Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு 2600 கோடி அபராதம்: புற்றுநோய் அபாயம்!
ஜான்சன் & ஜான்சன் பவுடர் பயன்படுத்தியதால் புற்றுநோய். 2600 கோடி அபராதம் விதித்த அமெரிக்க நீதிமன்றம்.
ஜான்சன் & ஜான்சன் குழந்தைகளுக்கான ஒரு சிறப்பு பவுடராக உலகெங்கிலும் திகழ்ந்து வருகிறது. ஜான்சன் & ஜான்சன் பவுடர் பயன்படுத்தாத வீடுகளே இருக்காது என்ற அளவிற்கு குழந்தைகளுக்கான சிறப்பு பவுடராக காணப்படுகிறது.
ஆனால், கடந்த சில வருடங்களாக இந்த பவுடரில் கலக்கப்படும் சில கெமிக்கல்ஸ் புற்றுநோய் ஏற்பட காரணியாக இருக்கிறது என வழக்குகள் அதிகம் பதிவாகி வருகின்றன.
சமீபத்தில், இப்படி ஒரு வழக்கில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திடம் இருந்து அமெரிக்க பெண் ஒருவர் ரூபாய் 2600 கோடி இழப்பீடு தொகையாக பெற்றுள்ளார்...

ஈவா எக்கேவர்ரியா!
ஈவா எக்கேவர்ரியா, கலிபோர்னியாவில் வசித்து வரும் பெண்மணி. இவர் பல வருடங்களாக ஜான்சன் & ஜான்சன் பவுடர் பயன்படுத்தி வந்தார்.
இவருக்கு கர்பப்பை புற்றுநோய் இருப்பது ஒருநாள் அறியவந்தது. மருத்துவ பரிசோதனைகள் செய்த பிறகு, பல ஆண்டுகளாக அவர் பயன்படுத்தி வந்த ஜான்சன் & ஜான்சன் பவுடர் தான் அதற்கு காரணமாக இருந்தது என அறியவந்தது.

லாஸ் ஏஞ்சலஸ் நீதிமன்றம்!
இதை தொடர்ந்து, ஈவா எக்கேவர்ரியா லாஸ் ஏஞ்சலஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் தான் கடந்த சில ஆண்டுகளாக கர்பப்பை புற்றுநோயால் அவதிப்பட்டு மரணத்தின் விளிம்பில் வாழ்ந்து வருகிறேன். இதற்கு காரணம் சிறு வயதில் இருந்து பயன்படுத்தி வந்த ஜான்சன் & ஜான்சன் பவுடர் தான் என தெரிவித்திருந்தார்.

தீர்ப்பு!
வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு 2600 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.
இந்த தொகை போக, அந்த பெண்மணியின் மருத்துவ செலவையும் அந்நிறுவனமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் மற்றும் இதர சில பொருட்களும் புற்றுநோய் உண்டாக காரணமாக இருக்கிறது என அமெரிக்க நீதிமன்றங்களில் இதுவரை ஏறத்தாழ 1500 வழக்குகள் பதிவாகியுள்ளன.

கலிபோர்னியா!
இதற்கு முன் கடந்த ஆண்டு கலிபோர்னியாவை சேர்ந்த பெண் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திடம் இருந்து ரூபாய் 467 கோடி இழப்பீடு தொகை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை நான்கு முறை இந்நிறுவனம் இது போன்று அபாராதம் செலுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications