Latest Updates
-
கோலாப்பூரி முட்டை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
22 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் அதிசய முலாம்பழம் - இந்த பழத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
கர்நாடகா ஸ்டைல் சிக்கன் தொன்னை பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
பணக்காரர்களை விட இந்த குணம் உள்ளவர்கள்தான் சமூகத்திற்கு முக்கியமானவர்களாம் - சாணக்கிய தந்திரம் -
பூரி, சப்பாத்திக்கு ஏற்ற மட்டன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க! -
இன்றைய ராசிபலன் 19 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (19 July 2026-25 July 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது..! -
பரோட்டா கடை சிக்கன் சால்னா டேஸ்ட்டா இருப்பதன் ரகசியம் இதாங்க! -
ராகு-கேதுவின் பிடியில் இருந்து விடுபடும் 6 கிரகங்கள்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்! -
தினமும் சிறிது முருங்கை இலையை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
உடற்பயிற்சி செய்வதை நிறுத்தினால் மூளை எப்படியெல்லாம் பாதிக்கப்படும் என தெரியுமா?
உடற்பயிற்சி செய்வதை நிறுத்தினால், மூளை பாதிக்கப்படும் என்பது தெரியுமா? இங்கு உடற்பயிற்சி செய்வதை நிறுத்தினால் மூளை எப்படி பாதிக்கப்படும் என கொடுக்கப்பட்டுள்ளது.
உடற்பயிற்சி செய்தால் உடல் சுறுசுறுப்புடன் ஆரோக்கியமாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். உடற்பயிற்சியை ஒருவர் செய்வதை நிறுத்தினால், அதனால் உடலில் சோம்பேறித்தனம் அதிகரித்து, கொழுப்புக்கள் தேங்கி உடல் பருமனடையும் என்பதும் அறிந்த விஷயம் தான்.

ஆனால், உடற்பயிற்சி செய்வதை நிறுத்தினால், மூளை பாதிக்கப்படும் என்பது தெரியுமா? இங்கு உடற்பயிற்சி செய்வதை நிறுத்தினால் மூளை எப்படி பாதிக்கப்படும் என கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

மன அழுத்தம்
உடற்பயிற்சி செய்யும் போது மனநிலை மேம்படுத்தப்படும் மற்றும் உடற்பயிற்சி மன அழுத்தத்தால் ஏற்படும் மன இறுக்கத்தில் இருந்து பாதுகாப்பளிக்கும். ஆனால் உடற்பயிற்சி செய்வதை நிறுத்தும் போது, மனநிலையை மேம்படுத்தும் செயல் இல்லாமல், அதனால் மனம் ஒருவித பாரத்துடன் இருக்கும்.

ஞாபக சக்தி குறையும்
மேரிலாண்ட் பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், உடற்பயிற்சி செய்வதை நிறுத்தும் போது மூளைக்கு பாயும் இரத்த ஓட்டம், குறிப்பாக ஞாபக சக்திக்கு காரணமான மூளைப் பின்புற மேடுப் பகுதிக்கு இரத்த ஓட்டம் செல்வது தடைப்பட்டு, நினைவுத் திறன் குறைபாடு ஏற்படுவதாக கூறுகின்றனர்.

மனதை ஒருமுகப்படுத்துவது
அளவான உடற்பயிற்சி மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து, ஒரு செயலில் மனதை ஒருமுகப்படுத்த முடியும். ஆனால் உடற்பயிற்சி செய்வதை நிறுத்தும் போது, அதனால் மனதை ஒருமுகப்படுத்த முடியாமல் அவஸ்தைப்படக்கூடும்.

புத்திக்கூர்மை
பின்லாந்து பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், உடற்பயிற்சி செய்வதை நிறுத்தும் போது புத்திக்கூர்மை குறைவது தெரிய வந்துள்ளது.

குறிப்பு
உடற்பயிற்சி உடலின் ஒவ்வொரு உறுப்பின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். ஆகவே தினமும் தவறாமல் குறைந்தது 10 நிமிடமாவது உடற்பயிற்சி செய்து, உடல் ஆரோக்கியத்தை ஊக்குவித்து, நோய் நொடியின்றி வாழுங்கள்.



Click it and Unblock the Notifications