Just In
- 2 hrs ago 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- 2 hrs ago 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- 3 hrs ago தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- 3 hrs ago வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
Don't Miss
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இந்த பொருட்களை தொட்டா மறக்காம கையை கழுவிருங்க இல்லனா பெரிய ஆபத்துதான் தெரிஞ்சிக்கோங்க...
கை கழுவுவது என்பது அடிப்படை ஆரோக்கிய பழக்கங்களில் ஒன்றாகும். ஏனெனில் அது நமது உடலுக்குள் கிருமிகள் செல்வதை பெருமளவில் தடுக்க உதவும் ஒரு சுகாதர முறையாகும்.
கை கழுவுவது என்பது அடிப்படை ஆரோக்கிய பழக்கங்களில் ஒன்றாகும். ஏனெனில் அது நமது உடலுக்குள் கிருமிகள் செல்வதை பெருமளவில் தடுக்க உதவும் ஒரு சுகாதர முறையாகும். பொதுவாக நாம் சாப்பிடுவதற்கு முன் மற்றும் சாப்பிட்டு முடித்ததற்கு பிறகு மற்றும் கழிவறைக்கு சென்று வந்த பிறகு கைகளை கழுவுவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். ஆனால் நமது ஆரோக்கியத்திற்கு இது மட்டும் போதாது.
நாம் அன்றாடம் தொடக்கூடிய சில பொருட்களும், இடங்களும் கிருமிகளின் வாழ்விடங்களாக இருக்கிறது. இந்த பொருட்களை தொட நேர்ந்தால் உடனடியாக கைகளை கழுவ வேண்டியது அவசியம். இல்லையெனில் கை மற்றும் வாய் வழியாக செல்லக்கூடிய கிருமிகள் உங்களுக்கு பல ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடும். இந்த பதிவில் எந்தெந்த பொருட்களை தொட்ட பின்னால் உடனடியாக கைகளை கழுவ வேண்டும் என்று பார்க்கலாம்.
பணம்
டிஜிட்டல் இந்தியாவாக மாறி கார்டுகளை உபயோகிக்க தொடங்கி இருந்தாலும் பணத்தை தொடாமல் நம்மால் வாழ முடியாது. பணத்தை கையில் தொட்ட பின் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கைகளை கழுவி விடுங்கள். ஏனெனில் பணத்தில் நூற்றுக்கணக்கான கிருமிகள் இருக்க வாய்ப்புள்ளது. வாய் மற்றும் பிறப்புறுப்புகளி பாதிக்கும் கிருமிகள், செல்லப்பிராணிகள் DNA மற்றும் வைரஸ்கள் என பல ஆபத்துகள் பணத்தின் மூலம் பரவக்கூடும். நாணயங்களில் கூட பெத்தோஜன்கள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது.
கைப்பிடிகள்
பாக்டீரியா மற்றும் வைரஸ் பரவுதலை தடுக்க கை கழுவுவது மிகவும் முக்கியமான ஒன்றாகும். பொது போக்குவரத்து சாதனங்களில் பயணம் செய்தால் உடணடியாக கையை கழுவ வேண்டியது அவசியமாகும். ஏனெனில் பலரும் பேருந்து மற்றும் ஆட்டோக்களில் இருக்கும் கைப்பிடிகளை உபயோகிப்பார்கள். அதனால் பொதுவாகவே அங்கு அதிக கிருமிகள் இருக்கும். எனவே பயணம் முடிந்த உடனேயே கைகளை கழுவுவது நல்லது.
ஹோட்டல் மெனு
உணவகங்கள் பொதுவாக கிருமிகள் நிறைந்த இடமாக இருக்கலாம். அதிலும் மெனுக்கள் மிகவும் மோசமானவை ஆகும். உணவகங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் மெனுக்களில் 185,000 பாக்டீரிய உயிரினங்கள் இருப்பதாக கண்டறிந்துள்ளனர். பலரும் இதை உபயோகிப்பதால் இதன் மூலம் கிருமிகள் பரவலாம். நாமும் பயன்படுத்திதான் ஆகவேண்டும் ஆனால் பயன்படுத்திய பிறகு கையை கழுவிட வேண்டும்.
MOST READ:தந்திரங்களின் சக்கரவர்த்தியான சாணக்கியர் வஞ்சகத்தால் எப்படி கொல்லப்பட்டார் தெரியுமா?
மற்றவர்களின் பேனா
இப்போதெல்லாம் பெரும்பாலும் மளிகை சாமான் லிஸ்ட் எடுக்கக்கூட போனைதான் பயன்படுத்துகிறோம். ஆனால் சிலசமயம் பேனாவை உபயோகிக்கும் நிலை ஏற்படலாம். ஓர் அலுவலக பேனாவில் கழிவறையில் இருக்கும் அளவிற்கு பாக்டீரியாக்கள் இருக்க வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது. அதிலும் பலர் பேனா மூடிகளை வாயில் வைக்கும் பழக்கம் கொண்டுள்ளனர். இது அவர்களுக்கு போல பிரச்சினைகளை உண்டாக்கும்.
விலங்குகள்
செல்ல பிராணிகளுடன் விளையாடிய பிறகு கை கழுவுவதை பலரும் செய்வதில்லை, ஆனால் அதனை கண்டிப்பாக செய்ய வேண்டும். ஏனெனில் விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு பரவும் நோய்கள் எண்ணற்றவை. எனவே விலங்குகளுடன் விளையாடிய பின் அது உங்கள் வீட்டு செல்ல பிராணியாகவே இருந்தாலும் கைகளை கழுவ வேண்டியது அவசியம்.
தொடுதிரை
தொடுதிரை போன் வந்த பிறகு பேப்பர்களின் பயன்பாடு பெருமளவு குறைந்து விட்டது. ஆனாலும் போன் உபயோகித்த பிறகு கைகளை கழுவ வேண்டியது அவசியமாகும். கிருமிகள் அனைத்து இடங்களிலும் இருக்கலாம் ஆனால் சில இடங்களில் நீங்கள் நினைப்பதை விட அதிகமாக இருக்கலாம். அந்த இடங்களில் ஒன்றுதான் தொடுதிரை ஆகும். கதகதப்பாக இருக்கும் இடங்களில் கிருமிகள் அதிகம் வசிக்க விரும்பும். உங்கள் போன் பெரும்பாலும் சூடாகத்தான் இருக்கும். இதுபோதும் கிருமிகள் அதிகளவில் பெருக.
MOST READ:திட்டம் போட்டு சொல்லி அடிப்பதில் இந்த 6 ராசிகளில் பிறந்தவர்கள் கில்லியாம் தெரியுமா?
மருத்துவமனையில் இருக்கும் அனைத்தும்
மருத்துவமனைக்கு பெரும்பாலும் நோயாளிகளே வருவார்கள். எனவே மருத்துவமனை முழுவதும் கிருமிகள் நிறைந்திருக்கும். எனவே நீங்கள் மருத்துவமனைக்கு சென்று விட்டு அங்குள்ள பொருட்களை தொட்டு விட்டு கைகளை சுத்தமாக கழுவாமல் இருப்பது உங்கள் உடலுக்குள் கிருமிகள் நுழைய நீங்களே வாசலை திறந்து வைப்பது போன்றதாகும்.