Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு 2600 கோடி அபராதம்: புற்றுநோய் அபாயம்!
ஜான்சன் & ஜான்சன் பவுடர் பயன்படுத்தியதால் புற்றுநோய். 2600 கோடி அபராதம் விதித்த அமெரிக்க நீதிமன்றம்.
ஜான்சன் & ஜான்சன் குழந்தைகளுக்கான ஒரு சிறப்பு பவுடராக உலகெங்கிலும் திகழ்ந்து வருகிறது. ஜான்சன் & ஜான்சன் பவுடர் பயன்படுத்தாத வீடுகளே இருக்காது என்ற அளவிற்கு குழந்தைகளுக்கான சிறப்பு பவுடராக காணப்படுகிறது.
ஆனால், கடந்த சில வருடங்களாக இந்த பவுடரில் கலக்கப்படும் சில கெமிக்கல்ஸ் புற்றுநோய் ஏற்பட காரணியாக இருக்கிறது என வழக்குகள் அதிகம் பதிவாகி வருகின்றன.
சமீபத்தில், இப்படி ஒரு வழக்கில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திடம் இருந்து அமெரிக்க பெண் ஒருவர் ரூபாய் 2600 கோடி இழப்பீடு தொகையாக பெற்றுள்ளார்...

ஈவா எக்கேவர்ரியா!
ஈவா எக்கேவர்ரியா, கலிபோர்னியாவில் வசித்து வரும் பெண்மணி. இவர் பல வருடங்களாக ஜான்சன் & ஜான்சன் பவுடர் பயன்படுத்தி வந்தார்.
இவருக்கு கர்பப்பை புற்றுநோய் இருப்பது ஒருநாள் அறியவந்தது. மருத்துவ பரிசோதனைகள் செய்த பிறகு, பல ஆண்டுகளாக அவர் பயன்படுத்தி வந்த ஜான்சன் & ஜான்சன் பவுடர் தான் அதற்கு காரணமாக இருந்தது என அறியவந்தது.

லாஸ் ஏஞ்சலஸ் நீதிமன்றம்!
இதை தொடர்ந்து, ஈவா எக்கேவர்ரியா லாஸ் ஏஞ்சலஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் தான் கடந்த சில ஆண்டுகளாக கர்பப்பை புற்றுநோயால் அவதிப்பட்டு மரணத்தின் விளிம்பில் வாழ்ந்து வருகிறேன். இதற்கு காரணம் சிறு வயதில் இருந்து பயன்படுத்தி வந்த ஜான்சன் & ஜான்சன் பவுடர் தான் என தெரிவித்திருந்தார்.

தீர்ப்பு!
வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு 2600 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.
இந்த தொகை போக, அந்த பெண்மணியின் மருத்துவ செலவையும் அந்நிறுவனமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் மற்றும் இதர சில பொருட்களும் புற்றுநோய் உண்டாக காரணமாக இருக்கிறது என அமெரிக்க நீதிமன்றங்களில் இதுவரை ஏறத்தாழ 1500 வழக்குகள் பதிவாகியுள்ளன.

கலிபோர்னியா!
இதற்கு முன் கடந்த ஆண்டு கலிபோர்னியாவை சேர்ந்த பெண் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திடம் இருந்து ரூபாய் 467 கோடி இழப்பீடு தொகை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை நான்கு முறை இந்நிறுவனம் இது போன்று அபாராதம் செலுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications











