Latest Updates
-
1 வருடம் கழித்து மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கபோறாங்க.! -
தேங்காய் சேர்க்காமலேயே சூப்பரா தேங்காய் சட்னி செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
வல்லாரை கீரையை இந்த மாதிரி சட்னி செஞ்சு பாருங்க - புத்தியும், ஆரோக்கியமும் அதிகமாகும் -
வாஸ்து படி இந்த 5 செடிகள் உங்கள் வீட்டில் இருந்தால் துரதிர்ஷ்டம் உங்கள் வீட்டை விட்டு எப்பவும் போகாதாம் -
முருங்கைக்காய் வாங்குனா இந்த வித்தியாசமான பொரிச்ச குழம்பு செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
மாங்காய் Vs. மாம்பழம்: இந்த இரண்டில் எது உண்மையில் ஆரோக்கியமானது தெரியுமா? உங்களுக்கு பிடிச்சது எது? -
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சிக்கன் வாங்குனா இந்த தேங்காய் கொத்தமல்லி சிக்கன் வறுவலை செய்யுங்க - சூப்பரா இருக்கும்
அரியவகை மரபணு கோளாறால் பாதிக்கப்பட்டிருக்கும் தெலுங்கானா சிறுவன்!
அஸ்வந்த், எட்டு வயதேயான தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த சிறுவன். இந்த சிறுவனின் கை, கால் விரல்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று பிணைந்து இருக்கின்றன.
பிறக்கும் ஏற்படும் சில குறைபாடுகள் மற்றவர் வாழும் இயல்பு வாழ்வை வாழ முடியாத நிலைக்கு நம்மை தள்ளும். அதிலும், முக்கியமாக கை, கால் சார்ந்த குறைபாடுகள் இந்த சமூகத்தில் ஒரு சவாலுடன் ஒவ்வொரு நொடியையும் நகர்த்த செய்யும்.
சில கோளாறுகளை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்துவிடலாம். அதிலும், சிலரது வாழ்க்கை சூழல் மற்றும் பொருளாதார நிலையானது எதுவும் செய்ய முடியாத நிலைக்கு தள்ளிவிடும்.
அஸ்வந்த், எட்டு வயதேயான தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த சிறுவன். இந்த சிறுவனின் கை, கால் விரல்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று பிணைந்து இருக்கின்றன.

Image Credit: Youtube
இதனால், கை இருந்தும் பயன்படுத்த முடியாத அவலநிலையில் தவித்து வருகிறான் சிறுவன் அஸ்வந்த். இவனால் ஷூ மாட்ட முடியாது, கை, கால்களை விரல்கள் மரபணு கோளாறு காரணத்தால் எதற்கும் பயன்படுத்து முடியாத நிலையில் இருக்கிறது.
மேலும், இச்சிறுவனின் தலை இயல்பு நிலையை காட்டிலும் பெரிதாக வளர்ந்து வருகிறது.
சிறுவன் அஸ்வந்த்தின் குடும்பம் இவனுக்கான மருத்துவ சிகிச்சை அளிக்க முயன்று வருகிறார்கள். இதற்காக தங்கள் நிலம், நகை உட்பட அனைத்து சொத்துக்களையும் விற்றுவிட்டார்கள். அஸ்வந்தின் தந்தை ஒரு லாரி கிளீனர்.
அஸ்வந்த் பாதிக்கப்பட்டுள்ளது Apert Syndrome என கூறப்படுகிறது. சிறுவனின் நிலை இப்போது முதிர் நிலையை அடைந்துள்ளது. இதற்கான அறுவை சிகிச்சை செய்ய, இந்த குறைபாட்டை குணமாக்க போதிய பணவசதி இல்லாமல் தவித்து வருகிறார்கள்.
இந்த சிறுவனின் மூன்று வயதில் இருந்து இந்த குறைபாட்டின் அறிகுறிகள் வெளிப்பட துன்வங்கியுள்ளன. ஆனால், இதை பற்றிய போதிய தெளிவு இல்லாத காரணத்தால் பெற்றோர் அறியாதிருந்துள்ளனர்.
அஸ்வந்தின் கிராமத்தில் இருப்பவர் இப்போது இவருக்காக பொது மக்களிடம் இருந்து கிரவுட் ஃபண்டிங் மூலமாக பணம் சேர்த்து வருகிறார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











