Just In
- 12 min ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 1 hr ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 1 hr ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- 2 hrs ago 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
Don't Miss
- Sports புதிய விதியால் எல்லா டீம்க்கும் தலைவலி தான்.. கடைசி 2 ஓவரில் சொதப்பிவிட்டோம்.. குஜராம் கேப்டன் கில்
- News சமூக வலைதள பதிவிற்காக பாஜக மீது எப்ஐஆர் போட்ட இந்திய தேர்தல் ஆணையம்.. அதிர வைத்த காங்கிரஸ்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
24x7 ஸ்மார்ட் போனில் கேம் விளையாடிய 21 வயது இளம்பெண் பார்வை பறிபோனது!
24x7 ஸ்மார்ட் போனில் கேம் விளையாடிய 21 வயது இளம்பெண் பார்வை பறிபோனது!
சீனாவின் டொங்குன் பகுதியில் வசித்து வந்தவர் க்ஸியாவோ வு எனும் 21 வயது இளம் பெண். கஹானர் ஆப் கிங்க்ஸ் என்ற ஸ்மார்ட் போன் விளையாட்டை தொடர்ந்து இடைவிடாமல் 24 மணிநேரம் விளையாடி வந்த இவரது கண்பார்வை பறிபோன செய்தி உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Image Credit: Sun0769.com
ஹானர் ஆப் கிங்க்ஸ் என்பது ஒரு ஆன்லைன் ஸ்மார்ட் போன் விளையாட்டாகும். இந்த மல்டி ப்ளேயர் விளையாட்டில் மிகுந்த ஆர்வத்துடன் விளையாடி வந்தார் க்ஸியாவோ வு.
எதிர்பாராதவிதமாக அதிக நேரம் கண்களுக்கு மிகுந்த அழுத்தம் கொடுத்து ஸ்மார்ட் போன் திரை கண்டு ஆடியதன் காரணத்தால் இவரது கண்பார்வை பறிபோயுள்ளது.
மருத்துவமனை!
இவரை உள்ளூரில் இயங்கி வரும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு க்ஸியாவோ வு ஆர்.எ.ஓ எனப்படும் விழித்திரை இடையூறு பிரச்சனையின் கடை நிலையில் இருக்கிறார் என்பது அறியப்பட்டது.
ஆர்.எ.ஓவின் கடைநிலையில் இருக்கும் போது கண்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்க கூடாது என்றும், ஸ்மார்ட் போன் திரையை நீண்ட நேரம் கண்களுக்கு அழுத்தம் கொடுத்து பார்த்துக் கொண்டே இருந்த காரணத்தால் க்ஸியாவோ வு-ன் பார்வை பரி போயுள்ளது என்றும் மருத்துவர்கள் கூறினர்.
பைனான்ஸ்!
க்ஸியாவோ வு ஒரு பைனான்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். வேலை நேரம் முடிந்த பிறகு மற்ற வேளையில் ஹானர் ஆப் கிங்க்ஸ் என்ற விளையாட்டை விளையாடுவதில் அதிக ஆர்வம் காட்டியுள்ளார் க்ஸியாவோ வு. அதிக வேலை இல்லை எனில், அவ்வப்போது மொபைலை எடுத்து விளையாட ஆரம்பித்துவிடுவாராம்.
நாள் முழுக்க!
ஒருநாள் அதிகாலை ஆறு மணிக்கு துவங்கி மாலை நான்கு மணி வரை இதே விளையாட்டை விளையாடி வந்துள்ளார் க்ஸியாவோ வு. பிறகு கொஞ்சம் உணவு சாப்பிட்டுவிட்டு நள்ளிரவு ஒரு மணி வரைக்கும் அதே ஆட்டத்தை தொடர்ந்துள்ளார்.
அடிக்ஷன்!
சில சமயங்களில் சாப்பிடுவதற்கு மறந்தும் கூட க்ஸியாவோ வு அந்த விளையாட்டை ஆடிவந்துள்ளார். பெற்றோர் எத்தனையோ முறை கூறியும் நான் அவர்களது பேச்சை கேட்கவில்லை என இப்போது வருத்தப்படுகிறார் க்ஸியாவோ வு.
எட்டு மணிநேரம்!
சராசரியாக ஒருமுறை விளையாட ஆரம்பித்தால் எட்டு மணிநேரம் வரை இந்த விளையாட்டை விளையாடி வந்துள்ளார் க்ஸியாவோ வு. இதனால் இப்போது கண்பார்வை இழந்து தவிக்கிறார் க்ஸியாவோ வு.
கண்களுக்கு அதிக அழுத்தம்!
மிக குறுகிய இடைவேளையில் ஒரு பொருளை அதிக நேரம் பார்த்துக் கொண்டே இருப்பது கண்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கும்.
இதனால் தான் லேப்டாப், டெஸ்க்டாப், மொபைல் பயன்படுத்துவோர் அரைமணிநேரம் முதல் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை சீரான இடைவேளை எடுத்துக் கொள்ளுங்கள். கண்களுக்கு ஓய்வு அளியுங்கள் என நாங்கள் கூறுகிறோம்.
இன்று அதிகளவு கண் பிரச்சனை வருவதற்கும், தூக்கமின்மை ஏற்படுவதற்கும் இதுதான் காரணம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.