Latest Updates
-
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்பத் தலைவரிடம் இருக்க வேண்டிய 4 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட எத்தனை இருக்கு? -
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்..
ஆஸ்துமா நோயை கட்டுக்குள் வைக்கும் பரிகாசனா !!
சுவாசப் பாதை எந்தவித தடங்களுமின்றி சீராக இருந்தால் , நுரையீரல் ஆக்ஸிஜனை பெற்றுக் கொள்ளும். இதனால் மற்ற பகுதிகளும் ஆக்ஸிஜனைப் பெற்று தங்கள் இயக்கங்களை செய்யும்.
ஆனால் அவற்றில் தூசு, மற்றும் தொற்று ஏற்படும்போது, நோய் எதிர்ப்பு செல்கள் ஜெல் போன்று சுரக்கிறது. அதுதான் சளி. இவை சுவாசப்பாதை அடைக்கும்போது, சுவாசம் தடைபெறுகிறது.

இதனால் இருமல், மூச்சிரைப்பு, மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை ஏற்படுகிறது. இவை ஆஸ்துமாவின் அறிகுறி. இது குழந்தைகளிலிருந்து பெரியவர்கள வரை யாருக்கும் உண்டாகும். குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு எளிதில் கிருமிகள் தாக்கும்.
ஆஸ்துமாவை குணப்படுத்த முடியாவிட்டாலும், அதனை கட்டுக்குள் வைத்திருக்க யோகாவில் முடியும். யோகாவிலுள்ள பல்வேறு ஆசனங்கள் ஆஸ்துமாவை கட்டுக்குள் வைக்கின்றன.
குறிப்பாக குளிர் மற்றும் மழைக்காலத்தில் ஆஸ்துமாவினால் உண்டாகும் தீவிர பிரச்சனைகளை யோகாவினால் தடுக்க முடியும். அந்த ஆசனங்களில் ஒன்றுதான் பரிகாசனா.
பரிகாசனா:
பரிகாசனாவிற்கு தடுப்பாசனா என்று இன்னொரு பெயரும் உண்டு. எப்படி செய்வது என பார்க்கலாம்.
முதலில் தடாசனாவில் நின்று கொள்ளுங்கள். ஆழ்ந்து மூச்சை இழுத்து விட்டவுடன், கீழே முட்டி போட்டு அமருங்கள். முதுகு நேராக வைக்க வேண்டும். இரு தொடைகளும் சமமாக இருக்க வேண்டும். இப்போது, வலது காலை பக்க வாட்டில் நீட்டிக் கொள்ளுங்கள்.
பின்னர் வலதுகையை நீட்டி வலது காலை தொட்டவாறு வலது பக்கம் சாயுங்கள். இப்போது இடது கையை தலைக்கு மேலே உயர்த்தி தலையை ஒட்டியவாறு நீட்டிக் கொள்ளுங்கள்.
இந்த நிலையில் அரை நிமிடம் இருக்கவும். பின்னர் இயல்பு நிலைக்கு வந்து, இப்போது காலை மாற்றி இடது காலுக்கும் இதே போன்று செய்யவும்.
இது போல் காலை மாலை செய்து வந்தால், சுவாசப்பாதை சீராகும். நோய் எதிர்ப்பு செல்கள் பலமாகும்.
பலன்கள் :
பாத முட்டிகளை பலப்படுத்தும். தோள்பட்டைகள் வலுவாகும். சுவாசத்தை சீராக்கும். அடிவயிற்றில் உள்ள உறுப்புகளை தூண்டும். முதுகு, இடுப்பிற்கு நெகிழ்வுத்தன்மையை அளிக்கிறது.
குறிப்பு :
முட்டு வலி, தோள்பட்டையில் காயம் இருப்பவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


