Latest Updates
-
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை
தினமும் கட்டாயம் 8 டம்ளர் நீரைக் குடிக்க வேண்டுமா என்ன?
உடலில் நீர்ச்சத்தை நடுநிலையாக வைத்திருக்க, தினமும் குறிப்பிட்ட அளவு நீரைக் குடிக்க வேண்டியது அவசியம். ஆனால் 8 டம்ளர் நீரைக் கட்டாயம் குடிக்க வேண்டுமா என்பதற்கான விடை இக்கட்டுரையில் உள்ளது.
இதுவரை நாம் ஆரோக்கியம் குறித்த கட்டுரைகள் பலவற்றைப் படித்திருப்போம். அதில் ஆரோக்கியமாக இருப்பதற்கு தினமும் குறைந்தது 8 டம்ளர் நீரைக் குடிக்க வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டிருப்பதையும் படித்திருப்போம். இதைப் படிக்கும் போது, நம்மில் பலருக்கும் கட்டாயம் 8 டம்ளர் நீரைக் குடித்தாக வேண்டுமா என்ற கேள்வி எழுந்திருக்கும்.

அத்தகையவர்களது கேள்விக்கான பதில் இக்கட்டுரையில் கிடைக்கும். பொதுவாக மனித உடலானது 65% நீரால் ஆனது. எனவே உடலில் நீர்ச்சத்தை நடுநிலையாக வைத்திருக்க, தினமும் குறிப்பிட்ட அளவு நீரைக் குடிக்க வேண்டியது அவசியம். ஆனால் பலரது கேள்வி, 8 டம்ளர் நீரைக் குடிக்க வேண்டுமென்ற விதிமுறையைப் பின்பற்ற வேண்டுமா என்பது தான். இதுக்குறித்து தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

2002 ஆய்வு
2002 ஆம் ஆண்டு 8 டம்ளர் நீரை தினமும் பருகி வந்தவர்களின் உடலில் ஏதேனும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இரு குழுக்கள்
இந்த ஆய்வில் பங்கு கொண்டவர்கள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். அதில் ஒரு குழுவினர் தினமும் 8 டம்ளர் நீரையும், மற்றொரு குழுவினர் தாகம் எடுக்கும் போது மட்டும் தேவையான அளவு நீரைக் குடிக்குமாறும் ஆய்வாளர்கள் செய்தனர்.

சில மாதங்கள் கழித்து....
சில மாதங்களுக்குப் பின், இரண்டு குழுவினரின் உடலில் ஏதேனும் மாற்றம் தெரிகிறதா என்று ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர்.

முடிவு
இந்த ஆய்வில் 8 டம்ளர் நீரைக் குடித்து வந்தோரது ஆரோக்கியத்திலும், தாகம் எடுக்கும் போது மட்டும் நீரைக் குடித்து வந்தோரது ஆரோக்கியத்திலும், அவ்வளவு பெரிய மாற்றம் ஏற்பட்டிருப்பது தெரியவில்லை. சொல்லப்போனால் ஒரே மாதிரி தான் இருந்தது.

குறிப்பு
எனவே தினமும் 8 டம்ளர் நீரைக் கட்டாயம் குடிக்க வேண்டும் என்ற முட்டாள்தனமான விதிமுறையை கைவிட்டு, தாகம் எடுக்கும் போது தேவையான அளவு நீரைக் குடித்து ஆரோக்கியமாக வாழுங்கள்.

போதிய நீர் குடிக்காவிட்டால் சந்திக்கும் விளைவுகள்
ஒருவர் தினமும் போதிய அளவில் நீரைக் குடிக்காமல் இருந்தால், அதனால் உடல் வறட்சியடைந்து, மிகுந்த சோர்வு, தலைவலி, தலைச்சுற்றல், உடல் வலி, உறுப்பு செயலிழப்பு மற்றும் மரணத்தைக் கூட உண்டாக்கும். எனவே கவனமாக இருங்கள்.



Click it and Unblock the Notifications
