Latest Updates
-
முட்டைக்கோஸ் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
July 2026 Horoscope: இந்த 4 ராசிக்காரங்க ஜூலை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..
வியர்வையை துடைக்காமல் அப்படியே விட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
இங்கு வியர்வையை துடைக்காமல் அப்படியோ காய வைப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
கோடைக்காலம் என்பதால் அதிகமாக வியர்க்கும். அதிலும் என்ன தான் நன்கு குளிர்ச்சியான நீரில் குளித்துவிட்டு வந்தாலும், உடனே வியர்வை வெளியேற ஆரம்பிக்கும். அவ்வளவு மோசமான காலம் தான் கோடைக்காலம்.

கோடைக்காலத்தில் இப்படி வியர்க்கும் போது, அந்த வியர்வையை துடைக்காமல் உடலில் அப்படியே காய வைப்பதால் ஒருசில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இங்கு வியர்வையை துடைக்காமல் காய வைப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அரிப்பு
நன்கு வியர்த்து, அது அப்படியே உடலில் காயும் போது, ஒருவித அசௌகரியத்தை மற்றும் அரிப்பை சந்திக்கக்கூடும். ஏனெனில் வியர்வையானது அழுக்குகள் மற்றும் பாக்டீரியாக்களை ஒன்று சேர்த்து, அரிப்பை உண்டாக்குகிறது.

தடிப்புகள்
வியர்வை உடலில் காயும் போது, அது ஆரம்பத்தில் அரிப்பை உண்டாக்கும். அந்த அரிப்பு அப்படியே நீடிக்கும் போது, அது பயங்கரமான தடிப்புக்களை ஏற்படுத்தும். பெரும்பாலும் இம்மாதிரியான நிலை உடலில் மடிப்புக்கள் உள்ள பகுதிகளில் தான் ஏற்படும்.

துர்நாற்றம்
அதிகமாக வியர்வை வெளியேறும் போது, நம்மில் பலரும் ஃபேனிற்கு கீழே அமர்ந்து, வியர்வையை உலர்த்துவோம். ஆனால் இப்படி செய்யும் முன் மீண்டும் யோசித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இந்த செயலால் உடுத்திய ஆடையில் வியர்வை காயும் போது, அது நாள் முழுவதும் நம்மீது துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.

பிசுபிசுப்புத்தன்மை
வியர்வை அதிகம் வெளியேறி, அது அப்படி உடலில் காயும் போது, சருமத்தில் ஒருவித பிசுபிசுப்புத்தன்மையை ஏற்படுத்தும். அதோடு மிகுந்த அசௌகரியத்தையும் உணர வைக்கும்.

வியர்க்குரு
வியர்வை அளவுக்கு அதிகமாக வெளியேறும் போது, வியர்க்குரு வர ஆரம்பிக்கும். இதற்கு காரணம் வியர்வை உடலில் அப்படியே காயும் போது, அது சருமத்தில் உள்ள பாக்டீரியாக்களை உறிஞ்சி, வியர்க்குருவை உண்டாக்கும்.



Click it and Unblock the Notifications