Latest Updates
-
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்..
நீங்கள் தூங்கும் போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?
இரவில் நன்றாக ஆழந்த தூக்கம் தூங்குவது ஆரோக்கியமான உடலுக்கு சான்று. அப்போதுதான் மூளை நிறைய எனர்ஜியுடன் முழித்திருக்கும். மற்ற உறுப்புகள் அமைதியாய் களைத்து தூங்கிக் கொண்டிருக்கும்.
இந்த நேரத்தில் மூளையில் உண்டாகும் கழிவுகளை எல்லாம் மூளை நிதானமாய் வெளியேற்றிக் கொண்டிருக்கும். அதனால்தான் நீங்கள் அடுத்த நாள் காலை மிகவும் புத்துணர்ச்சியோடு செயல்படுகிறீர்கள்.

தூங்காமலே இருந்தால், மூளையின் செயல்கள் ஒழுங்காக நடக்காது. பின் அடுத்த நாள் காலை சோர்வுடனே இருப்பீர்கள். ஆகவே குறைந்தது 7-8 மணி நேரம் தூங்க வேண்டும்.
தூங்காமலே இருப்பது ஒரு வகையென்றால், இன்னும் சிலர் எப்போதும் தூங்கிக் கொண்டேயிருப்பார்கள். அல்லது தூக்கத்தில் நடப்பார்கள், பேசுவார்கள். அவர்களைப் பற்றி சில விஷயங்களை நாம் தெரிந்து கொள்ளலாமா?
ஸ்லீப்பிங் பியூட்டி ஸிண்ட்ரோம் :
இது பொதுவாக 10 வயதிற்கு மேலே உள்ள டீன் ஏஜ் வயதினருக்கு ஏற்படும். நாள் பூராவும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் தூங்கிக் கொண்டேயிருப்பார்கள். குறைந்தது 20 மணி நேரமாவது தூங்குவார்கள் . இது மன நல பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு ஏற்படுவது. ஆழ்மனதில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலோ, அல்லது தாங்க முடியாத மனபாதிப்பு அடைந்திருந்தாலோ, இவ்வகையில் தூங்கிக் கொண்டிருப்பார்கள்.
செக்ஸோம்னியா :
இது மிகவும் அரிதான தூக்க வியாதி . தூக்கத்திலேயே பாலுணர்வு தூண்டப்பட்டு, அதில் ஈடுபடுவது போலிருப்பார்கள். இது இயல்பாக இருப்பவர்களுக்கு வராது. ஆழ்ந்த மன வியாதிகளின் வெளிப்பாடாகவும் இருக்கக் கூடும்.
தூக்கத்தில் சிறு நீர் கழித்தல் :
குழந்தைகளில் படுக்கையில் சிறு நீர் கழிப்பது சாதாரணமானது. ஆனால் சிலர் வளர்ந்த பின்னும் படுக்கையில் சிறுநீர் கழிப்பார்கள். இதற்கு காரணம் நிறைய உண்டு. சிறு நீரக கற்கள் உருவாவது, சிறு நீரகத் தொற்று, அடிக்கடி பதட்டப்படுபவர்கள், மன அழுத்ததினால் பாதிக்கப்படுபவர்கள் தூக்கத்தில் சிறு நீர் கழிப்பார்கள்.
தூக்கத்தில் பேசுவது :
சிலர் தூங்கும்போது, தூக்கத்தில் உளறுவார்கள், அழுவார்கள், திடீரென கத்துவார்கள். சிறு குழந்தையாக இருக்கும் போதென்றால் பிரச்சனையில்லை. ஆனால் வளர்ந்தவுடன் இவ்வாறே இருந்தால் அவசியம் மருத்துவரை அணுக வேண்டும். இது உடல் நலம் சம்பந்தபட்ட பாதிப்பாக இருக்கும்.
தூக்கத்தில் நடப்பவர்கள் :
இதைப் பற்றி பரவலாக நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அவ்வாறு நடந்து கொள்பவர்களை பார்த்திருப்பது அரிதாக இருக்கும். தூக்கத்தில் நடப்பதற்கு காரணம், மன அழுத்தம், குடிப்பழக்கம், பதட்டத்தன்மை, மன நல பாதிப்பு ஆகியவைகளைச் சொல்லலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications



