகையால் அதிகம் பாதிக்கப்படுபவர் ஆஸ்துமா நோயாளிகள். ஆஸ்துமா என்பது நுரையீரலின் காற்றுப்பாதைகளின் ஒரு நோயாகும், இது பல்வேறு வகையான தூண்டுதல்களால் காரணமாக காற்றுப்பாதைகளின் அதிகரித்த உணர்திறன் ஏற்படுவதால் உண்டாகும் பாதிப்பாகும்.

Asthmatics! Here Is Your Shield To Calm Asthma Symptoms During This Festive Season

இந்த நோய் ஒரு நபரை தொடர்ச்சியாக பாதிப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட காலம் பாதிக்கப்பட்டு மீண்டும் சில நாட்கள் இதன் அறிகுறிகள் மறைந்து காணப்படும். பெரும்பாலான தாக்குதல்கள் பொதுவாக குறுகிய காலமாக இருந்தாலும், சில நேரங்களில் கடுமையான சந்தர்ப்பங்களில், இது பல மணிநேரம் அல்லது நாட்கள் கூட நீடிக்கும்.

மருத்துவர்களைப் பொறுத்தவரை, தீபாவளி என்பது குழந்தைகள் மற்றும் ஆஸ்துமா நோயாளிகளிடையே சுவாசக் கோளாறுகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படக்கூடிய ஒரு சந்தர்ப்பமாகவே பொருள் கொள்ளப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அறிகுறிகள்:

அறிகுறிகள்:

ஆஸ்துமாவின் அறிகுறிகள் பின்வருமாறு:

* இருமல்

* மூச்சுத்திணறல்

* மூச்சுவிட சிரமம்

* மார்பு இறுக்கம்

* நெஞ்சு வலி

காரணங்கள்:

காரணங்கள்:

ஆஸ்துமாவின் சரியான காரணம் அறியப்படவில்லை. ஆஸ்துமா உள்ள அனைவருக்கும் பொதுவானது நாள்பட்ட காற்றுப்பாதை அழற்சி மற்றும் பல்வேறு தூண்டுதல்களுக்கு அதிகப்படியான காற்றுப்பாதை உணர்திறன். "சுவாசக் குழாயில் உள்ள ஒவ்வாமை காரணமாக ஆஸ்துமா ஏற்படுகிறது. இது மகரந்தங்கள், வீட்டின் தூசி-எடுத்துக்காட்டாக வண்டுகள், பூஞ்சை, கரப்பான் பூச்சிகள், கொசுக்கள் போன்ற பூச்சிகள் காரணமாக இருக்கலாம். நட்ஸ் , முட்டை மற்றும் சில சந்தர்ப்பங்களில், பால் கூட ஒவ்வாமையை ஏற்படுத்தும். இந்த ஆஸ்துமா வெளிப்பாடுகள் மாசுபாடு, ஆட்டோமொபைல் புகை வெளியேற்றம், தொழிற்சாலை கழிவுகள், உணவு தானிய சந்தைகள், அறுவடை பருவங்கள், வைரஸ் தொற்றுகள், வண்ணப்பூச்சியின் வலுவான வாசனை, வீட்டிற்கு வெள்ளை அடித்தல் போன்றவற்றின் காரணமாக மோசமடைகின்றன. கடுமையான ஆஸ்துமா தாக்குதலை உருவாக்க இன்னும் பல காரணங்கள் உள்ளன "என்று மூல்சந்த் மெட்சிட்டி நுரையீரல் துறையின் மூத்த ஆலோசகர் டாக்டர் எஸ் கே ஜெயின் கூறுகிறார்.

பட்டாசுக்கள்

பட்டாசுக்கள்

ஆஸ்துமா நோயாளிகள் மாசுபாட்டிற்கு மிகவும் உணர்திறன் உடையவர்கள். பட்டாசுகளை வெடிப்பது SO2 போன்ற வேதியியல் எரிபொருள்களையும் பிற வெடிபொருட்களையும் வெளியிடுகிறது. அவை உள்ளிழுக்கும் போது ஆஸ்துமாவின் கடுமையான தாக்குதலை ஏற்படுத்தக்கூடும் அல்லது ஏற்கனவே இருக்கும் ஒன்றை மோசமாக்கலாம், குறிப்பாக இந்த இரசாயனங்கள் அதிக செறிவில் பயன்படுத்தப்படும் போது பாதிப்பு மேலும் மோசமடைகிறது என்று, "டாக்டர் ஜெயின் கூறுகிறார்.

அடிப்படை முன்னெச்சரிக்கைகள்:

அடிப்படை முன்னெச்சரிக்கைகள்:

ஆஸ்துமாவின் அறிகுறிகளைக் கட்டுப்படுத்த தீபாவளி பண்டிகை காலங்களில் எடுக்கக்கூடிய சில அடிப்படை முன்னெச்சரிக்கைகள் பின்வருமாறு:

* வீட்டுக்குள்ளேயே இருங்கள். வழக்கமான மருந்துகளை மறக்காமல் எடுத்துக் கொள்ளுங்கள்.

* மருந்துகள் இருந்தபோதிலும் இருமல், மூச்சுத்திணறல், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற குறுகிய மற்றும் கடுமையான அறிகுறிகளை நீங்கள் கண்டால், உடனடியாக அருகிலுள்ள மருத்துவ பராமரிப்பு மையத்திற்கு தகுந்த ஆலோசனை மற்றும் சிகிச்சைக்காக செல்லவும்.

வேறு சில...

வேறு சில...

* வெளியே சென்று பட்டாசுகளை வெடிப்பதை விட உங்கள் உடல்நலம் முக்கியமானது என்பதை அறிந்து கொள்ளுங்கள். பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற உங்கள் விருப்பத்தில் சமரசம் செய்து கொள்ளுங்கள். மேலும் வீட்டில் இருக்கும் போதும் சரி, வெளியே வரும் போதும் சரி, மூக்கிற்கு மாஸ்க்குகளை அணிந்து கொள்ளுங்கள்.

* ஆஸ்துமா நோயாளிகள் தடுப்பு மருந்துகளை உட்கொள்ள வேண்டும். கடுமையான ஆஸ்துமா நோயாளிகள், குறிப்பாக தீபாவளியின் போது, அவசர கால திட்டத்தை கையில் வைத்திருக்க வேண்டும்.

* தீபாவளி பண்டிகை என்பது நாம் அனைவரும் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்க வேண்டிய நேரம். ஆனால் ஆஸ்துமா நோயாளிகள் தங்கள் சந்தோஷத்தை கெடுக்கும் சில விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion