Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
பெண்கள் கன்னித்தன்மையை இழந்த பிறகு அவர்கள் உடலில் ஏற்படும் உடனடி மாற்றங்கள் என்னென்ன தெரியுமா?
கன்னித்தன்மை இழப்பு என்பது பெண்ணின் பிறப்புறுப்பிற்குள் இருக்கும் ஒரு சவ்வு கிழிவதால் ஏற்படுவதுதான். இதற்கு கலவியில்தான் ஈடுபட வேண்டும் என்று அவசியமில்லை.
நமது நாட்டில் ஆன்மீகரீதியாகவும், கலாச்சாரரீதியாகவும் பெண்களுக்கு கன்னித்தன்மை என்பது மிகவும் முக்கியமானதாகும். பெண்களை கண்ணாக மதிக்கிறோம் என்று சொல்லிக்கொள்ளும் நம் நாட்டில் பெண்களுக்கான மரியாதையும், உரிமையும் இன்னும் கிடைக்கவில்லை என்பதே கசப்பான உண்மையாகும்.

கன்னித்தன்மை இழப்பு என்பது பெண்ணின் பிறப்புறுப்பிற்குள் இருக்கும் ஒரு சவ்வு கிழிவதால் ஏற்படுவதுதான். இதற்கு கலவியில்தான் ஈடுபட வேண்டும் என்று அவசியமில்லை, பெண்கள் செய்யும் சில சாதாரண செயல்கள் கூட அவர்களுக்கு இந்த நிலையை ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால் கலவி மூலம் கன்னித்தன்மை இழக்கும் பெண்களுக்கு அதற்குப்பின் உடலில் சில மாற்றங்கள் தோன்றும். இதனை கண்டு பெண்கள் பயப்பட தேவையில்லை. இந்த பதிவில் கன்னித்தன்மை போன பிறகு பெண்களின் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று பார்க்கலாம்.

யோனியில் மாற்றங்கள்
கலவியில் ஈடுபட்டு கன்னித்தன்மை போன பெண்களுக்கு அதன்பிறகு பிறப்புறுப்பில் நெகிழ்ச்சி ஏற்படும். தொடர்ந்து கலவியில் ஈடுபடும்போது இந்த புதிய மாற்றத்தை பழகிக்கொள்ள பெண்களின் பிறப்புறுப்பிற்கு சில காலம் தேவைப்படும். ஊடுருவும் தன்மையை அதிகரித்து கொள்ளவும் பெண்களுக்கு சில காலம் ஆகும். காலப்போக்கில் இது சரியாகிவிடும். காலத்திற்கு ஏற்ப யோனியின் உராய்வுத்தன்மை மாறிவிடும்.

க்ளியோட்ரிஸ் மற்றும் யூட்ரஸ் விரிவடையும்
பெண்கள் தூண்டப்பட்ட நிலையில் இருக்கும் போது அவர்களின் க்ளியோட்ரிஸ் வீக்கமாக காணப்படும் அதேபோல யூட்ரஸ் உயர்ந்த நிலைக்கு வந்துவிடும். ஒவ்வொருமுறை கிளர்ச்சி நிலைக்கு செல்லும்போதும் பெண்களுக்கு இந்த நிலை ஏற்படும். கலவியில் ஈடுப்பட்டு முடிந்த பிறகு பெண்களின் யூட்ரஸ் மற்றும் க்ளியோட்ரிஸ் சாதாரண நிலைக்கு திரும்பிவிடும்.

மார்பகங்களில் மாற்றம்
கன்னித்தன்மை இழந்த பிறகு பெண்களின் மார்பகங்களில் பல மாற்றங்கள் ஏற்படும். ஆம், மார்பங்கள் அடிக்கடி உறுதியானதாக மாறும். கலவியில் ஈடுபடும் போதும், ஈடுபட்ட பிறகும் மார்பக திசுக்களில் அதிக இரத்த ஓட்டம் ஏற்படுவதால் அவை உறுதியானதாக மாறிவிடும். கலவி முடிந்த பிறகு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிவிடும். இது ஒரு தற்காலிக நிலைதான்.

மார்பக காம்புகளில் மாற்றம்
கன்னித்தன்மை போன பிறகு பெண்களின் உடல் பல மாற்றங்களுக்கும், புதிய அனுபவங்களுக்கும் உட்படும். அதில் முக்கியமானது மார்பக காம்புகளில் ஏற்படும் நெகிழ்வுத்தன்மையாகும். இதனை சுற்றி இரத்த ஓட்டம் அதிகரிப்பதாலும், தசை இறுக்கத்தாலும் இவை எப்பொழுதும் இருப்பதை விட மென்மையானதாக மாறுகிறது.

மகிழ்ச்சியான ஹார்மோன்கள்
கன்னித்தன்மை போன புதிதில் பெண்களின் சருமம் பொலிவுடன் காணப்படும். இந்த பொலிவிற்கு காரணம் அவர்கள் உடலில் சுரக்கும் மகிழ்ச்சி ஹார்மோன்களான செரோடினின் ஆகும். அதுமட்டுமின்றி பெண்கள் உச்சமடையும் போது அவர்கள் உடலில் ஆக்சிடாஸின் என்னும் ஹார்மோன் சுரக்கும். இது அவர்களை மகிழ்ச்சியாகவும், தளர்வாகவும் உணர்வைக்கும்.

மாதவிடாயில் மாற்றங்கள்
கன்னித்தன்மை போன பிறகு பெண்களின் மாதவிடாயில் பல மாற்றங்கள் ஏற்படும். பெண்களின் பாலியல் ஹார்மோன்கள் செயல்பட தொடங்குவதால் அவர்களுக்கு மாதவிடாய் வருவதில் தாமதம் ஏற்படலாம். இது கர்ப்பத்தின் அறிகுறி என்று பயப்பட வேண்டாம். உங்கள் உடல் பல மாற்றங்களுக்கு ஆளாக போகிறது என்பதற்கான எச்சரிக்கை மணிதான் இது.

உணர்ச்சிகளில் மாற்றங்கள்
கன்னித்தன்மை போன பிறகு பெண்கள் பலவிதமான உணர்ச்சிகளுக்கு ஆளாவார்கள். சிலசமயம் மகிழ்ச்சியாகவும், சிலசமயம் சோகமாகவும் இருப்பார்கள். இதற்கு காரணம் அவர்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள்தான். இதனால் அவர்கள் இரண்டு உணர்ச்சிகளிலுமே உச்சத்தை அடைவார்கள்.



Click it and Unblock the Notifications











